Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த ராஜபக்‌ஷவும் அவர் வெளிக் கிளப்பும் வெள்ளை யானைகளும் - - வி.ஏ.கே.ஹரேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்‌ஷவும் அவர் வெளிக் கிளப்பும் வெள்ளை யானைகளும் - - வி.ஏ.கே.ஹரேந்திரன்
30 மார்ச் 2013

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்‌ஷவின் சொந்த கிராமமான ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மத்தல பிரதேசத்தில் சீனாவின் நிதியுதவியுடன் பன்னாட்டு விமான நிலையமொன்று திறக்கப்பட்ட செய்தியே கடந்த வாரத்தில் இலங்கை நாளிதழ்களில் பிரதான இடத்தைப் பிடித்திருந்தன. இந்த விமான நிலையத்தைத் திறந்துவைத்து உரையாற்றிய அதிபர் மகிந்த ராஜபக்‌ஷ, சர்வதேசத்திற்கு மற்றுமொரு கதவு திறக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.

எனினும், இந்த விமான நிலையத்தின் ஊடாக குறைந்தது அடுத்த 20 வருடங்களுக்கேனும் வருமானம் ஈட்ட முடியாது என பொருளாதார வல்லுநர்கள் கடிந்துகொண்டுள்ளனர். ஐ.நா., சர்வதேச அழுத்தம் எனக் கூறி இனவாதத்திலும் அபிவிருத்தி, பொருளாதாரம் என்ற கவர்ச்சியான வார்த்தைகளினால் பல வெள்ளை யானைகளை மகிந்த அரசாங்கம் கிளப்பிவிட்டுள்ளது.

கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது இலங்கை மக்களின் வாழ்க்கைச் செலவு பல மடங்காக அதிகரித்துள்ளது. எனினும், இதற்கேற்றார் போல் இதுவரை சம்பள உயர்வுகள் வழங்கப்படாததால் மக்கள் பெருத்த நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. ஏற்றுமதிகள் குறைவடைந்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் பொருளாதார நெருக்கடிகளினால் இலங்கையின் ஏற்றுமதியில் பாரிய அடி வீழ்ந்துள்ளது.

இதனைத்தவிர, தமக்கு ஒன்றும் பாதிப்பு இல்லையென கூவித்திரிந்த போதிலும், ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தியதால் இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய நீண்டகால நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன்களைப் பெற்று, பொருளாதாரத்தை சீர்செய்துவிடலாம் என்ற சில பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைக்கமைய மகிந்த அரசாங்கம் முன்னதாக கடன் பெற்றுக்கொண்டது. கடுமையான நிபந்தனைகளுடன் கடன்களைப் பெற்றுக்கொண்ட போதிலும், குறித்த பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை இலங்கை தவறவிட்டுள்ளது.

இறுதியாக சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசாங்கம் கடன்கோரியிருந்த போதிலும், முன்னதாக வழங்கப்பட்ட இலக்குகளை அடைந்தால் மாத்திரமே அடுத்த கட்ட கடன்கள் குறித்து யோசிக்க முடியும் என சர்வதேச நாணய நிதியம் திடமாக கூறிவிட்டது. இதனால், முன்னதாக விதித்திருந்த கட்டுப்பாடுகளையும் தற்போது மகிந்த அரசாங்கம் மீறிச் செயல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக சைப்பிரஸ் நெருக்கடியும் இலங்கையின் பொருளாதாரத்தில் கல்லைத் தூக்கிப் போட்டுள்ளது. இங்கு இலங்கை மேற்கொண்டிருந்த முதலீடுகளினால் மிகப் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக பலத்த சவாலை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசாங்கத்தின் நெருங்கிய தோழனான சீனாவும் இலங்கை அரசாங்கத்தை சிக்கிலில் தள்ளியுள்ளது. இறுதியாக இலங்கை அரசாங்கம் கேட்டிருந்த கடனை சீனா வழங்காதது இலங்கைக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

இதற்கு மேலதிகமாக மற்றுமொரு உற்ற நண்பனான ஈரானும் இலங்கையைக் கைவிட்டுள்ளதாக அறியமுடிகிறது. உதவிகள் சிலவற்றைச் செய்யுமாறு இலங்கை அரசாங்கம் இறுதியாக கேட்கப்பட்டிருந்தபோதிலும், தம்மால் தற்போதுக்கு எவ்வித உதவிகளையும் செய்யக்கூடிய நிலையில் இல்லையென ஈரான் அரசாங்கமும் கைவிரித்துவிட்டது.

இந்த எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடிந்ததன் காரணமாகவே மகிந்த ராஜபக்‌ஷ அண்மையில் ஜப்பானுக்கு விரைந்திருந்தார். இதிலும் எதிர்பார்த்தளவு இல்லாவிட்டாலும் ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு தற்போதைக்கு ஓரளவு உதவி கிடைத்துள்ளது.

''யுத்தத்தில் வெற்றிபெற்றுவிட்டோம்'' அல்லது அபிவிருத்தி அல்லது சர்வதேசத்தின் போர்க் குற்றச்சாட்டுக்கள் என்ற சுலோகங்கள் மகிந்த அரசாங்கத்தை சிங்கள மக்கள் மத்தியில் எத்தனை நாளைக்கு காப்பாற்றும் என்பது தெரியாததால் மற்றுமொரு வியூகத்தை மகிந்த அரசாங்கம் வகுத்துள்ளதை அண்மைய சம்பவங்கள் நன்கு உணர்த்துகின்றன.

தற்போதைய அரசாங்கத்தின் மீது சிங்கள மக்களுக்கு அதிருப்தி வராமல் இருப்பதற்கும், சிங்கள மக்களை திசை திருப்பி, உணர்வுபூர்வமான, இனரீதியான கோடொன்றை வரைந்தால் மாத்திரமே தம்பக்கமுள்ள குறைகளை மறைத்துக்கொண்டு ஆட்சியை நீடிக்கலாம் என்பதை மகிந்த அரசாங்கம் கணக்கு போட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இதில் மிக அண்மைய பதிவாக கடந்த 28ஆம் திகதி இரவு கொழும்பு, பெப்பிலியான என்ற பிரதேசத்திலுள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான முன்னணி வர்த்தக நிலையமொன்று தாக்கப்பட்ட சம்பவம் சிறந்த உதாரணமாகும்.

இந்தத் தாக்குதலை அரச ஆதரவு அமைப்பான பொதுபல சேனாவே நடத்தியிருந்தது. காவல்துறை கைக்கட்டி பார்த்துக் கொண்டிருக்க காவி உடை அணிந்தவர்கள் கற்களைக் கொண்டுத் தாக்கியவுடன் கூடவே வந்த கும்பல் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். இவர்களைத் தடுக்கக் கூடாது என காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டதா? அல்லது அரசாங்கத்தின் உச்ச ஆதரவைப் பெற்ற இந்த அமைப்பு மீது கைவைத்தால் வீண் வம்பு என காவல்துறை வேடிக்கைப் பார்த்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிறுமைபான்மையினரான முஸ்லிம்கள் மீது தற்போது கட்டவிழ்த்துவிடப்படுகின்ற, கட்டவிழ்த்துவிடுவதற்கு திட்டமிட்டுள்ள செய்திகளை, சம்பவங்களை ஊடகங்களில் அப்பட்டமாக பேசுவது மிகப்பாரிய விளைவுகளை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சமும் இருக்கிறது.

ஆனால், பேசாமல் இருந்தால் சிறுபான்மையினர் மீது சிங்கள ஆட்சியாளர்கள், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முன்னெடுக்கும் இந்த கீழ்த் தரமான அரசியல் செயல்பாடுகள் இலங்கை வரலாற்றில் மீண்டுமொரு கசப்பான, கறுப்பு அத்தியாயத்தை பதிவுசெய்துவிடுமோ என்ற அச்சமும் இருக்கிறது.

- வி.ஏ.கே.ஹரேந்திரன்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90214/language/ta-IN/article.aspx

 தற்போதைய அரசாங்கத்தின் மீது சிங்கள மக்களுக்கு அதிருப்தி வராமல் இருப்பதற்கும், சிங்கள மக்களை திசை திருப்பி, உணர்வுபூர்வமான, இனரீதியான கோடொன்றை வரைந்தால் மாத்திரமே தம்பக்கமுள்ள குறைகளை மறைத்துக்கொண்டு ஆட்சியை நீடிக்கலாம் என்பதை மகிந்த அரசாங்கம் கணக்கு போட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

 

 

இதுதான் தோற்றுப்போன மகிந்த சிந்தனையின் யதார்த்தம் - வங்குரோத்து நிலைமையை நோக்கி செல்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.