Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இடைக்கால நிர்வாக சபை வேண்டும் இந்திய நாடாளுமன்ற குழுவிடம் வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20130409-165506.jpg

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப் படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது இதனைத் தடுப்பதற்கு இலங்கை அரசியல் அமைப்புக்கு அப்பாற்பட்டு சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் ஒரு இடைக்கால நிர்வாக சபையை இந்திய முன்னின்று உருவாக்கவேண்டும் இவ்வாறு

உருவாக்கப்பட்ட பின்னரே இறுதித் தீர்வு குறித்து தீர்மானிக்க முடியும் என்று இந்திய நாடாளுமன்ற குழவினரிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

 

யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற குழவினருடன் சந்திப்பின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

 

இச்சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,

 

இலங்கையில் தமிழ் மக்களை இல்லாதொழிலக்கும் நடவடிக்கை அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றது இதனை தடுத்து நிறுத்த வேண்டிய தேவை இந்தியாவிற்கு இருக்கின்றது.

 

விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்திய பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. உயிர் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இங்கு இன அழிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இந்த அழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய பொறுப்பும் இந்தியாவிற்கு இருக்கின்றது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

13 ஆவது திருத்தம் மாகாண சபை முறை போன்றவற்றையே இந்தியா வலியுறுத்தி வருகின்றது இந்த 13 ஆவது திருத்தம் வெறும் ஏமாற்றத்தைக்கொடுக்கும் விடயமே தவிர அதனை ஒரு தீர்வாக எடுத்துக்கொள்ளள முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அரசின் இ;வ்வாhறான இன அழிப்பை தடுக்கவேண்டும் என்றால் இலங்கை அரசியல் அமைப்புக்கு அப்பாற் ஒரு நிலை மாற்று நிர்வாகம் ( இடைக்கால நிர்வாகம்) உருவாகவேண்டும். அதனை இந்திய முன்னின்று இதனை செயற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

தான் முன்வைத்த இந்த கோரிக்கையை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

இந்த சந்திப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்தசங்கரி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், தமிழர் விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, தமிழ் தேசிய மக்கள் முண்னணி பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரகுமார் ,தமிழரச கட்சியின் துணைச் செயலாளர் சீ.வி.கே. சிவஞானம், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

http://tamil24news.com/news/?p=57444

மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களான தா தே கூட்டமைப்பினரை ஹிந்தியவாதிகள் கேட்டனராம் உங்களின் நிலைப்பாடை பயமில்லாமல் தெளிவாக கூறுமாறு.

வடக்கில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு மற்றும் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தி வடக்கு கிழக்கை இணைத்து சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால மாகாண அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்று த.தே.கூ  பிரதிநிதிகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.  ( இது தான் 13வது திணிப்பு) 

 

தமிழ் தேசிய மக்கள் முண்னணி பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவில் சமூகப் பிரதி நிதிகள், .மற்றும் சில அமைப்புகளின் பிரதிநிதிகள் சார்பில் இந்தசந்திப்பின் போது, இலங்கை அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு எவ்வித பலனும் கிடைக்காது என்றும், அந்த சட்டத் திருத்தத்தின் கீழ் அமைக்கப்படுகின்ற மாகாண சபை அர்த்தமற்றதாக இருக்கும் என்றும் அவர்களிடம் தெளிவாக  விளக்கப்பட்டதுடன், மாற்றாக சர்வதேசத்தின் நேரடியான கண்காணிப்புடனான ஓர் இடைக்கால நிர்வாகம்  கோரப்பட்டது.

 கூட்டம் முடிந்த்த கையுடன் தமிழ்த் தேசியம் பேசும் கூட்டமைப்பினர் தமிழ் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில், சர்வதேசத்தின் நேரடியான கண்காணிப்புடனான ஓர் இடைக்கால நிர்வாகம் தங்களால் வலியுறுத்தப்பட்டதாக ஓர் செய்தியை பரவவிட்டுள்ளனர். இது உண்மைக்கு புறம்பான ெய்தியென தமிழ் தேசிய மக்கள் முண்னணி அறிவித்துள்ளது.

 

தமிழ்த் தேசியம் பேசும் கூட்டமைப்பினர், தமிழர்களால் தொடர்ச்சியாக அவாவப்படும் தமிழர்களின் போராட்டத்துக்கான இறுதித் தீர்வை ஹிந்திய அமைச்சர்களிடம் ஆனித்தரமாக முன்வைக்கத்தவறுவது விசனத்துக்கும் கண்டனத்துக்கும் உரியது. தாயகத்தில் தமிழர்களின் அறவழிப் போராட்டமும், ஆயுதப்போராட்டத்தின் மூலம் தமிழர்கள் செய்த அளப்பரிய உயிர்த் தியாகங்களும்,இன்று கோடிக்கணக்கான தொப்பிள்கொடி உறவுகள் புரியும் தர்ம யுத்தமும்,

ஒன்றுமே அற்ற 13வது திணிப்பை தமிழர்கள் ஏற்பதற்காகவல்ல. 

இச்சந்திப்பில் ஹிந்திய அமைச்சர்களே 13வது திணிப்பை தமிழர்களின் தலையில் சுமத்த முன் வராத நிலையில் த.தே கூட்டமைப்பு தமிழர்களின் அபிலாசைகளை கூறத்  தயங்கி  வாய்முடி மௌனிகளாக இருப்பதன் சூத்திரம் தான் என்ன?

த.தே.கூ இதுவரை எக்காலத்திலும் தனிநாடுக்கான காரணங்களை ஹிந்தியாவிடம் முன்வைக்கவில்லை என்பது ஹிந்திய அரசியலாளர்களின் வாதமாகும். தமிழர் மீதான பாரிய  இனவழிப்பின் பின்பும் சிங்கள பௌத்த பாசிச  இராசாக்களின் கோவணத்தில் தான் பிடித்துத் தொங்குவோம் என அடம் பிடிக்கும் தமிழ் தேசியவாதிகளின் இராசதந்திரம் உலக மகா கேவலம்.

 

 காலம் கனிவாகவுள்ள இவ் வேளையில்  தமிழர்களுக்கு உரிய உரிமைகளை, அபிலாசைகளை சொல்லக்கூடத்  தயங்குபவர்கள், தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகள் எனத் தம்மை அடையாளப்படுத்துவது தமிழர்களுக்கு செய்யும் கூட்டுத் துரோகத்தைத் தவிர வேறு ஏதாகும்?

இப்போது கூடத் தமிழர்கின் உணர்வை பிரதிபலிக்க முடியாத கூட்டமைப்பு எப்போது  சூரியப்புயல் வரும்அப்போது தான்  பிரதிபல்லிப்போம் என காத்திருக்கிறதா?

பெருந்தகை ஐயா மாவை சேனாதிராஜாஅவர்கள்,த.தே.கூ மார்ச் 20ம் பதிவு செய்யப்படும் என சுவிஸ் இல் தமிழர்களின் வாயை அடைக்க கொடுத்த வாக்குறுதி காலாவதியாகி, மகிந்த இராசாக்களின் வாக்குறுதிகள் போல்  உடன் கட்டை ஏறி விட்டது. 

இதுதான் சிங்கள பௌத்த பாசிசத்திடம் தமிழர் தேசியக்  கூட்டமப்பு கற்றுக்கொண்ட பாடங்களும்  தமிழ்த் தேசியத்தை நல்லடக்கம் செய்வதற்கான  அறிகுறியுமாகும். 

 

கட்டையில் போகும் காலத்தில் கூட இனமானத்தை விட கதிரையும் பதவியும் தான் முக்கியம் என அடங்காமல் ஆடுபவர்கள்  பாக்கு நீரிணையின் இரு புறமும்...

 

 

தமிழ்கள் தொடர்ச்சியாக ஏமாறவும் மாட்டார்கள், அடிபணியவும் மாட்டார்கள்.

இதைத்தான் தமிழ்த்தேசியத்தின் ஆன்ம வழிகாட்டியிடம் இருந்து தமிழர் நாம் கற்றுக்கொண்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2003 டில இருந்து நகரவே இல்ல. யப்பானில வச்சும் இதை தான் கேட்டம் இப்பவும் அதே தான்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.