Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீதான தடையால் கனடிய தமிழர்கள்...

Featured Replies

புலிகள் மீதான தடையால் கனடிய தமிழர்கள் செயற்பாடுகளுக்குத் தடை எதுவும் இல்லை: கனடிய அமைச்சர் ஸ்டொக்வெல் டே

கனடாவில் தமிழர்கள் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்தலாம் என்று கனேடிய பொதுசனப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டொக்வெல் தெரிவித்துள்ளார்.

கனேடிய பல்கலாச்சார வானொலியான சி.எம்.ஆர். பண்பலை சேவை 101.3 க்கும், ரி.வி.ஐ. தொலைக்காட்சிக்கும் அவர் அளித்த நேர்காணலில்,

கனடாவில் மாவீரர் நாள் உள்ளிட்ட நிகழ்வுகளை நடாத்துவதற்கு விடுதலைப்புலிகள் மீதான தடையால் தடங்கல் ஏற்படுமா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், கனடாவில் பல்லின பல்கலாச்சார மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்பதற்கான அடிப்படையே, அவர்களது வளர்ச்சியையும் கலை கலாச்சார முன்னேற்றத்தையும் கனடிய அரசு ஆதரிக்கிறது என்பதனால்தான் என்றும்,

தமிழர்கள் எத்தகைய நிகழ்வுகளையும் இதர சமூகங்களைப் போல நடாத்துவதற்கு உரிமையுடைவர்கள் என்றும் தெரிவித்தார்.

தடையின் பின்னான காலத்தில், தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்தவர்கள் விழாக்களிற்கான மண்டபங்களைப் பெறுவது போன்ற சில விடயங்களில் சில தடங்கல்களை எதிர்கொண்டார்கள் என்பது பற்றி செவ்வியாளர் கேள்வியொன்றை முன்வைத்த போது,

கனடியர்கள் அனைவருக்கும் உள்ள உரிமை தமிழர்களுக்கும் உண்டு என்றும் அவ்வாறு இத் தடையின் பின் தமிழர்களிற்கு ஏதாவது முட்டுக்கட்டைகள் அல்லது நெருக்கடிகள் ஏற்பட்டிருந்தால் அந்த விவரங்களை அரசு அறிய விரும்புவதாகவும் அதனை நேர்த்தி செய்ய விரும்புவதாகவும் ஸ்ரொக்வெல் டே குறிப்பிட்டார்.

...

.....

இத் தடையால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாடுகளுக்கு எதுவித பாதிப்பும் இல்லை என்பதை மற்றொரு கேள்விக்கான பதிலில் தெளிவாக விளக்கிய அமைச்சர்,

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு நிதி உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் தமிழர்கள் செய்யலாம் என்பதை அறுதிபடத் தெரிவித்தார்.

http://www.eelampage.com/?cn=27496

புனர்வாழ்வுக்கழகத்திற்கு உதவலாம் என்றால் அதன் மனிதநேயப்பணிகள் திருப்த்திகரமாக இருக்கிறது. அடுத்த கேள்வி ஸ்டொக்வெல் நோக்கி கேட்கப்பட்டிருக்க வேண்டும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தை ஒரு மனிதாபிமான தொண்டர் நிறுவனமா அங்கீகரிப்பீர்களா? அதற்கு கனேடிய தமிழர்கள் என்ன முயற்ச்சிகள் செய்ய வேண்டும்.

தடை என்ற மாயைக்குள் முடங்கி இருக்காது உங்கள் தேசிய கலாச்சார நிகழ்ச்சிகளை சமஉரிமையோடு முன்னெடுக்க நல்லதெரு சந்தர்ப்பம்.

ரிவிஅய் இக்கும் சிஎம்ஆருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள். கடசியா உருப்படியா ஒரு காரியம் செய்திருக்குறியள். இப்படியான கடமைகளை தொடர்ந்து செய்யுங்கோ உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும். ஆங்கில செய்திப்பிரவு ஒன்றை உருவாக்கி கனேடடிய அரசியல் வாதிகள் மனித உரிமை அமைப்புகள் உயர்கல்வித்துறையினர் ஊடகவியலாள்கள் என்று பலரையும் நேர்காணல் செய்து கலந்துரையாடல்களிற்கு வரவளைத்து இந்த தொடரவேண்டும். எமது ஊடகங்கள் நாம் வாழும் நாட்டு நிர்வாகங்கள் அமைப்புகள் பிரமுகர்களோடு அந்த நாட்டு மொழிகளில் உறவாடுவது மிக அவசியம். மொட்டி ஒலி செல்வி சினமா என்று வியாபாரத்தை ஒட்ட நினைத்து தான் இந்த கேடு. இது நல்ல தொரு முன்னேற்றகரமான செயல். இது தொடரவேண்டும் நிரந்தரமாக கிழமை தோறும் நேரம் ஒதுக்கி இவ்வாறாக ஆங்கில நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.

கனடாவில் தடையை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு எந்த விதமான அரசியல்/சமுக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என்றொரு தோற்றப்பாடு இருந்தது. அமைச்சரின் இந்த பேட்டி மூலம் உண்மை அதுவல்ல என்று தெளிவு படுத்தப்பட்டிருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.