Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கிலிய மன்னன் அறிஞர் ஆ முத்துத்தம்பிப்பிள்ளையின் பார்வையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலிய மன்னன் அறிஞர் ஆ முத்துத்தம்பிப்பிள்ளையின் பார்வையில்

 

 

 

யாழ்ப்பாண மன்னன் குணவீர சிங்கையாரியாரின்  மகன்  

யாழ்ப்பாண மன்னன் கனகசூரிய சிங்கையாரியார் இவரின்   மகன்  

பரராச சேகரன் இவரின்   சகோதரன்  

சகராச சேகரன்  - (இளவரசன்)

 

பரராச சேகரன் இராச லக்ஸ்மி பிள்ளைகள்  

சிங்கபாகு ;பண்டாரம்

 

பரராச சேகரன் வள்ளியம்மை பிள்ளைகள்

பரநிருப சிங்கன்

 

பரராச சேகரன் மங்கத்தம்மாள் பிள்ளைகள்  

சங்கிலியன் , பரவை (மகள் )

 

சங்கிலியன் நல்ல வீரனாக வளர்ந்து வரும் நிலையில் ஆட்சி அதிகாரம் மீது அவனுக்குஆசையுண்டானது . வயதில் மூத்தவர்கள் இருக்கும் வரையில் தனக்கு அதிகாரம் கையில் கிடையாது என எண்ணி சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க முனைந்தான்:

 

மன்னனுடைய மூத்த  மகனான சிங்கவாகுவை யாரும் சந்தேகம் கொள்ளாதபடி 

நஞ்சூட்டிக் கொன்றான் .

மகனை இழந்த சோகத்தில் பரராச சேகரன்  தனது இரண்டாவது மகனாகிய 

பண்டாரத்தை அரசனாக்கித் தான் யாத்திரை சென்றான் 

 

யாத்திரையின் போது பரராச சேகரனுடன் சென்ற சங்கிலியன் ஒருமுறை 

சோழ மன்னனை எதிர்கொள்ள நேரிட்டது.

சோழமன்னனுக்குத் தகுந்த மரியாதை அளிக்காதபடியால் சிறையிலிடப்பட்டான்

சங்கிலியனை விடுவிக்கச்   சென்ற பரராச சேகரனும் சிறை பிடிக்கப்பட்டதை 

அறிந்த மூன்றவது மகன் பரநிருப சிங்கன் படையுடன் சென்று தன்  தந்தையையும் 

தம்பி சங்கிலியனையும் சிறைமீட்டான் .

 

அதற்கு நன்றியாக பரநிருப சிங்கனுக்கு கல்வியங்காடு ,சண்டிலிப்பாய்,அராலி,அச்சுவேலி 

உடுப்பிட்டி ,கச்சாய்,மல்லாகம் என்ற ஏழு கிராமங்களையும் பண்டாரத்தின் அரசின் கீழ் 

இருந்து ஆட்சி செய்ய அன்பளிப்பாக வழங்கினான் .

இந்த விடயம்  ஆட்சி மீது ஆசை கொண்ட சங்கிலியனுக்கு இன்னும் 

ஆத்திரத்தைக் அதிகரிக்கச் செய்தது.

 

பர நிருப சிங்கன் ஒரு சிறந்த மருத்துவன்.

வேற்று தேசத்து மன்னர்கள் அவன் திறமையைக் கேட்டறிந்து அவனை அழைத்து 

மருத்துவம் பெற்றுக்கொள்வர். அப்படி ஒருசமயம் அவன் ஊரில் இல்லாத சமயம் பார்த்து 

சங்கிலியன் தன்  தமையனான மன்னன் பண்டாரத்தை வாளால் வெட்டிக் கொன்றுவிட்டு

வயது முதிர்ந்த தன்  தந்தையை அச்சப்படுத்தி வைத்திருந்தான் 

முடி சூடாமல் ஆட்சி அதிகாரத்தைத் தன்  கையில் எடுத்துக் கொண்டான்.

 

பரநிருப சிங்கன் திரும்பி வந்ததும் தந்தை மூலம் நடந்ததை அறிந்து 

சங்கிலியனுடன் மோதச் செல்ல சங்கிலியன் அவனுக்கு ஆசை வார்த்தைகாட்டி 

அவனைச் சமாதானப்படுத்தி தான் பெயருக்குமட்டும் தான்  அரசன்

என் முதன்மந்திரியாக இருந்து நீதான்  நாட்டை ஆளவேண்டும் என்றான்.

 

பின்னர் படைகளையும் படைத்தளபதியையும் தன்வசப்படுத்திக் கொண்டு  

பரநிருப சிங்கனை அதிகாரத்தில் இருந்து ஒதுக்கிவிட்டான்.

தன் கையில் முழு அதிகாரத்தினையும் எடுத்துக்கொண்ட மன்னன் 

சிலகாலங்களில் அதிகார ஆணவத்தில் ஊறித் திளைத்தான்.

மக்களின் நலன்களில் அக்கறையற்றவனாகவும் மிகவும் கடுமையானவனாகவும் 

போர்த்துக்கீசரின்  வருகையினுடன் மதம் மாறுபவர்களைக் 

கொலை  செய்யும் ஒரு அரசனாகவும் இருந்தான்.

 

மக்கள் அதிகாரம் அற்ற நிலையில் இருந்த பரநிருப சிங்கனிடம் முறையிட்டனர்.

வஞ்ச்சிக்கப்பட்ட நிலையில் இருந்த பரநிருப சிங்கனும் 

அவன் மகன் பரராச சேகரனும்  தங்களுக்கு அவப்பெயர் வந்தாலும் பரவாயில்லை 

மக்கள் நலனுடன் வாழவேண்டும் என்ற உந்துதலால் ஏற்கனவே போர்த்துக்கீசருக்கு  

உளவு பார்த்துப் பதவிகளைப் பெற்றுக் கொண்ட காக்கைவன்னியனின் உதவியுடன் 

போர்த்துக்கீசரை யாழ்ப்பாணத்திற்கு வர்த்தகர் வேசமிட்டு வரவழைத்துச்  

சங்கிலியனை நட்பாடிக்  கைது செய்ய வைத்தார்கள்.

 

சங்கிலியனை  காளிகோவிலின் வீதியில் பல குற்றங்கள் சாட்டப்பட்ட நிலையில் 

சிரச்சேதம் செய்தனர்

அதன்பின்னர் பரநிருப சிங்கனும் பரராச சிங்கராசாவும் போர்த்துக்கீசரின் கீழ் 

அவர்களுக்குத் தகுந்தவாறு மக்களின் நலன்களையும் பேணி யாழ்ப்பாணத்தை ஆண்டு வந்தார்கள்.

இத்தனை தகவல்களும் தமிழ் அறிஞர் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை 

அவர்களின் யாழ்ப்பாணச்சரித்திரம் எனும் நூலில் இருந்து பெறப்பட்டவை

 

சங்கிலியனைப் போர்த்துக்கீசர் கோவைக்குத் தம்முடன் அழைத்துச்சென்று 

கோவையில் வைத்துத் தண்டனை அளித்தார்கள் எனக்கூறியவர்களும் இருந்தார்கள் 

என்பதையும் இந்த அறிஞர் எழுதியிருக்கின்றார்.

சங்கிலியனின் வாரிசுகள் கோவையில் தங்க வைத்திருந்த போது அவர்கள் நோயினால் 

இறந்தார்கள் எனக் கூறுபவர்களும் உள்ளனர் எனவும் 

இந்த நூலாசிரியரின் தகவற்படி சங்கிலிய வாரிசுகள் இந்தியாவில் 

தொடர்ந்து வாழ்ந்தார்கள் எனவும் தெரிகின்றது.   

 

  • கருத்துக்கள உறவுகள்

சோழமன்னனுக்குத் தகுந்த மரியாதை அளிக்காதபடியால் சிறையிலிடப்பட்டான்

சங்கிலியனை விடுவிக்கச்   சென்ற பரராச சேகரனும் சிறை பிடிக்கப்பட்டதை 

அறிந்த மூன்றவது மகன் பரநிருப சிங்கன் படையுடன் சென்று தன்  தந்தையையும் 

தம்பி சங்கிலியனையும் சிறைமீட்டான்”

இது சாத்தியப்படில்லத தகவல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

இது சாத்தியப்படில்லத தகவல்.

 

எதை வைத்து அப்படிச் சொல்கின்றீர்கள் கவிஞர் ஐயா 

 

பெருநில மன்னர்கள் அல்லாத ஒரு குறுநிலச்  சோழமன்னனாக

இருந்திருந்தால் அவனைப் போரில் வெல்வது முடியாதா?  .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.