Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவில் பயங்கர நிலநடுக்கம் -72 பேர் பலி, 600 பேர் படுகாயம்

Featured Replies

சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்த பட்சம் 72 பேராவது உயிரிழந்திருக்ககூடுமென அஞ்சப்படுகிறது. ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியிருக்கும் இந்த நிலநடுக்கத்தில் 600 மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சீனாவின் தென்மேற்கில் சிசூயான் மாகாணத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சுமார் 20 வினாடிகளுக்கு மேல் பூமி குலுங்கியது.

நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. இதனால் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

சீனாவின் லூஷான் நகரை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 12 கி.மீட்டர் ஆழத்தில் உருவாகியுள்ள இந்த நிலநடுக்கம் யான் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டது.

இதுவரை கிடைத்துள்ள தகவல் படி இந்த நிலநடுக்கத்தால் குறைந்தபட்சம் 72 பேராவது இறந்திருக்ககூடுமென தெரிகிறது. கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கி நிறையப்பேர் உயிருக்கு போராடி வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயர்க்கொடுமென அஞ்சப்படுகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டும் இதே சிசூயான் மாகாணத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/international/1304/20/1130420012_1.htm

 

  • தொடங்கியவர்

சீனாவில் பூகம்பம்; 100 பேர் பலி, ஆயிரக் கணக்கானோர் காயம்

 

சீனாவின் தென்மேற்குப் பிராந்தியமான சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பின்தங்கிய மாவட்டமொன்றில் ஏற்பட்டுள்ள பூகம்பத்தில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயப்பட்டுள்ளனர்.

 

திபெத்திய பீடபூமியின் அடிவாரத்தில் இருக்கின்ற கிராமம் ஒன்று முழுவதுமாக அழிந்துவிட்டதுபோல காட்சியளிப்பதாக சீன அரச ஊடகம் கூறுகிறது. மற்றபல பகுதிகளில் வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.

 

மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள மேற்கு செங்க்டூ பிராந்தியத்திற்கு படையினர் சுமார் 6000 பேர் அனுப்பப்பட்டுள்ளனர்.

 

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நிலையில் பலரை மீட்புப் பணியாளர்கள் மீட்டுவருவதை தொலைக்காட்சிகள் காண்பிக்கின்றன. மீட்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பிரதமர் லீ கெக்கியாங் அங்கு விரைந்துசென்றுள்ளார். உள்ளூர் நேரப்படி காலை 8 மணியளவில் தாக்கிய பூகம்பம் மக்னிடியூட் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.

 

இதே சிச்சுவான் பிராந்தியத்திலேயே 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

 

ஆகாயத்திலிருந்து பூகம்ப அழிவுகளைக் காட்டும் படம்

 

130420075141_quake__304x171_xinhua.jpg

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130420_chinaquake.shtml

 

  • தொடங்கியவர்

சீனா நிலநடுக்கம்: மீட்புப் பணிகளில் சிரமங்கள்

 

130420162742_china_quake_rescue_304x171_

 

 

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் சனிக்கிழமையன்று சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பேரழிவுகளைச் சந்தித்துள்ள மலைக்கிராமங்களைச் சென்றடைய மீட்புக் குழுக்கள் திணறிவருகின்றன.

இந்த பூகம்பத்தால் இருநூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சிச்சுவான் மாகாணத்தில் செங்டு நகருக்கு மேற்கே மலைக் கிராமங்களை 6.6 புள்ளிகள் வலுக்கொண்ட இந்த பூகம்பம் தாக்கியதில் சுமார் 11 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.

குறுகிய சாலைகள், நிலச்சரிவுகள், நெடிய வரிசையில் வாகனங்கள் சாலையை அடைத்து நிற்பது போன்ற காரணங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அவசர உதவிப் பொருட்களை கொண்டுசெல்வது தடைபட்டுள்ளது.

மீட்பு முயற்சிகளில் உதவுவதற்காக பொலிசாரும் துருப்பினருமாக பதினேழாயிரம் பேர் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பெரிய எண்ணிக்கையில் மக்கள் காயமடைந்துள்ளதால் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான யா அன் நகரின் மருத்துவமனையைச் சுற்றி கூடாரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

உதவிகள் வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது என்றாலும், இந்தக் கட்டத்தில் வெளிநாட்டு உதவிகள் தேவைப்படவில்லை என்று சீனா கூறியிருக்கிறது.

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130421_chinaquake.shtml

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 13 கிலோ மீற்றர் ஆழத்தில்,  பூமி தகட்டின் விரிவால்... எற்பட்ட நிலஅதிர்வு என்று கூறுகின்றார்கள். 

உலகில் அதிக சனத்தொகை கொண்டநாடு பூமியால் பாரம் தாங்கமுடியாமல் ஏற்பட்ட விபரீதம் இது

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.