Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2-G விவகாரம்: ராஜாவின் நேர்முகச் சாட்சி என்னும் மர்மம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2-G விவகாரம்: ராஜாவின் நேர்முகச் சாட்சி என்னும் மர்மம்

 

மூலம்: T.S.R. சுப்ரமணியன் (தி நீயூ சண்டே எக்ஸ்பிரஸ், 31/3/13)

தமிழாக்கம்: எஸ். ராமன்

2G-அலைக்கற்றைப் பங்கீட்டில் நடந்த ஊழலை விசாரிக்க அமைத்த பாராளுமன்றக் கூட்டுக் குழு (JPC)

தனது இகழத்தக்கத் தன்மையைத் தொடர்ந்துகொண்டு இன்னமும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இப்போது இருக்கும் பாராளுமன்றம் அதற்குள் கலைக்கப்படவில்லை என்றால் இரண்டாகப் பிளவு கண்ட, உப்புச் சப்பில்லாத, எதற்கும் உதவாத ஓர் அறிக்கை அந்தக் குழுவிடமிருந்து வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

upa-spectrum-2g-300x288.jpgஅண்மையில் நடந்த இரண்டு சம்பவங்களை நாம் கவனிக்கவேண்டும். அந்த JPC முன்பாகத் தான் நேரில் வந்து சாட்சியம் அளிக்க வேண்டும் என்று இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜா எழுத்து மூலம் தெரிவித்துக்கொண்டார். ஆனால், தானே போட்டுள்ள கணக்குப் படி, அந்தக் குழு அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டு, அவர் விரும்பினால், அவர் நேரே வந்து சொல்ல எண்ணியதை, எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என்று குழுத் தலைவர் அறிவுறுத்தியிருக்கிறார். தற்போது கிடைத்த தகவலின் படி, ராஜா ஒரு 15-பக்க அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. வெளியே சொல்லப்படுகின்ற காரணப்படி, ராஜா குற்றாளியாகக் கருதப்படுவதால் அவர் சாட்சியம் சொல்ல முடியாது என்றும், JPC குழுவினால் விசாரிக்கப்படுவது பொருத்தமானது இல்லை என்றும் தெரிய வருகிறது. ராஜாவிற்கு அந்த அனுமதி கொடுத்தால் மற்ற தொலைதொடர்பு அமைச்சர்களையும் அழைக்கவேண்டி வரலாம் என்றும் அனுமதி மறுப்புக்குக் “காரணமாக”, வேறு சில சமயம் சொல்லப்படுகிறது.

 

அப்படிச் சொல்லப்படும் இரண்டு காரணங்களுமே வெறும் கண்துடைப்புகளாகத்தான் அறியப்படுகின்றன. முதலாவதாக பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர், ஒரு குற்றவாளியாகக் கருதப்பட்டாலும், பாராளுமன்றத்தில் பேசுவதற்கான உரிமை அவருக்கு நிச்சயமாக இருக்கிறது. பாராளுமன்றமும், நீதிமன்றங்களும் தனித்தன்மையுடன் இயங்கும் அமைப்புகள். ஒருவர் ஒன்றில் ஈடுபடுவதோ, அல்லது ஈடுபடுத்தப்படுவதோ மற்றொன்றில் அவர் இயங்குவதைக் கட்டுப்படுத்தாது. மேலும் முன்னாள் அமைச்சர் இந்நாள் வரை குற்றம் சாட்டப்பட்டுள்ளவரே அன்றி, இன்னும் குற்றவாளி என அறிவிக்கப்படவில்லை. சில சந்தர்ப்பங்களில், அவை நடவடிக்கையில் குற்றவாளிகளே பங்கு பெற்றுள்ள நிகழ்ச்சிகள் இந்தப் பாராளுமன்றச் சரித்திரத்தில் உண்டு. JPC விசாரணைகளையும் தாண்டி, இந்தியக் குற்றவாளிகள் சட்டம் (IPC) பிரிவு 313-ன் படி ராஜாவை நீதிமன்றம் விசாரணை செய்யலாம். 2-G ஊழலில் ராஜாவின் பங்கு பற்றிய சந்தேகம் தெள்ளத்தெளிவாக இருப்பதால், மற்ற தொலைத்தொடர்பு அமைச்சர்களும் விசாரணைக்கு உட்படுவார்கள் என்றால் அவர்களும் விசாரிக்கப்படட்டுமே.

 

பிரதமர், அமைச்சர் ப. சிதம்பரம் இருவர் மேலும் குற்றம் சாட்டப்படவில்லை; அவர்கள் பெயர்கள் குற்றப் பத்திரிக்கையிலும் சேர்க்கப்படவில்லை. ஆனால் அவர்கள் இருவருமே பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று மட்டும் அல்லாது இந்த 2-G விவகாரத்தில் அனைத்து விவரங்களையும் அறிந்தவர்கள். ஒருபுறம் ராஜா குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் என்று கூறி அவரை JPC முன் வருவதற்குத் தகுதியில்லாதவர் என்பதும், மறுபுறம் பிரதமரும், அமைச்சர் சிதம்பரமும் குற்றம் சாட்டப்படாதவர்கள் என்பதால் அவர்களை JPC-க்கு அழைப்பதில்லை என்று கூறுவதும் முன்னுக்குப் பின் முரணான நிலைபாடுகள். பார்க்கப் போனால் பிரதமர் தானே முன் வந்து JPC-யின் அழைப்பை ஏற்று வருவதாகச் சொன்னவர்தான். இப்படியாக இந்த ஊழல் விவகாரத்தில் முற்றிலும் அறிந்த மூன்றில் இரண்டு பேர்கள் தாங்களே முன் வந்து JPC உறுப்பினர்களுக்குத் தகவல் அளிப்பதாகச் சொல்லியும், அவர்கள் கூப்பிடப்படவில்லை. IPC-பிரிவு 311-ன் படி எவருக்கெல்லாம் விவரங்கள் தெரியுமோ அவர்கள் அனைவரையும் சாட்சி சொல்லக் கூப்பிடவேண்டும். ஆக மொத்தம் இந்த மூவரும் கூப்பிடப்படவில்லை என்றால் JPC-ன் நடவடிக்கைகள் வெறும் வெளிவேஷம், கண்துடைப்பு என்று நம்புவதற்கு வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

 

ஏன் இப்படியான இமாலயத் தவறு ஒன்று அரசால் இழைக்கப்பட்டது என்பது பற்றி பாராளுமன்றம் கண்டு பிடிக்க வேண்டாமா? JPC அமைப்பு தவறு இழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்கி, சட்டத்தின் மாட்சிமையை நிலைநிறுத்தும் நீதி மன்றம் அல்ல; ஆனால் அதற்கு அதையும்விட ஒரு பெரிய பொறுப்பு இருக்கிறது. அந்த மாதிரி ஒரு தவறு இழைக்கப்பட்டதற்கு இருந்த சூழ்நிலை என்ன, அதைச் செய்ய முடிந்ததற்கு என்ன மாதிரியான ஓட்டைகள் நிர்வாக அமைப்பில் இருந்தன, இது போலத் தவறுகள் இனியும் நடக்கா வண்ணம் இருப்பதற்குச் செய்யவேண்டிய நிவாரணங்கள் என்ன என்பதையெல்லாம் அலசி, ஆய்ந்து, அறிவுறுத்தும் பொறுப்பு JPC-யிடம் தானே இருக்கிறது. எந்த நபர்களுக்கு நடந்தது எல்லாம் தெரியுமோ, அவர்களை அழைத்து அடிப்படையில் நடந்த தில்லுமுல்லுகளை அலசி ஆராயாமல் இருந்தால் எப்படி இந்தப் பொறுப்பை அவர்கள் செவ்வனே ஏற்றுச் செயல் புரிந்ததாகக் கொள்ள முடியும்? மாறாக, முழு உண்மையையும் அவர்கள் பார்ப்பதற்கு மறுப்பது எந்தக் காரணத்திற்காக JPC அமைக்கப்பட்டதோ அதை அவர்களே நிராகரித்து, பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

 

2g_spectrum-03.jpgபுதிதாகக் கிடைத்துள்ள தகவலின்படி, அலைக்கற்றுப் பங்கீடு பற்றிய கொள்கை மற்றும் நடைமுறைகள் எல்லாமே பிரதமரின் அலுவலகத்திற்கு நன்றாகவே தெரியும் என்றும், அங்கு எல்லாமே அலசி ஆராயப்பட்டது என்றும், அதில் தொடர்புடையவர்கள் அனைவருமே அதற்குப் பொறுப்பானவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. அதே போல, சந்தை நிலவரப்படி ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், இந்த ஊழல் நடப்பதற்கு முன் எடுத்த நடவடிக்கைகளைக் கூறும்போது, ஊழலால் விளைந்த இழப்பை அன்றைய நிதி அமைச்சர் தவிர்த்திருக்க முடியும் என்றும் பட்டவர்த்தனமாகக் கூறும் நிதியமைச்சகத்தின் காரசாரமான குறிப்பு உள்ளிட்ட அரசின் விவரமான உள்ளறிக்கை ஒன்றும் இருந்திருக்கிறது. இந்தக் குறிப்பே ஊழல் விசாரணையில் எல்லா அமைச்சகங்களின் பிரிவுகளும் எடுக்க வேண்டிய பொதுவான நிலையைப் பற்றி அறிவுறுத்துவதற்குத்தான் உருவாகியது என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் சாட்சிகளைக் கலைப்பதற்கும், சாட்சி சொல்ல வந்தவர்களை நிர்பந்தம் செய்வதாகவும் இது அமைவதால், இதைத் தயாரித்ததே இன்னுமொரு குற்றச் செயலாகக் கருதப்படலாம் அல்லவா? நிதி அமைச்சகத்தில் இருந்த ஒரு முதுநிலை மேலாளர் விவரமாக ஆய்ந்து தயாரித்த இந்த அறிக்கையை பாராமல் ஒதுக்கிவிட்டு, அவரும் அந்தப் பொறுப்பிலிருந்து கழற்றி விடப்பட்டு, பின்பு அவருக்கு வெளிநாட்டில் வகிக்க இருந்த வாய்ப்பு அதனால் தவறியும் போயிற்று.

 

பிரதமர், அன்றைய நிதியமைச்சர், ராஜா மூவருக்குமே இந்தப் பயங்கர ஊழலுக்கு முன் நடந்த விவரங்களை நன்கு விவரிக்கமுடியும். JPC நடந்த உண்மையை அம்பலப்படுத்துவது தனது பொறுப்பு என்று நினைக்கிறதா, அல்லது அந்த உண்மையைக் குழிதோண்டிப் புதைப்பது தனது பொறுப்பு என்று நினைக்கிறதா? இறுதியில் பார்த்தால் மேலே சொல்லப்பட்ட மூவருமே அலைக்கற்றுப் பங்கீட்டு நடவடிக்கைகளை முன்னின்று இயக்கியிருக்கிறார்கள். அண்மையில் ஒரு நீதிமன்ற அழைப்புப்படி தொலைத் தொடர்பு நுட்ப நிறுவனங்களின் அதிபர்கள்தான் தங்கள் தங்கள் நிறுவனத்தின் நடவடிக்கைகளை இயக்கியவர்கள் என்று குறிப்பிடப்பட்டு, அதனால் அவர்கள் நீதிமன்றத்திற்கு வரவேண்டும் என்று சொல்லப்பட்டார்கள்.

 

முழுச் சோற்றுப் பூசணிக்காயாக நமக்கே தெரிகிற பல உண்மைகளை, நமது அரசின் உண்மை ஆய்வு நிறுவனங்கள் பலவுமே வெளிக்கொண்டுவரத் தயங்குகிறது, மறுக்கிறது, அல்லது வேறு பக்கம் பார்த்துக்கொண்டு நிற்கிறது. உண்மைகளைத் தேவையில்லை என மறுத்து, அவைகளைப் பாய்க்கு அடியில் குப்பையைத் தள்ளுவதுபோலத் தள்ளிக்கொண்டிருக்கிறது. அதனால் என்ன நடந்தாலும் உண்மைகள் வெளியே வரப்போவதில்லை. நமது அரசின் நாடியாகவும், இறையாண்மையின் உச்சத்திலும் இருக்கும் பாராளுமன்றம் கூடவா இதே போலப் பொறுப்பு மறுப்பு வழிகளைப் பின்பற்றும்? நமது ஜனநாயகம் ஆட்டம் கண்டுவிட்டது, இன்னும் அதற்கு எத்தனை நாளோ என்று நாம் சொல்லலாமோ?

 

http://www.tamilhindu.com/2013/04/2g-jpc-probe-what-is-the-real-motive/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.