Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தலையிட வலியுறுத்தி மலேசியா நாடாளுமன்றத்தில் ஒத்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தலையிட வலியுறுத்தி மலேசியா நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் இலங்கை இனப்பிரச்சனையில் தலையிட வலியுறுத்தி மலேசியா நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடத்தப்பட்டுள்ளது.

மலேசிய நாடாளுமன்றில் கடந்த திங்கட்கிழமை இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை எதிர்க்கட்சி உறுப்பினரான எம்.குலசேகரன் தாக்கல் செய்தார்.

இருதரப்பினரையும் பேச்சு மேசைக்கு மலேசிய அரசாங்கம் கொண்டுவர வேண்டும் என்றும் சிறுபான்மைத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளை நிறுத்தி இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண மலேசிய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இக்கோரிக்கைக்கு மலேசிய வெளிவிவகார அமைச்சர் சையத் அப்துல் ஹமீத் அளித்த பதில்:

இலங்கை இனப்பிரச்சனையில் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே ஆகிய நாடுகள் தலையிட்டுள்ளன.

முன்னர் 1987 முதல் 1990 வரை இந்தியா தலையிட்டது. ஆனால் இந்திய முயற்சிகள் தோல்வியடைந்தன.

கடந்த மாதம் சிறிலங்காவுக்குச் சென்று அரசாங்க தலைவர்களைச் சந்தித்துப் பேசினேன். பேச்சுக்கள் மூலம் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அங்குள்ள முக்கிய பிரச்சனையே விடுதலைப் புலிகளின் தாக்குதல்களால் பொதுமக்கள் கொல்லப்பட்டுவதுதான்.

தற்போதைய நிலையில் நாம் தலையிடும் எண்ணம் இல்லை. ஏனெனில் சிறிலங்கா அரசாங்கமும் இதர நாடுகளும் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சிக்கின்றன என்றார்.

வெளிவிவகார அமைச்சரின் இந்தப் பதில் அதிருப்தி அளிப்பதாக குலசேகரன் கூறினார்.

இது தொடர்பாக குலசேகரன் கூறியதாவது:

இனப்பிரச்சனை தொடர்பான வெளிவிவகார அமைச்சரின் கருத்துகள் சரியானவை அல்ல. பயங்கரவாதம் என்ற நோக்கில் அவர் பார்க்கிறார். தங்களுடைய நியாயப்பூர்வமான முறைமைகளுக்கான விடுதலைப் போராட்டத்தையே தமிழர்கள் நடத்தி வருகின்றனர்.

தமிழர் பிரதேசங்களுக்குச் சென்று தமிழர் தலைவர்களை வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவில்லை.

மலேசிய அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை மலேசிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் தாயக விடுதலைக்கான உரிமையை வென்றெடுக்க மலேசிய அரசாங்க உதவ வேண்டும் என்றார் குலசேகரன்.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரு நாடுகள் உள்ளன என்பதை சிறிலங்கா ஏற்க மலேசியா அழுத்தம் கொடுக்க வேண்டும்: மலேசியா நா.உ. குலசேகரன் இலங்கையில் இரு நாடுகள் உள்ளன என்பதை சிறிலங்கா ஏற்க மலேசியா அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டு எதிர்க்கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.குலசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

மலேசிய நாடாளுமன்றத்தில் ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் கடந்த சில நாட்களுக்கு ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து ஒத்திவைப்புத் தீர்மானத்தை எம்.குலசேகரன் தாக்கல் செய்திருந்தார்.

ஒத்திவைப்பு தீர்மானம் குறித்தும் ஈழத் தமிழர் விடயத்தில் மலேசிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடுகள் குறித்தும் அவுஸ்திரேலிய "இன்பத் தமிழ் ஒலி" வானொலிக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (21.07.06) அவர் அளித்த நேர்காணல்:

சூடான், பொஸ்னிய ஆகிய நாடுகளின் பிரச்சனைகளின் போது மலேசியா உதவி செய்துள்ளது. பிரச்சனைகள் உள்ள நாடுகளுக்கு மலேசியா உதவி வருகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 64 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு மலேசிய அரசாங்கம் உதவ வேண்டும் என்று மலேசிய நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். அப்போதெல்லாம் வெளிவிவகார அமைச்சர் பதில் தரமாட்டார்.

தற்போது கடந்த 17 ஆம் நாள் மீண்டும் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினேன். இம்முறை வெளிவிவகார அமைச்சரே பதில் அளித்தார். தான் கடந்த யூன் மாதம் சிறிலங்காவுக்குச் சென்றதாகவும் அரச தலைவர் மற்றும் வெளிவிவகார அமைச்சரை சந்தித்துப் பேசியதாகக் கூறினார். அச்சந்திப்பின் போது நோர்வே அனுசரணையுடனான அமைதி முயற்சிகள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாக சிறிலங்கா தரப்பினர் தெரிவித்தனர் என்றார் வெளிவிவகார அமைச்சர்.

தமிழர் பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு தமிழர் தரப்பினரை வெளிவிவகார அமைச்சராகிய நீங்கள் சந்தித்திருக்க வேண்டும் என்று கூறியபோதும் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. மலேசியாவில்தான் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிக்கப்படுவதாக மலேசிய அமைச்சரிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கூறியதாகவும் எம்மிடம் தெரிவித்தார்.

இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் மலேசிய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும். சிறிலங்காவுக்கு ஆயுத உதவிகள் வழங்கக் கூடாது. ஆழிப்பேரலை நிவாரண உதவிகள் தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. அந்த உதவிகள் வழங்க மலேசிய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் வரலாற்று ரீதியாக வெவ்வேறு இனத்தவர்கள். அங்கு இரு நாடுகள் இருப்பதை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மலேசியா அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு மலேசிய நாடாளுமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி கேட்ட போத, மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்படவில்லை. ஆனால் சில நாடுகள் தடை செய்துள்ளன. சட்ட ரீதியாக மலேசியாவில் இயங்கலாம் என்று அரசாங்கத்தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

மலேசியாவில் 5 பேருக்கு மேல் ஒன்றுகூடுவதற்கு காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து மலேசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் விரைவில் மனுவொன்றை கையளிக்கத் திட்ட்மிட்டுள்ளோம்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டிய கடமை உள்ளது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை நமது போராட்டமாக உலகத் தமிழர்கள் எண்ண வேண்டும் என்றார் எம்.குலசேகரன்.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.