Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவுஸ்திரேலியாவிலிருந்து 819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளார்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அவுஸ்திரேலியாவிலிருந்து 819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளார்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர்

 

austaliya1.jpgஅவுஸ்திரேலியாலிருந்து 819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமான முறையில் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி முதல் இதுவரையில் 1029 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புடன் அதிக எண்ணிக்கையிலானவர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.போலியான முறையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசிப்போரை நாடு கடத்த தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

 

போலி புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புலம்பெயர் தமிழர்களின் வலுவான ஆதரவு காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

 

எவ்வாறெனினும், அரசாங்கத்தின் குடிவரவுக் கொள்கைகளில் அழுத்தங்களை ஏற்படுத்த முடியாது என அவுஸ்திரேலியா சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்வோரை தடுக்க தீவிர கண்காணி;ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

2012 ஜனவரி மாதம் முதல் 2013 ஏப்ரல் மாதம் வரையில் சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 3286 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2070563503Tamil.jpg

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்!

அவுஸ்திரேலியா அனுப்புவதாகக்கூறி, தமிழகத்திலிருந்து இலங்கை தமிழர்கள் ஏமாற்றப்படுவதாக, லோக்சபாவில் மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என். சிங் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் 1100 பேர் இந்திய கடலோர காவற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சிங் தெரிவித்தார். 

இது தொடர்பாக, லோக்சபாவில் மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என். சிங், கூறுகையில், 

தமிழக அரசு அளித்துள்ள தகவலின் அடிப்படையில், அவுஸ்திரேலியா அனுப்புவதாகக்கூறி, தமிழகத்திலிருந்து இலங்கைத்தமிழர்கள் ஏமாற்றப்படுவதாக தெரிவித்தார். 

கடந்த 2010ம் ஆண்டு முதல் தற்போது வரை, 57 இந்தியர்கள் மற்றும் 1163 இலங்கைத் தமிழர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மீது 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க பொலிஸ் கமிஷனர் மற்றும் எஸ்.பி.,க்களை அறிவுறுத்துமாறு தமிழக அரசு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது என கூறினார். 

(தினமலர்)

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்க்கப்பட வேண்டிய விடையம் பல நாடுகளை சேர்ந்த உண்மையில் பாதிக்கப்பட்ட மக்கள் நேர்வழியில் பதிவு செய்து விட்டு ஒவொரு நாட்டு Australia தூதரகங்களின் பதிலுக்காக

காத்திருக்கும் போது 10000 டாலர்கள் கொடுத்து படகு பயணம் மேற்க்கொளுகின்ற இந்த வசதியான மக்கள் அகதிகள் என்ற பெயரில் வரும் போது திருப்பி அனுப்ப வேண்டியவர்களே...... அதுவும் யுத்த வாடையே அறிந்திராதவர்கள் கண்டிப்பா திருப்பி அனுப்ப படவேண்டியவர்களே......

Edited by SUNDHAL

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.