Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அசாத் சாலி கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை'

Featured Replies

இலங்கை காவல்துறையினரால் நேற்று முன்தினம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ்- முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி கொழும்பு மருத்துவமனையில் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் மூன்றாவது நாளாக உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அசாத் சாலியின் உடல்நிலை மோசமடைந்துவருவதாக அவரை சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

 

இதற்கிடையே, அசாத் சாலியின் விடுதலையை வலியுறுத்தி மனோ கணேசன், விக்ரமபாகு கருணாரட்ன, சுமந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் தலைமையில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இனங்களுக்கிடையில் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காக அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும்படி கோரும் அமைப்பொன்றை உருவாக்கி, சிறுபான்மை மக்களுக்கான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே அரசாங்கம் அசாத் சாலியை கைதுசெய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றஞ்சாட்டுகிறார்.

 

பத்திரிகைச் செவ்வி- இன முரண்பாடு- பயங்கரவாதத் தடைச் சட்டம்

 

நாட்டில் இனவாத, மதத் துவேஷக் கருத்துக்களை வெளியிட்டுவந்த கடும்போக்கு பௌத்தவாத அமைப்புகளுக்கு அரசாங்கத்துடன் நேரடித் தொடர்புள்ளது என்பதை அசாத் சாலி வெளிப்படுத்தி இருந்ததாகவும் அவர் கூறினார்.

இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் விதமாக உண்மையில் செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அச்செயற்பாடுகளை எதிர்த்த அசாத் சாலியை அரசாங்கம் கைதுசெய்திருப்பதாகவும் சுமந்திரன் தமிழோசையிடம் கூறினார்.

தமிழகத்திலிருந்து வெளியாகும் ஜூனியர் விகடன் சஞ்சிகைக்கு அளித்த செவ்வியொன்று தொடர்பிலேயே பாதுகாப்புத் தரப்பினர் தன்னிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தியுள்ளதாகவும்,தான் வெளியிடாத கருத்தொன்று அந்த சஞ்சிகையில் வெளியானமை பற்றி உடனடியாகவே தான் குறித்த சஞ்சிகைக்கு செய்தித் திருத்தம் அனுப்பியிருந்ததாகவும் அசாத் சாலி கூறியதாக சுமந்திரன் தெரிவித்தார்.

தனது தரப்பு விளக்கங்களை அளித்த பின்னரும் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அசாத் சாலி உண்ணாநோன்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் விதிகளின் கீழும் அசாத் சாலி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு கூறியுள்ளது.

ஆனால், அந்தச் சட்டவிதிகளின் கீழ் கைதுசெய்யப்படுமளவுக்கு அசாத் சாலி குற்றம் எதனையும் புரிந்திருக்கவில்லை என்று அவரின் விடுதலைக்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பின் தலைவர்கள் வாதிடுகின்றனர்.

இதேவேளை, அசாத் சாலிக்கு எதிராக அரசாங்கம் குறிப்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் என்ன என்று வினவியபோது, அந்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விளக்கம் அடுத்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அளிக்கப்படும் என்று இலங்கையின் பாதுகாப்பு விவகாரங்களுக்காக பேசவல்ல அதிகாரி லக்ஷ்மன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/05/130504_sumanthiransalley.shtml

 

இந்த அமைப்பின் கட்டடம் பாதுகாப்பு காரியதரிசியால் திறந்து வைக்கபட்டது. காரியதரி நேடையாக கட்டளைகளை கொடுத்து நடை முறைப்படுத்தியிருக்கிறார். அதாவது அவர் அரைன் தலிவரின் தம்பி என்ற முறயில் சகோதரின் நிறவேற்று அதிகாரங்களில் பங்கு கொள்கிறார். அந்த நேரத்தில் வகுப்பு வாத அமைப்பொன்றுக்கு கட்டடம் திறந்தால் அதை அமைப்பு அரசுடன் தொடர்புள்ளது என்று அனுமானிக்க இடம் கொடுக்கும்.  மேலும் இப்படியான பேச்சுக்களை அரசு தனக்கு விடபட்ட திறந்த கேள்வியாக எடுத்துதான் பதில் அளித்திருக்க வேண்டும். கைது செய்யக்கூடாது.

 

பொதுபல சேனவுடன் அரசுக்கு தொடர்பு என்றால் இந்த வகிரம் பிடித்த அரசே அந்த உறவை மறைக்க, மறுக்க இப்படி பழிவாங்குகிறது. அரசே தனது உறவை மறுக்கும் அளவுக்கு கேடு கெட்டது பொதுபல சேன. ஆனல் அரசு பலதவை முஸ்லீம் பிரதிநிதிகளை பொது பல சேனவுடன் கருமமாற்றப்படியும் , பொதுபல சேனாவினால் ஆரம்பிக்க பட்ட பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளவும் பணிக்கப்பட்டது. மகிந்தா நேரில் பொது பல சேனாவுக்கு பாட்டி பொடும் படி கேட்டதாகவும் மந்திரிகளும் முஸ்லீம் பிரதானிகளும் பொதுபல சேனாவுக்கு பீஸ்ட் ஒன்று மருதானையில்  வைத்திருந்தார்கள் என்பதும் பத்திரிகைகளில் வெளிவந்த செய்த்தி.  கலால் எதிர்ப்பின் போது முஸ்லீம் பிரதானிகள், சமையத்தலைவர்கள், உலமாக்கள் சபை  என்பன பொதுபல சேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் படி பணிக்கபட்டிருந்தார்கள். இவைகள் கோட்டிலும், பாரளு மனறத்தில் தீர்த்திருக்க வேண்டிய பிர்சனைகள். பொது பல சேனயுடன் பேசியிருக்கப்படாதவை. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.