Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியாவில் எதிர்க்கட்சியின் மூன்று உறுப்பினர்கள் கைது

Featured Replies

மலேசியாவில் எதிர்கட்சியைச் சேர்ந்த மூன்று முக்கிய உறுப்பினர்களை கைது செய்துள்ள காவல்துறையினர் ஒரு மாணவர் மீது தேசத் துரோக குற்றமிழைத்தார் என்று கூறி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

130509021813_malaysia_protests_304x171_r

அண்மையில் எதிர்கட்சியினர் நடத்திய ஒரு எதிர்ப்பு கூட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தனர் 

தேர்தலில் மோசடிகள் நடைபெற்றதாக கூறி அதற்கு எதிராக மக்களை வீதியில் இறங்கி போராடும்படி அந்த மாணவர் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த மாதத்தின் முற்பகுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் மோசடிகள் இடம்பெற்றன என்று கூறி அதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் இந்த மாணவ செயற்பாட்டாளர் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால் தான் குற்றமற்றவர் என்று அவர் கோலாலம்பூரிலுள்ள ஒரு நீதிமன்றத்தின் முன்னர் நிறுத்தப்பட்டபோது தெரிவித்தார், பின்னர் அவர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

130506071017_malaysia_election_304x171_a

மீண்டும் பிரதமராகியுள்ள நஜீப் ரசாக்

இதே வேளை எதிர்க்கட்சிக்கு ஆதரவான சில நாளிதழ்களில் அலுவலங்களில் சோதனைகளை நடத்தி ஆயிரக்கணக்கான பிரதிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இருக்கும் ஒரு மூத்த அரசியல்வாதியும், மக்கள் நீதிக் கட்சியின் துணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ச்யான் சுவாவும் அடங்குவார்.

தான் ஒரு விமானத்தில் ஏறவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகவும். அச்சத்தின் காரணமாக பின்வாங்காமால், தொடர்ந்து அமைதியான வழியில் கூடி நம்பிக்கை வைத்து போராட்டங்களை முன்னெடுக்குமாறும் டியான் சுவா ட்விட்டர் சமூகதளத்தில் கூறியுள்ளார்.

அவரது கைது அரசியல் ரீதியான ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்றும், இவ்வகையான அச்சுறுத்தல்களுக்கு தமது கட்சி அஞ்சாது எனவும் மக்கள் நீதிக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தசாமி மணிவண்ணன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த மூன்று பேரும் தேசத் துரோகக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை காவல்துறை தலைவர் மொஹமத் சாலேஹ் உறுதிப்படுத்தியுள்ளார்.

130506070132_cn_anwar_ibrahim_304x171_ap

மக்கள் கூட்டணியின் தலைவர் அன்வர் இப்ராஹிம்

அங்கு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படாவிட்டாலும், ஆளும் தேசிய முன்னணி கடந்த முறையைவிட குறைவான இடங்களையே வென்றது, எதிர்க்கட்சியினர் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றனர்.

ஆளும் தேசிய முன்னணி மோசடிகள் மூலமே மீண்டும் ஆட்சிக்கு வந்த்து என்றும், தமது போராட்டம் தொடரும் என்றும் எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாட்டிலுள்ள தேசத் துரோகச் சட்டத்தை ரத்து செய்து அதற்கு பதிலாக ஒரு தேசிய இணக்கப்பாட்டுச் சட்டம் ஒன்றை தான் கொண்டுவரவுள்ளதாக பிரதமர் நஜீப் ரசாக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/05/130523_malayaisa_oppnarrest.shtml

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.