Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா இராணுவத்தின் நில அபகரிப்பும் - தமிழ்மக்களின் சொத்துரிமையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா இராணுவத்தின் நில அபகரிப்பும் - தமிழ்மக்களின் சொத்துரிமையும்
[ சனிக்கிழமை, 13 யூலை 2013, 07:22 GMT ] [ நித்தியபாரதி ]


சொத்து உரிமை என்பது பலவீனமாகவும், வினைத்திறனற்றதாகவும் இருப்பதால் போருக்குப் பின்னான சூழலில் பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன. இரத்தம் சிந்தப்பட்ட நீண்ட கால யுத்தமானது முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பொருளாதாரத்திற்கு மீளவும் புத்துணர்வு வழங்குவதில் மிகப் பாதுகாப்பான சொத்து உரிமைகள் என்பது தேவைப்பாடானதாகும்.

இவ்வாறான சூழலில் வாழும் பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்களுக்கு குறிப்பாக விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரமானது சொத்துப் பாதுகாத்தல் உரிமையிலும், தமது நிலங்களைப் பயன்படுத்தும் உரிமையிலுமே தங்கியுள்ளது. இதற்கும் மேலாக, நம்பகமான சொத்து உரிமை என்பது போருக்குப் பின்னான சூழலில் முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை மேற்கொள்வதற்கும், நிதிசார் சவால்களைச் சந்திப்பதற்கும் உந்துசக்தியாக உள்ளது.

இந்நிலையில், போரின் போதான இடப்பெயர்வுகள், மக்கள் மீளக்குடியேற்றப்படுதல், அரசாலும், அரச சார்பற்ற பங்குதாரர்களாலும் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் கையகப்படுத்துதல், மக்கள் தமது சொத்துக்களை இழத்தல் அல்லது காலவதியாதல் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் போன்ற ஏனைய சட்ட ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் ஏற்படும் தடைகள் மற்றும் அவற்றைத் தொலைத்தல் போன்றவற்றால் நிலச் சொந்தக்காரர்கள் தமது நிலங்களைப் பயன்படுத்துவதில் தடைக்கற்களாக உள்ளமை கெட்டவாய்ப்பாகும்.


26 ஆண்டுகளாகத் தொடரப்பட்டு 2009ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட உள்நாட்டுப் போரின் போது நிலம் என்பது மிகப் பிரதான விவகாரமாக இருந்துள்ளது. கடந்த முப்பதாண்டுகளாக, சிறிலங்காவானது குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட இயற்கை மற்றும் செயற்கை அழிவுகளால் கணிசமானளவு மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், ஏராளமான மக்கள் இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

சிறிலங்காவில் மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கு நில உரிமையை உறுதிப்படுத்துதல் மிக அவசியமான நகர்வாகும் என இந்நாட்டு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் 2011ல் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரையிலும் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாது நிலுவையில் உள்ளது.

போரின் பின்னான சூழலில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்வதென்பது தமது பலத்தை உறுதிப்படுத்துகின்ற காரணிகளில் ஒன்று என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த போதிலும், நில அபகரிப்பு நடவடிக்கையின் கீழ் காணிகளை இழந்த நில உரிமையாளர்களால் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் இன்னமும் தீர்வு காணப்படாது உள்ளன. நில உரிமையாளர்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படாவிட்டால், சிறிலங்கா அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளின் விளைவுகளால் நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஒன்று ஏற்படுவது தடுக்கப்பட முடியாததாக இருக்கும்.

சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகியதிலிருந்து, சிறிலங்கா இராணுவத்தினர் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி நோக்கங்களுக்காக மக்களுக்குச் சொந்தமான நிலங்களைக் கையகப்படுத்தி வருகின்றனர். போரின் போது இழக்கப்பட்ட நிலங்கள் பாதுகாப்பு மற்றும் 'அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காகப்' பயன்படுத்தப்படும் என ஜனவரி 2013ல் வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் சுற்றறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உரிமை கோரப்படாத காணிகள் கையகப்படுத்தப்படுவதாக சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு வாழ் மக்கள் அரசாங்கத்தின் இவ்வாறான நிலச் சட்டத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்காவில் முன்னர் ஒரு காலத்தில் கேந்திர முக்கியத்துவம் மிக்க மீன்பிடித் துறைமுகமாக விளங்கிய மயிலிட்டி துறைமுகமானது தற்போது உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் சிறிலங்கா இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் 15 சதவீத நிலப்பரப்பை உள்ளடக்கிய இந்தப் பகுதியில் 24 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா இராணுவத்தினரின் மிக முக்கிய இராணுவத்த தளங்களும், தொழிற்சாலைகளும் அமைக்கப்பட்டன. இதனால் மயிலிட்டித் துறைமுகத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழ் மீனவர்கள் தற்போது பருத்தித்துறை மற்றும் வலிகாமம் கிழக்குப் பகுதிகளில் மீளக்குடியேறுவதில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

சிவப்பு வெங்காயம், மிளகாய், புகையிலை, வாழை மற்றும் தக்காளி போன்ற பயிர்ச்செய்கைகளை மேற்கொண்ட வலிகாமம் வடக்கு வாழ் விவசாயிகளின் நிலங்கள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்டதால் இவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தாம் போரின் பின்னர் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறலாம் என்ற நம்பிக்கையில் இந்த மக்கள் காத்திருந்த போதும், உயர் பாதுகாப்பு வலயம் இன்னமும் அகற்றப்படாது இராணுவமயமாக்கல் மேலும் அதிகரிப்பதானது இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேலும் பாதித்து வருகிறது.

தாம் தமது நிலங்களை விட்டு இடம்பெயர்த்தப்பட்டதால் தமது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக தெல்லிப்பளையைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகின்றனர். இவர்கள் தமது நெருங்கிய உறவினர்களின் மிகச் சிறிய தோட்ட நிலங்களில் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றனர். தாம் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்படாததால் தொடர்ந்தும் தமது நிலங்களையும் சொத்துக்களையும் இழக்கும் அபாயத்தில் உள்ளதாகவும் இந்த விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மக்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்படாததாலும், அரசாங்கத்தால் நட்டஈடுகள் எதுவும் வழங்கப்படாததாலும் இவர்களது வாழ்வு மேலும் மோசமடைந்துள்ளது.

இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் பொருளாதார வலயம் ஒன்றை உருவாக்கி அதில் நிலக்கரி மின் உற்பத்தி நிலையம், தொழிற்சாலைகள் மற்றும் விடுதிகள் போன்றவற்றை உருவாக்குவதற்கான திட்டத்தை அரசாங்கம் கொண்டுள்ளது. இதற்கப்பால், இங்கு உள்ளுர் தொழிலாளிகளைப் பயன்படுத்தி விவசாயம் மற்றும் மீன்பிடியை மேற்கொள்ளாது இதற்காக அரசாங்கப் பணியாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் இவ்வாறான நில அபகரிப்பு கொள்கையானது, சுற்றுலாத்துறை, முதலீடு மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்காக என பெரிதாகப் பேசப்பட்டாலும் கூட, இதனால் போருக்குப் பின்னான மீள்கட்டுமாணப் பணிகள் தாமதப்படுத்தப்படுவதுடன், மக்களின் வறுமை நிலையைக் குறைப்பதிலும் தாமதம் ஏற்படுகின்றது என்பதே உண்மையாகும்.

சிறிலங்கா இராணுவமானது இந்த நிலங்களிலிருந்து உச்ச பயனைப் பெற்றுக் கொள்வதற்காக வளங்கள் மற்றும் தொழினுட்பத்தைப் பயன்படுத்தினாலும் கூட, இவர்களின் இவ்வாறான செயல்களினால் போருக்குப் பின்னான மக்களின் மீள்கட்டமைப்பு பணிகள் முடக்கப்படுகின்றன என்பதே உண்மையாகும். போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரமானது ஏற்கனவே சீரழிந்துள்ள நிலையில், தனியாரின் காணிகளும் பொதுக் காணிகளும் கையகப்படுத்தப்படுவதானது மக்களை மேலும் மேலும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

சிறிலங்காவில் அபிவிருத்தி மற்றும் சமாதானம் என்பன நிலையாகக் கட்டியெழுப்பப்படுவதற்கு, இங்கு சொத்து உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், இவ்வாறான நிலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நாட்டை முன்னேற்றுவதற்கும் உள்ளுர் மக்களுடன் கலந்தாலோசனைகள் நடாத்தப்பட வேண்டும்.

வழிமூலம் : The Council on Foreign Relations - CFR : This article is from Ruth Canagarajah

மொழியாக்கம் : நித்தியபாரதி

http://www.puthinappalakai.com/view.php?20130713108659

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.