Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புளொட்டின் வீரமக்கள் தினம்-மறைக்கப்பட்ட உமாவின் உட்கொலையின் கதை!

Featured Replies

புளொட் இயக்கத்தால் தற்போது  உமா மகேஸ்வரன் நினைவாக வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகிறது.உண்மையில் புளொட் அதற்கு தகுதியுடையதா?தாம் கொலைசெய்து தொலைத்த உமா மகேஸ்வரனுக்கு நினைவுதினம் இன்னமும் தேவைதான?உமா கொலையின் கதை இது,

1989 ஜூலை15 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையில் அநாதரவான நிலையில் சூட்டுக்காயங்களுடன் உமா மகேஸ்வரன் என்று அழைக்கப்பட்டட கதிர்காமர் நல்லைநாதனின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு கொழும்பு பெரியாஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டது.பின்னர் அவர் மனைவி அகிலேஸ்வரி அடையாளம் காட்டினார்.புளொட் இயக்கத்தின் தலைவரான உமா மகேஸ்வரன் உடல் எப்படி கடற்கரைக்கு வந்தது? புளொட் உறுப்பினர்கள் ஏன் தங்கள் தலைவரைத்தேடவில்லை? உமாவின் மெய்க்காப்பாளர்கள் எங்கே போனார்கள் ? கொலையின் மர்மம் என்ன?

 

(இந்தியபயிற்சி முகாமில் உமா மகேஸ்வரன் என்ற முகுந்தன்)

plot-uma.jpg

ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளின் தலைவராக இருந்த உமா (அப்போது புலிகளின் இராணுவத்தளபதி பிரபாகரன்) பினனர் ஊர்மிளா என்பவருடன் படுக்கையறையில் ஒன்றாக இருந்ததை புலிகளின் உறுப்பினர்கள் சிலர் பார்த்து அதை மத்தியகுழுவிடம் தெரிவி்த்ததையடுத்து  உமா புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார்.அவருடன் சில மத்திய குழு உறுப்பினர்களும் வெளியேறினர்.1980 களில் புளொட்  என்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் உருவாக்கப்பட்டு அதன் செயலதிபரானார் உமா. உண்மையில் புளொட் புலியெதிர்ப்புக்கொள்கை என்பதைமுக்கியமான கொள்கையாகக் கொண்டிருந்தது.இதனை பின்னாளில் வந்த கருணா குழு எப்படியோ அப்படி அன்று புளொட்டின் பாத்திரம் இருந்தது.

1982 இல் தமிழ்நாடு பாண்டிபாஸார் பகுதியில் பிரபாகரனும் உமாமகேஸ்வரனும் நேருக்கு நேர் துப்பாக்கியால் மோதிக்கொண்ட சம்பவத்தை அடுத்து  உமா தனது பாதுகாப்பை கடுமையாக அதிகரித்திருந்தார்.1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தந்தையடுத்து உமா தமிழ்நாட்டிலிருந்து கொழும்புக்குத் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார்.

இலங்கை அரசுடன் நல்லுவவை ஏற்படுத்திக்கொண்ட முதல் தமிழ் இயக்கம் புளொட் ஆகும். ஆனால் தமிழீழக்கேட்டு போராட வெளிக்கிட்டது தனிக்கதை.கொழும்பில் கிருலப்பனை தலக்கொட்டுவ என்ற இடத்தில் வீடு ஒன்றை எடுத்து தனது துணைவியுடன் இருந்தார்.கொழும்பிலி”ருந்தவாறு  இயக்கத்தால் திரட்டப்பட்ட நிதியை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முதலிட்டு பலவியாபாரங்களை மேற்கொண்டிருந்தார் உமா. இயக்கம் சம்பந்தமாக நடத்தப்பட்ட வியாபாரங்கள் என அனைத்தையும் இரகசியமாக வைத்தி“ருந்தார். இயக்க முக்கிய உறுப்பினர்களுக்கும் இது மறைக்கப்பட்டது.

இயக்கம் நடத்த பணமும் அரிதாகவே அவ்வப்போது உமாவால் கொடுக்கப்பட்டது.வவுனியாவில் திரட்டப்பட்ட நிதியே ஓரளவு இயக்க உறுப்பினர்களை கொண்டுநடத்த உதவியது.இதனால் முக்கிய உறுப்பினர்கள் உமா மீது கடும் சீற்றத்தில் இருந்தனர்.இந்த நிலையில் உமாவின் விசுவாசியும் முக்கிய புளொட் உறுப்பினராகவும் இருந்த சிவராம் என்ற தராகி(1990 களிலிருந்து பத்திரிகையளராக அறியப்பட்டவர்.2005  இல்் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.) முக்கிய உறுப்பினர்களாக இருந்த சித்தார்த்தன் (தற்போதைய புளொட் தலைவர் ) மாணிக்கம் தாசன்( புளொட் இராணுவப்பொறுப்பாளராக இருந்தவர்.1999 இல் வவுனியாவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்தார்) குரு ஆகியோரை அணுகி உமா தலைவராக இருந்தால் புளொட் உருப்படாது என்பதை புரியவைத்து உமாவை போடும் திட்டத்துக்கு உடன்படவைத்தார்.

(உமா கொலையின் சூத்திரதாரிகள் சி்த்தர் ,மாணிக்கம் தாசன், சிவராம் )

20041022001905101.jpg

 

manikkadasan-guards.jpgimages-4.jpg

இந்த நடவடிக்கைக்கு உமாவின் மெய்க்காப்பாளர்களாக இருந்த ஆச்சி மற்றும் சுரேஸ் ஆகியோர் உள்வாங்கப்பட்டு திட்டம் தயாரானது.உமா கடைசியாக பங்குபற்றிய நிகழ்வு அமிர்தலிங்கத்தின் மரணவீடு.அதன்பின் உமாவைக்காணவில்லை.ஆம் அமிர்தலிங்கதின் மரணவீ்ட்டில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிய உமாவின் வாகனம் தெகிவளையில் உள்ள புளொட் முகாம் ஒன்றுக்கு சென்றது.அங்கு வைத்து உமா தீவிரமாக விசாரிக்கப்பட்டார். முக்கியமாக வியாபர மூலங்கள் சித்திரவதையின் மூலம் பெறப்பட்டது.பின் தலையில் மூன்று குண்டுகள் நெஞ்சில் ஒன்று வயிற்குக்கு கீழ் ஒன்று என் 5 குண்டுகள் உமாவைத்துளைத்தன. தமிழீழம் கேட்டு போராடிய இயக்கங்களில் அதன் தலைவரே உட்கொலைக்கு பலியானர்.

புளொட் இயக்கம் உட்கொலைக்கு பிரபலமானது.ஆரம்பகாலத்தில் இந்தியப்பயிற்சி முகாம் களிலேயே உமாவுக்கு எதிராக செயற்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் நுாற்றுக்கணக்கான் உறுப்பினர்கள் கொண்று புதைக்கப்படனர்.இவற்றை  உமாவின கட்டளைப்படி செய்தவர்கள் சிவராம் மாணிகம் தாசன் குரு  ஆகியோர் முக்கியமானவர்ககள்.அவர்களே கடைசியில் உமாவுக்கு எமனாகவும் வந்தனர்.

சில புளொட் உறுப்பிரனர்கள் புலிகளே  உமாவைக்கொண்றதாக கூறித்திரிகின்றனர்.

இந்த உமாமகேஸ்வரன் நினைவாகவே வீரமக்கள் தினம் என்று புளொட் அனுஸ்டித்துவருகிறது.

http://urumal.com/2013/07/16/1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.