Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டவில்லை –

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சி.வீ.விக்னேஸ்வரன் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்

CV_CI.jpg

 

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என முன்னாள் நீதியரசரும், வட மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளருமான சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

1977ம் ஆண்டு வரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்

அப்போதைய தமிழ்த் தமிழ்த் தலைவர்கள் கடவுளாலேயே தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் என தெரிவித்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் இளையவர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தினர் என அவர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை தடுக்க தமிழ் தலைவர்கள் முயற்சித்த போது அவர்களும் படுகொலை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வன்முறைகள் ஓயும் வரையில் தமிழ் அரசியல் தலைமைகள் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கணவன் மனைவியை கொடூரமாகத் தாக்கினால் அதனை வீட்டுப் பிரச்சினையாக கருத முடியாது, அயலவர்கள் அந்த விடயத்தில் தலையீடு செய்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே நிலைமைதான் இலங்கைத் தமிழர் பிரச்சினையின் சர்வதேச தலையீடுகளுக்கும் உரித்தாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாணத்தில் 150,000 படையினர் நிலைநிறுத்தப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாரியளவு தாக்கத்தை செலுத்;தும் போது அது தொடர்பில் முதலில் இலங்கை அரசாங்கத்திடமே முறைப்பாடு செய்யப்பட்டது.

எனினும், குறித்த முறைப்பாடுகளை அரசாங்கம் கண்டு கொள்ளாத போது, சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பை நாட வேண்டிய நிலைமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவினால் இலங்கைத் தமிழர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க முடியாது, ஏனெனில் இலங்கையுடனான பொருளாதார மற்றும் தந்திரோபாய காரணிகளினால் இந்த நிலைமை காணப்படுகின்றது.

இதனால்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சர்வதேச நாடுகளிடம் ஒத்துழைப்பு கோரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணை குறித்த தமது கருத்து சட்டத்தின் அடிப்படையிலானது எனவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தனிப்பட்ட முரண்பாடுகள் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தொடர்ந்தும் வடக்கில் பெருமளவிலான இராணுவத்தினர் எதற்காக குவிக்கப்பட்டுள்ளனர் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு மக்கள் பாரியளவிலான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அநேக சந்தர்ப்பங்களில் தமிழக அரசியல்வாதிகள் இலங்கைப் பிரச்சினைகளை தங்களது அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய இலங்கைக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை உள்ளக ரீதியில் எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், தமிழக நண்பர்கள் பல வழிகளில் உதவி செய்வதனை வரவேற்பதாகவும்;, எனினும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட விவகாரத்தில் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகாண்பதற்கு அவர்கள் தடையாக இருக்கக்கூடாது எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் - ஹிந்துஸ்ட்டான் ரைம்ஸ்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.