Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மாவட்டத்தில் அதிகரிக்கும் சட்டவிரோதக் கருக்கலைப்புகள்

Featured Replies

23072013%20001.jpgதமிழர் தாயகத்தில் உள்ள தமிழ் மக்களை சிங்கள இனவெறி அரசாங்கமும் அதன் படைகளும் கொன்று குவித்த பின்னர் தமிழ் மக்களின் சனத்தொகை மிகவும் குறைவடைந்துள்ள நிலையில், யாழ்.மாவட்டத்தின் சில இடங்களில் சட்டவிரோத கருக்கலைப்புகள் இடம்பெற்று வருகின்றமை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோதமாக இடம்பெறுகின்ற இந்த கருக்கலைப்பு விடயத்தில் பொலிஸாரோ சுகாதாரத் துறை சார்ந்த அதிகாரிகளோ உரிய நடவடிக்கை எடுக்காதிருக்கின்றமையானது இந்தக் கருக்கலைப்புகள் சிறிலங்கா அரசாங்கத்தின் வழிகாட்டலில்தான் இடம்பெறுகின்றது என்பதை துல்லியமாக எடுத்துக்காட்டுவதாக கல்விமான்களும் தமிழ்த் தேசியப் பற்றாளர்களும் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத கருக்கலைப்புச் செய்யப்பட்ட சில தாய்மார் குருதிப்பெருக்கால் உயிரிழந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் இந்த விடயத்தில் பிரேத பரிசோதனையில் ஈடுபடும் மருத்துவர்களும் உரிய விசாரணைகளுக்கு உத்தரவிடுவதில்லை. இந்த விடயத்தில் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகமும் எந்தவிதமான அக்கறையும் எடுப்பதில்லை.

யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழ்.மாவட்டத்தின் கலாசார பிறழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனைத் தடுப்பதற்கோ குறைப்பதற்கோ இதுவரை எவரும் அக்கறை காட்டவில்லை. இந்த பிறழ்வுகள் காரணமாக குடும்பப் பெண்களும் சிறுமிகளுமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில பாடசாலை மாணவிகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தப் பாதிப்புகள் தொடர்கதையாக இருக்கின்றன.

யாழ்பாணத்திற்கு வெளியிலிருந்து வருகின்ற இளைஞர்களின் திருமண ஆசை வார்த்தைகளுக்கு அடிமையாகிய இளம் பெண்கள் பலர் பின்னர் ஏமாற்றப்பட்ட நிலையில் சட்டவிரோத கருக்கலைப்புச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடாநாட்டில் பிரதேச மட்டங்களிலுள்ள சட்டவிரோத கருக்கலைப்பாளர்களிடமே இவர்கள் கருக்கலைப்பு செய்துகொள்வதாகவும் தெரியவந்துள்ளது. இந்தச் சட்டவிரோத கருக்கலைப்புச் செய்பவர்களைக் கண்டறிந்து அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்தில்லையென்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு போன்றவற்றின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களாக இருக்கின்ற போதிலும் அவர்கள் வாழாவிருப்பதாகவும் பொலிஸாரும் ஏனோதானோ என்ற மனப்பான்மையையே கடைப்பிடிப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  

இதேவேளை பிரதேச மட்டத்தில் யௌவனப் பருவ குடும்பத் திட்டமிடல் முறைகள் தொடர்பான விழிப்புணர்வு இன்மையும் இவ்வாறான சட்டவிரோத கருக்லைப்புக்கு காரணமாக அமைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

தென்னிலங்கையில் உள்ள சிங்களவர்கள் எத்தனை பிள்ளைகளையும் பெற்றுக்கொள்ள முடியுமென்று அங்குள்ள சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரிகள் கூறிவருகின்ற நிலையில் யாழ்.குடாநாடு உள்ளிட்ட தமிழர் தாயகப் பிரதேசங்களில் இதற்கு மாறாக இடம்பெறுகின்ற கருக்கலைப்புக்களை தடுப்பதற்கு தமிழ் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லையென்று தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

தமிழ் அதிகாரிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் அடிவருடிகளாகச் செயற்படாமல் இனமான உணர்வோடு செயற்பட்டு எமது இனத்தை வீழ்ச்சிப் பாதையிலிருந்து மீட்க முன்வர வேண்டுமென தமிழ்க் கல்விமான்களும் தமிழ்த் தேசியப் பற்றாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://www.sankathi24.com/news/31694/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.