Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை பிரச்சனை : கருணாநிதியுடன் பிரதமர் தூதர் சந்திப்பு

Featured Replies

இலங்கை பிரச்சனை : கருணாநிதியுடன் பிரதமர் தூதர் சந்திப்பு!

புதன், 9 ஆகஸ்ட் 2006 (13:45 ஐளுகூ)

சென்னை வந்துள்ள பிரதமரின் ஆலோசகர் எம்.கே. நாராயணன் தமிழக முதலமைச்சர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து இலங்கை இனப்பிரச்சனை குறித்து பேசினார்!

இலங்கை அயலுறவு அமைச்சர் மங்கள சமரவீர இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி வந்து முக்கிய அமைச்சர்களை சந்தித்துப் பேசினார். இலங்கை இனப்பிரச்சனைக்கு ராணுவ ரீதியில் தீர்வு காண முடியாது என்று அவரிடம் அயலுறவு துணை அமைச்சர் ஈ. அகமது வலியுறுத்தினார்.

இந்த நிலையில், இலங்கை இனப்பிரச்சனையில் இந்திய அரசின் அணுகுமுறையை விளக்கவும், அதன் மீது தமிழக அரசின் கருத்தை அறியவும் பிரதமரின் ஆலோசகர் எம்.கே. நாராயணன், தமிழக முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

45 நிமிடம் நடந்த இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.கே. நாராயணன், பிரதமரின் தூதராக வந்துள்ளதாகவும், இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக அந்நாட்டு அரசுடன் இந்திய அரசு நடத்திவரும் பேச்சுவார்த்தை குறித்தும், மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சரிடம் விளக்கியதாகக் கூறினார்.

இந்தியா வந்த இலங்கை அயலுறவு அமைச்சர் மங்கள சமரவீரவிடம், தமிழர்களின் பாதுகாப்பிற்கு இலங்கை அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் ஒரே விதமாக அணுகக்கூடாது என்று கூறப்பட்டதாகவும் நாராயணன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக அந்நாட்டு அரசுடன் நேரடி பேச்சவார்த்தை நடத்தும் திட்டம் ஏதுமில்லை என்று கூறிய நாராயணன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் தமிழ்நாட்டிற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறினார்.

http://www.webulagam.com/news/regional/060...060809009_1.htm

45 நிமிடம் நடந்த இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.கே. நாராயணன், பிரதமரின் தூதராக வந்துள்ளதாகவும், இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக அந்நாட்டு அரசுடன் இந்திய அரசு நடத்திவரும் பேச்சுவார்த்தை குறித்தும், மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சரிடம் விளக்கியதாகக் கூறினார்
.

இதைச்சொல்லவா இவளவு தூரம் வரனும் :roll: :?: :idea:

  • தொடங்கியவர்

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வளிக்க இலங்கை அரசு ஒப்புதல் - நாராயணன்!

புதன், 9 ஆகஸ்ட் 2006 (17:54 ஐளுகூ)

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வளித்து இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண சிறிலங்க அரசு சம்மதம் தெரிவித்துள்ளது என்று பிரதமரின் தூதராக சென்னை வந்துள்ள எம்.கே. நாராயணன் கூறினார்!

இலங்கை இனப் பிரச்சனையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் கருணாநிதியிடம் விளக்கிய பிரதமரின் ஆலோசகர் நாராயணன், 45 நிமிட சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண சிறிலங்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் இந்தியா ஒரு முக்கிய அம்சமாக உள்ளது என்று கூறிய நாராயணன், ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண சிறிலங்க அரசு சம்மதித்துள்ளது என்று கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் தலைநகர் டெல்லிக்கு வந்த இலங்கை அயலுறவு அமைச்சர் மங்கள சமரவீராவிடம் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை குறித்தும், இலங்கையில் தற்பொழுதுள்ள சூழ்நிலை குறித்து மத்திய அரசின் கருத்து குறித்தும் முதலமைச்சரிடம் தான் விளக்கியதாக நாராயணன் கூறினார்.

இலங்கை இனப் பிரச்சனையில் மத்திய அரசிற்கும், தமிழக அரசிற்கும் இடையே முழுமையான ஒத்த கருத்து உள்ளது என்று கூறினார்.

இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்தியா நேரடியாக தலையிடுமா என்று கேட்டதற்கு, இந்தியாவின் நேரடித் தலையீடு என்பதற்கான சாத்தியம் ஏதுமில்லை. இந்தியா ஒரு பெரிய நாடு. எனவே அதன் வற்புறுத்தல்களுக்கு அனைவரிடம் முக்கியத்துவம் உள்ளது. அதனால்தான் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு கூட நம்மிடம் பேசி வருகிறது என்று கூறினார்.

விடுதலைப் புலிகளால் தமிழ்நாட்டிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று கூறிய நாராயணன், அவர்களும் ஓரளவிற்கு இந்தியாவின் ஆதரவை எதிர்பார்த்துத்தான் உள்ளார்கள் என்று கூறினார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை விவாதத்திற்குரியது என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "விடுதலைப் புலிகளை ஒரு அபாயகரமான இயக்கமாகத்தான் கருதுகிறோம். அதனால்தான் அதன் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. அது குறித்து மத்திய அரசிற்கு எவ்வித சந்தேகமும் இல்லை" என்று நாராயணன் கூறினார்.

http://www.webulagam.com/news/regional/060...060809027_1.htm

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வளிக்க இலங்கை அரசு ஒப்புதல் - நாராயணன்!

அதிகாரப் பகிர்வு கொடுப்பதை விட இப்படி சொல்லி மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களையும் தமிழ்நாட்டு அரசையும் ஏமற்றுவது எனக்கு தெரியவில்லை :roll: :P :?:

தலை,நாரதர், தூயவா, டன்,சாத்திரி,வசி,வர்னன், நேசன்,அகிலன்,சுபி, யாருக்கவது புரியுதா? எனக்கு புரியவில்லை ஒருக்கா விளங்க படுத்த முடியுமா :P

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா என்னும் புரியவில்லையா?

ஆட்லறிப் பகிர்வு என்பதைத் தான் வாய் தவறிச் சொல்லி விட்டாராம். நேற்றும் 8 அப்பாவித் தமிழர்கள் ஆட்லறித் தாக்குதலால் கொல்லப்பட்ட செய்தி அறியவில்லையா?

ஏன் பேச்சு வார்த்தையை கொழும்புவில் நடத்தலாமே.. அப்புறம் ஏன் சுவிஸ் செல்ல வேண்டும்.. அப்ப ஏன் இது போல கேள்வி கேட்கவில்லை?? :(

தொலைபேசி இந்தியா முழுவதும் வேலை செய்ய வில்லையாம் அதுதான் நேர வந்து சொல்லி போட்டு போறார்.

இ.மெயில் போட்டால் கலைஞர் கணினி பாவிக்க தெரியாது எண்டு சொல்லிப்போட்டாராம். அப்ப நேர வந்து சாப்பிட்டு சொல்லி போட்டு போறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு புறாவை தூது அனுப்பி இருக்காலம் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இலங்கைப் பிரச்சினை போல இந்தியாவிலயும் பிரச்சினை இருக்கிறதா:roll:

ஒரு புறாவை தூது அனுப்பி இருக்காலம் :lol

அதை அடிச்சி சாபிட்டா என்ன பன்னுவாங்க.. உக்காந்து யோசிப்பாங்களோ :(

மரியாதை என்பது சிறியோர் பெரியோரை நேரில் சென்று பார்பது தான்..இதில் என்ன தவறு கண்டீர்?

அப்ப இலங்கைப் பிரச்சினை போல இந்தியாவிலயும் பிரச்சினை இருக்கிறதா:roll:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரைய்யா தவறு கண்டது :roll:

மரியாதை என்பது சிறியோர் பெரியோரை நேரில் சென்று பார்பது தான்..இதில் என்ன தவறு கண்டீர்?

முதலே சேத்துப் போட்டிருக்கணும். :)

ஏன் பேச்சு வார்த்தையை கொழும்புவில் நடத்தலாமே.. அப்புறம் ஏன் சுவிஸ் செல்ல வேண்டும்.. அப்ப ஏன் இது போல கேள்வி கேட்கவில்லை?? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பிகளா அண்ணை ஏற்கனவே சொல்லியிருக்கிறன் இங்கை சண்டை பிடிக்கப்படாது என்டு. வீணாக என் கோவத்திற்கு ஆளாகாதீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.