Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

4 லச்சம் கோடி ஊழலா? சோனியா குடும்பம், 4 லச்சம் கோடி ஊழல் பண்ணியதாக சொல்லப்படுகிறது படுகிறது

Featured Replies

  • 4 லச்சம் கோடி ஊழலா? 

    சோனியா குடும்பம், 4 லச்சம் கோடி ஊழல் பண்ணியதாக சொல்லப்படுகிறது படுகிறது !!!!!!?

    கருணாநிதி குடும்பத்தை , சோனியா குடும்பம், ஊழலில் தோற்கடித்து விட்டதால், ல், உலக ஊழல் செய்தவர்களில், முதலாம் இடத்தை - சோனியா குடும்பமே பெறுகிறார்கள். 

    நக்கீரன் . பத்திரிகை:

    றைந்த விலைக்கு விற்கப்பட்ட இந்த நிலத்தின் மூலம் ராபர்ட் வதேரா ஒரு ஏக்கருக்கு ரூ.15.78 கோடி சம்பாதித்து இருந்ததாகவும், இதன் அடிப்படையில் கணக்கிட்டால் மொத்த நிலத்தின் மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.3.5 லட்சம் கோடியைத் தாண்டும் என்றும், அந்த கடிதத்தில் கெம்கா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    நில மோசடியில் சோனியா காந்தியின் மருமகன்! ஐ.ஏ.எஸ். அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையில் பரபரப்பு குற்றச்சாட்டு!

    அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வர் பூபிந்தர்சிங் கோடா முதல்வராக இருந்து வருகிறார். குர்கான் அருகே ஷிக்கோபூர் கிராமத்தில் 3. 5 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானதாக இருந்தது. இந்த நிலம் முதன்முதலில் டி.எல்.எப்., என்ற நிறுவனத்திற்கு குறைந்த விலையில் விற்கப்பட்டது. அதாவது சுமார் 200 கோடி மதிப்புள்ள இந்த நிலம் வெறும் 7. 5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. 

    இந்த விவகாரம் குறித்து கடந்த ஆண்டு அன்னா ஹசாரேயின் நெருங்கிய நண்பர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இது தொடர்பாக சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் குழுவை சேர்ந்த பிரசாந்த்பூஷண் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் சோனியா மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா, டி.எல்.எப். என்ற நிறுவனத்திடமிருந்து சொத்து வாங்கியுள்ளார். இந்த நிலம் முன்னதாக அரியானா மற்றும் டில்லி அரசிடம் இருந்து பெறப்பட்டது.

    ரூ. 250 கோடி மதிப்பிலான இந்த சொத்தை ரூ. 50 லட்சம் கொடுத்து பெற்றுள்ளார். தலா ஒரு ஏக்கருக்கு ரூ.100க்கும் குறைவான மதிப்பை காட்டி ஊழல் செய்துள்ளார். இது தொடர்பான பத்திரப்பதிவுக்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. இதன் மூலம் ராபர்ட் வதேரா முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு அவர் குற்றம்சாட்டினர். 

    அரசியல் ரீதியாக இந்த ஊழல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், அதுகுறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அரியானா மாநில அரசு நியமித்தது.

    இந்த ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா, மூன்று பேர் குழுவிடம் தற்போது அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறார். அதில், போலியான ஆவணங்களை கொடுத்து ராபர்ட் வதேரா மோசடியில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

    அதில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது-

    “ராபர்ட் வதேரா நிறுவனத்திற்கு நிலம் விற்கப்பட்டதில் முறையான சட்டவிதிகள் பின்பற்றப்படவில்லை. மாநில அதிகாரிகளும், நகர்ப்புற அதிகாரிகளும் சோனியாவை திருப்திப்படுத்தும் விதத்தில் செயல்பட்டு இருக்கிறார்கள். ராபர்ட் வதேரா அரசுக்கு தவறான தகவலை கொடுத்ததன் மூலம் பத்திரப்பதிவு துறையை ஏமாற்றி இருக்கிறார். இதன் மூலம் பலகோடி ரூபாய் பணத்தை வதேரா சம்பாதித்து இருக்கிறார்”.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையின் மூலம் ராபர்ட் வதேராவுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    இந்த அறிக்கை குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி கெம்கா செய்தியாளர்களுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். இந்த அறிக்கையை பரிசீலித்து வருவதாக, அரியானா மாநில தலைமை செயலாளர் பி.கே.சவுத்ரி கூறி இருக்கிறார்.

    முன்னதாக, அதிகாரி அசோக் கெம்கா நகர்ப்புற அதிகாரிகளுக்கு எழுதி இருந்த கடிதத்தில், அரியானா முதல்-மந்திரியாக புபேந்தர்சிங் ஹூடா தலைமையிலான 8 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின்போது 2 லட்சத்து 13 ஆயிரத்து 666 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் குடியிருப்பு லைசென்சுள் வழங்கப்பட்டு இருந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

    குறைந்த விலைக்கு விற்கப்பட்ட இந்த நிலத்தின் மூலம் ராபர்ட் வதேரா ஒரு ஏக்கருக்கு ரூ.15.78 கோடி சம்பாதித்து இருந்ததாகவும், இதன் அடிப்படையில் கணக்கிட்டால் மொத்த நிலத்தின் மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.3.5 லட்சம் கோடியைத் தாண்டும் என்றும், அந்த கடிதத்தில் கெம்கா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
    972334_704859026207849_274739326_n.jpg
    1150380_704859072874511_1730716015_n.jpg
    1000947_704859119541173_1791359407_n.jpg
     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

https://www.facebook.com/raavanan/posts/704859149541170

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முறை முதல்வராக கருணாநிதி வந்தால்... இந்த ஊழலை முறியடித்து விடுவார்.

இவர்கள் அழிவுப் பாதையில் செல்வது யாருக்கு நல்லது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.