Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுரையில் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள தமிழ் தாய் சிலை நிறுவ இடம் தேடுதலில் குழப்பம் நீடிக்கிறது.

Featured Replies

128h_-_Copy.jpgமதுரையில் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள தமிழ் தாய் சிலை நிறுவ இடம் தேடுதலில் குழப்பம் நீடிக்கிறது. வைகை நதிக்கரை ஓரம் துவரிமான் கண்மாயில்
திடீர் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மதுரையில் ரூ.100 கோடியில் 160 அடி உயரமுள்ள தமிழ்த்தாய் சிலையும், அதை சுற்றிலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களின் மாதிரி தோற்றம், தமிழ்த்தாய் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கடந்த மே மாதம் அறிவித்தார். 
 
தமிழ்த்தாய் சிலையும் தண்ணீருக்கு நடுவில் அழகிய இடத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடந்த 3 மாதங்களாக கலெக்டர் மற்றும் பொதுப்பணித் துறையினர் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். முதலில் வண்டியூர் கண்மாய் ஏற்றதாக இருக்கும் என கருதப்பட்டது. 600 ஏக்கர் பரப்பிலான கண்மாயின் நடுவில் 1981,ல் குட்டித் தீவு அமைத்து படகு போக்குவரத்துடன் சுற்றுலா மையமாக்க திட்டமிட்டு ஆரம்ப கட்ட பணிதுவங்கி இடையில் நிறுத்தப்பட்டது. இதனால் இங்கு சிலை நிறுவுவது சாத்தியமா? என கேள்வி எழுந்தது.
 
இதன்பிறகு திருப்பரங்குன்றத்திலுள்ள தென்கால் கண்மாயில் ஆய்வு நடந்தது. இது இயற்கை எழில் மிகு தோற்றத்துடன் அமைந்துள்ளதால் ஏற்ற இடமாக கருதப்பட்டது. ஆனால் முடிவு ஏற்படவில்லை. இது தவிர மதுரை மாடக்குளம், செல்லூர், நிலையூர் கண்மாய், உசிலம்பட்டி விளாத்தூர், எஸ்.புளியங்குளம், திருமங்கலம் அருகிலுள்ள கண்மாய்கள் உள்பட மொத்தம் 20 கண்மாய்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால் இன்னும் சிலை அமைக்க உத்தேசித்துள்ள இடம் எது? என முடிவு செய்யப்படவில்லை. 
 
தெற்கு கோபுரம் 160 அடி, மேற்கு கோபுரம், 154 அடி, கிழக்கு கோபுரம் 153 அடி, வடக்கு கோபுரம் 152 அடி உயரமுள்ளன. எனவே 160 அடி உயர தமிழ் தாய் சிலைக்கு மதுரை நகருக்குள் இடத்தை தேர்வு செய்வது சாத்தியமாகுமா? என அதிகாரிகளிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது. இந்த நிலையில் தற்போது வைகை நதிக்கரை ஓரமாக அமைந்துள்ள மதுரையை அடுத்த “துவரிமான்’’ கண்மாயில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் திடீர் ஆய்வு நடத்தி உள்ளனர். 
 
இதன் ஒரு பக்கம் வைகை ஆறு அமைந்துள்ளதால், அங்கிருந்து தண்ணீர் வர வாய்ப்புள்ளது. மற்றொரு பக்கம் வரலாற்று சிறப்பு மிகுந்த நாகமலை, புல்லூத்து அமைந்துள்ளது. போக்குவரத்துக்கு ஏற்றதாக கண்மாயின் நடுவில் தேசிய நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது. இந்த கண்மாயின் முழு விவரம், சிறப்புகள் குறித்து அறிக்கை தயாரித்து விரைவில் அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. இன்னும் சிலை அமையும் இடம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. 
 
சுதந்திரதேவி சிலை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லிபர்ட்டி தீவில் அமைந்துள்ளது. இதன் மொத்த உயரம் 305 அடி. இதில் சிலை உயரம் 151 அடி. பீடத்தின் உயரம் 154 அடி. சிலைக்கு படகில்தான் செல்ல வேண்டும்.
 
128h.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.