Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காந்தியும் நித்தியானந்தாவும்

Featured Replies

1173748_224028507751183_1327012139_n.jpg

காந்தியும் நித்தியானந்தாவும்

இந்த இரண்டு நபருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு, மன்மதலீலைக் கதைகள் இவர்களுக்கு உண்டு, காமத்தை அடக்காமல் மன்மதலீலைகளில் ஈடுபட்டவரை மகாத்மா என்கிறார்கள். மேலும் காந்தியை ஆன்மீகவாதி என்றால் அவரும் நித்தியானந்தாவைப் போன்றே ஒரு போலிச் சாமி என்பதே உண்மை. காந்தி உண்மையில் சிறந்த சுதந்திரப் போராட்டக்காரர் ஆனால் அவரொரு ஆன்மீகவாதி அல்லது மகாத்மா என்று கூறுவது அவருக்குப் பொருத்தமற்றது. உள்ளதில் காமம் இல்லாமல் உள்ளத் தூய்மை கொண்டோரே ஆன்மீகவாதி அல்லது மகாத்மா என்று கூறவேண்டும்.

அண்மையில் இந்தியா டுடேயில் காந்தியைப் பற்றிய மன்மதலீலைக் கதைகள் அப்பட்டமாக வெளிவந்திருக்கிறது. காந்திக்கு இரண்டு இளம் பெண்கள் தேவை அவர்களின் தோள்களில் தனது கையைப் போட்டுக் கொண்டு நடப்பதற்கு. அது மட்டுமல்ல அவருக்கு பணிவிடைகள் செய்வதற்கும் இளம்பெண்களே தேவைப்பட்டார்கள். காந்தியின் காலகட்டத்தில் ஆண் இளைஞர்கள் இருக்கவில்லை போல? காந்தியைப் பற்றி இந்தியா டுடேயில் வெளியாகியது தொடர்பாக ஒருவர் எழுதியதனைப் பாருங்கள்.

மகாத்மா காந்தி பற்றி இந்த வாரம் வெளிவந்த இந்தியாடுடே பல விசயங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி விட்டது. இந்தியா டுடேயில் பென்னிப்பென் என்ற பெண் உதவியாளர் டைரியில் குறிப்பிட்டிருந்தவற்றை கட்டுரை ஆக்கியிருக்கிறார்கள். 

காந்தி தனக்கு பணிவிடை செய்ய நிறைய இளம்பெண்களை ஆசிரமத்தில் தங்க வைத்திருந்தார், அவர்களை ஷிப்ட் முறையில் இரண்டு இரண்டு பேராக தனது வலது இடது பக்கத்தில் ஒரே படுக்கையறையில் படுக்க வைத்துக்கொள்வார்.. அணைப்பார்.. சில்மிசம் செய்வார்.. பெரும்பாலும் நிர்வாணமாகதான் தன் பக்கத்தில் படுக்க வைத்துக்கொள்வார்.. அவர்கள் உணர்ச்சி வசப்படாமல் இருக்கின்றனரா என டெஸ்ட் செய்வாராம் இதற்கு பெயர்... பிரம்மச்சர்ய பரிசோதன என பெயரும் வைத்திருக்கிறார்.. தன்னை தினசரி ஒரு பெண் குளிப்பாட்ட வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்.. குளிக்கப்படும் அந்த பெண் உடையில்லாமல் இருக்க வேண்டும். அப்படி குளிப்பாட்டிய சுசீலா நாயர் காந்தி இறந்தபின் சுதந்திர இந்தியாவில் இரு முறை சுகாதார மந்திரியாக இருந்தார். 

பிரம்மச்சர்ய டெஸ்டை பெண்களிடம் காட்டிய காந்தி ஆண்களிடம் அதனைக் காட்டவில்லை. காந்தியின் பாலுணர்வு பரிசோதனையை கண்டித்து மொரார்ஜி தேசாயும், வல்லபாய் பட்டேலும் உடனே இதை நிறுத்தும்படி காந்திக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். இது இன்னும் ஆவண காப்பகத்தில் இருக்கிறது. சரி இந்த தகவல்கள் எப்படி வெளிவந்தது? காந்தி இரு பெண்களை தாங்கி நிற்கும் புகைப்படம் அடிக்கடி பார்த்திருப்போம். அந்த பெண்களில் ஒருவர்தான் மனுப்பெண். அவரது டைரி இப்போது இந்தியா டுடேவுக்கு கிடைத்திருக்கிறது மொத்தம் 14 டைரி. எல்லாமே பாபுவின் லீலைகள் தான்....பாபு..? அதான் நம்ம மகாத்மா..!!

என்று எழுதியிருந்தார் ஒருவர். 

இன்று வீடியோக் கமரா வசதிகள் இருந்தமையினால் நித்தியானந்தாவின் மன்மதலீலைகள் வெளிவந்தன, அன்று காந்தியின் காலத்தில் இப்போதுள்ள தொழில்நுட்ப வசதிகள் இருக்குமாயின் அவரின் மன்மதலீலைகளும் வெளிவந்திருக்கும். ஆனால் தற்போது இந்தியா டுடேயில் காந்தியின் மன்மதலீலைகளைப் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.

மகாத்மா காந்தி எங்கள் தேசப் பிதா என்று ஒழுக்கமில்லாதவரை கண்கெட்ட, புத்தி பிசங்கிய தமிழ் நாட்டவர்கள் கூறுகிறார்கள். காந்திக்கும் தமிழினத்திற்கும் என்ன தொடர்பு? காந்தி இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தமையினால் தமிழ் நாட்டிற்கு ஏற்பட்ட நன்மை என்ன? விலைமாதர்களும், விலைமாத விடுதிகளும் தமிழகத்தில் அதிகரித்துச் சென்றது தான் சாதனை. மேலும் தமிழ் நாடு குடிகார நாடாக அந்நியர் சக்திகளின் ஆட்சியால் மாற்றப்பட்டதும் சாதனை தான். மேலும் வடவன் தமிழர் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சிதைத்து தமிழர்களின் அடையாளத்தையும் அழித்தான்.

எனது இனத்திற்கு எந்தவகையிலும் தொடர்பற்ற ஹிந்தி மாமாக்களையும், காமக் கொடூரர்களையும் தமிழ் நாட்டில் உள்ள புத்தி பிசங்கிப் போன கழுதைக் கூட்டங்களால் போற்றப்படுகிறார்கள். ஆனால் தனது இனத்திற்காகப் போராடிய ஒழுக்கமிக்க உத்தமர்களை இந்த மூடர்கள் தூற்றுகிறார்கள். 

தமிழகத்தில் இந்திய சுதந்திரதத்திற்காகப் போராடிய பெரியவர்கள் கூறுகிறார்கள் நாங்கள் வெள்ளையர்களிடமிருந்து போராடி சுதந்திரத்தைப் பெற்றோம் என்கிறார்கள், இவர்கள் யாருக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தார்கள்? உண்மையில் இவர்கள் வடவனுக்குத் தான் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தார்கள். ஆங்கிலேயரின் அடிமைத்தனத்தில் இருந்து கைமாறி வடவனின் அடிமைகளாக மாறினார்கள் என்றால் அது மிகையாகாது. இந்தியனாக இருப்பதனால் தமிழினம் என்ற அடையாளம் அழிக்கப்படுகிறது.

லிங்கேஸ்வரன் விஸ்வா

https://www.facebook.com/photo.php?fbid=224028507751183&set=a.132489753571726.30708.100004321056145&type=1

அதனால் தான் இவர்கள் சிங்களவன் பின்னால் அலைகிறார்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.