Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சண்டேலீடர் ஊடகவியலாளர் மண்டனா ஸ்மாயிலிற்கான கொலைமிரட்டல் கொள்ளை முயற்சியாகி இருவர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சண்டேலீடர் ஊடகவியலாளர் மண்டனா ஸ்மாயிலிற்கான கொலைமிரட்டல் கொள்ளை முயற்சியாகி இருவர் பலி

 

குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் - 2ஆம் இணைப்பு –

 

 

இன்று அதிகாலை பம்பலப்பிட்டியவில் இடம்பெற்ற கொள்ளை முயற்சி என வெளியாகிய சம்பவம் இடம்பெற்றது பிரபல ஊடகவியலாளர்  மண்டனா ஸ்மாயில் அபயவிக்கிரமவின் வீடு என கொழும்பில் உள்ள குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். சண்டே லீடர்  ஆங்கிலப்பத்திரிகையின் ஊடகவியலாளரும், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினரும், ஊடக தொழிலாளர் சம்மேளனத்தின்(FLIT) தலைவருமான மண்டனா ஸ்மாயில் அண்மையில் அமரிக்க தூதரக அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்பற்றியும் முக்கிய கருத்துரைகளை வழங்கியவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊடக ஒடுக்கு முறை என்பவற்றிற்கு எதிராக அண்மைய நாட்களில் கடுமையாக விமர்சனம் செய்து வந்ததுடன் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைபற்றியும் அவரது நினைவுகளையும் பகிர்ந்து வருபவர். 

 

இவ்வாறான ஒரு பின்னணியில் இன்று கொழும்பின் முக்கிய நகரப் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் உண்மையில் கொள்ளை முயற்சியா அல்லது வழமையான ஊடகவியலாளர்களுக்கு எதிரான இலங்கையின் புலனாய்வுப் பிரிவினரின் மிரட்டலா என்ற சந்தேகம் வலுப் பெற்றுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாவுச் செய்தியார் தெரிவித்துள்ளார்.

 

வழமையாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் விசேட  புலனாய்வுப் பிரிவின்  இரகசிய நடவடிக்கைகள் அப்பிரதேச பொலிசாருக்கோ, வேறு படைத் தரப்புகளுக்கோ தெரிவதில்லை. சிவில் உடையில் செல்லும் புலனாய்வாளர்கள் கடத்தல், மற்றும் கொலை முயற்சிகளை செய்து லாவகமாகச் செய்து தப்பிச் சென்று விடுவார்கள். 

 

ismail.jpg

அதனால் இன்றைய சம்பவத்தில் குறித்த ஊடகவியலாளர் வீட்டிற்கு சென்ற குழுவினர் கொள்ளையர்கள் போல் நடக்க முற்பட்டாலும் அவரின் பிள்ளையிடம் உன் அம்மா என்ன வேலை செய்கிறார்? ஊடகவியலாளரா? என்ற கேள்விகளை தொடுத்துள்ளதாகவும் ஆவணக் கோவைகளை பரீட்சித்துப் பார்த்ததாகவும் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகிறது. இந்த நிகழ்வுகள் தொடர்ந்த வேளையில் இலங்கையில் அவசர சேவை இலக்கமான பொலிசாரின் 119 என்ற இலக்கத்திற்கு மண்டனா ஸ்மாயில் அழைப்பை எடுத்து தனது வீட்டில் கொள்ளை இடம்பெறுவதாக அறிவித்த உடன் பொலிஸார் விரைந்து செயற்பட்டதனால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு 2 பேர் பலியாகி 6 பேர் காயத்திற்கு உள்ளாகி உள்ளனர். பொலிஸார் கொள்ளையர்கள் என நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மரணமானவர்கள் இரகசிய ஆட்கடத்தல் மற்றும் கொலைகளை செய்யும் இரகசிய புலனாய்வுப் பிரிவினரே என கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. பாதுகாப்பு அமைச்சின் அதி உயர் நிறைவேற்று அதிகாரியின் உத்தரவிலேயே இவர்கள் மண்டனா ஸ்மாயில் வீட்டுக்குச் சென்றதனை அவசர பொலிஸ் பிரிவு அறிந்திருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முழுமையான சுயாதீன விசாரணைகள் இடம்பெற்றால் உறங்கிக் கட்க்கும் பல உண்மைகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பம்பலப்பிட்டியவில் ஊடகவியலாளர் வீட்டில் கொள்ளை முயற்சி – ஒருவர் பலி - இது ஒரு அச்சுறுத்தலா?
முதலாம் இணைப்பு 1:56 AM
 
கொழும்பு பம்பலபிட்டி  மிலாகிரிய டிக்மன் வீதியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டில்  இன்று அதிகாலை கொள்ளையிடச் சென்ற குழுவுக்கும் பொலிஸாருக்கும்; இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு பொலிஸார் உட்பட ஏழு பேர் காயமடைந்தனர் என குளோபல் தமிழ்ச்செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
 
ஐந்துபேர் கொண்ட குழுவினர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளையர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்டபோது கொள்ளையர்கள் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோம் செய்யததாகவும் இதனால் கொள்ளையர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் நான்கு கொள்ளையர்கள் படுகாயமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
 
கொள்ளையர்களின் தாக்குதலில் மூன்று பொலிஸார் உத்தியோகத்தர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
 
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள கொள்ளையர் ஒருவரிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் என குளோபல் தமிழ்ச்செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
 
இந்த சம்பவம் உண்மையில் கொள்ளைதானா அல்லது குறித்த ஊடவியலாளரை அச்சுறுத்தும் நடவடிக்கையா என்று ஊடகவியலாளர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95662/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.