Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழ்வே வதையாய்த் தமிழினம்! - கந்தரதன்

Featured Replies

வடக்கில் வன்முறையாகும் தேர்தல் தொடர்பாகக் கடந்தவாரம் இப்பகுதியில் பார்த்தோம். தொடர்ந்து தேர்தல் தொடர்பான வன்முறைகள் அங்காங்கே இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு சிறீலங்கா இராணுவத்திற்குத் துணைபோகும் அடிவருடிகள் முன்னுதாரணமாகச் செயற்பட்டுவருகின்றமை கொடுமை.

army%20neduntevu.jpg

அதாவது யாழ். தீவகப் பகுதியான நெடுந்தீவில் கூட்டமைப்பு ஆதரவாளர்களின் வீடுகளுக்குள்ளே சிறீலங்கா இராணுவத்தினரின் கைக்கூலிகளான ஈ.பி.டி.பி குண்டர்கள் புகுந்து அட்டகாசம் செய்ததில் பெண் உட்பட மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். குறித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவமானது கடந்தவாரம் இரவுவேளை, நெடுந்தீவு மேற்கிலுள்ள ஒற்றைப்பனையடியில் இடம்பெற்றுள்ளது. நெடுந்தீவில் மிக அண்மையில் கூட்டமைப்பின் கிளை அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மாகாண சபைப் பிரசாரப் பணிகளை கூட்டமைப்பினர் மேற்கொண்டு வந்தனர். ஈ.பி.டி.பியின் பிரதேசச் சபைத் தவிசாளர் ரஜீப் தலைமையில் பிரதேசச் சபை வாகனத்தில் ஈ.பி.டி.பி உறுப்பினர்களான சுதன், மோகனதாஸ், எட்வேட்ராஜா ரஞ்சன், வாகனச் சாரதி அப்பன் ஆகியோரும் பிரதேசச் சபைக்கு சொந்தமான மேலும் பல வாகனங்களில் மேலும் பல குண்டர்களும் இணைந்தே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நெடுந்தீவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருக்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தவர்கள் மீதே ஒட்டுக்குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை நிலையத்தில் முறைப்பாட்டினைப் பதிவு செய்யச் சென்றபொழுது விசாரணைகளை ஏற்கமுடியாதென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்திற்கு சிறீலங்கா காவல்துறையினரும் உடந்தையாக உள்ளமை வெட்டவெளிச்சமாகியுள்ளது. இச் சம்பவங்கள் தொடர்பாக எந்தவொரு முறைப்பாடும் இன்னமும் பதிவு செய்யப்படவில்லையென யாழ்.மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் தொடர்ந்து நான்கு நாட்களாக வட மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ள நிலையிலேயே இவர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் ரணசிங்க ஆரியக்கோன் (வயது 40) என்ற நபர் கடுமையான காயங்களுக்கிலக்காகிய நிலையில் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சைமன் ஜேசுதாஸன், ஜேசுதாஸன் அன்டனிட்டா ஆகியோர் மீதும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மன்னார் மாவட்டத்தில் வடமாகாண சபைத் தேர்தலுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் குறித்த விபரங்களை சிறீலங்கா புலனாய்வுத் தரப்பினர் திரட்டி வருகின்றனர் இரண்டு பிரிவுகளாக சென்று இவ்வாறு தகவல்கள் திரட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலும் இரவு வேளைகளில் வேட்பாளர்களின் வீடுகளுக்க செல்லும் அவர்கள் மத்திய புனாய்வு தரப்பினர் என்றும், மற்றுமொரு தரப்பு மன்னார் மாவட்ட இராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்தியே குறித்த தகவல்களை பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் கல்வித் தகைமைகள், முன்னர் படித்த பாடசாலை, வெளிநாடுகளில் இருந்திருந்தால், அது குறித்த விபரம் மற்றும் வெளிநாட்டு உறவினர்கள் குறித்த விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன. இதனால், வேட்பாளர்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளது. இது இவ்வாறிருக்க, சிறீலங்கா இராணுவத்தினரின் அடாவடிகளும் ஓய்ந்தபாடில்லை. பரந்தன் பகுதியில் வைத்து இளைஞன் ஒருவரை சிறீலங்கா இராணுவத்தினர் மூர்க்கத்தனமாக தாக்கியதில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் பரந்தன் 160 ஆம் கட்டை பரந்தனைச் சேர்ந்த ச.பிரகாஷ் (வயது 27) என்ற இளைஞரே காயமடைந்தவர் ஆவார். தென்னிலங்கையில் இருந்து வந்த சிங்களவர்களுடைய வாகனத்தின் சாரதி முறைதவறி வீதியில் திருப்ப முற்பட்டவேளை பரந்தனைச் சேர்ந்த குறித்த இளைஞர் விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. எனினும் குறித்த இளைஞர் சுதாகரித்துக் கொண்டதால் விபத்தில் இருந்து தப்பித்துள்ளார். இதனால் முறைதவறி, வாகனத்தினை செலுத்திய சிங்களச் சாரதியினைக் குறித்த இளைஞர் ஏசியுள்ளார். இதனால் கோபமடைந்த சிங்கள சாரதி அருகில் இருந்த சிறீலங்கா இராணுவத்தின் முகாமிற்குச் சென்று முறையிட்டுள்ளார். முகாமிற்குள் இருந்து வந்த சிறீலங்கா இராணுவத்தினர் பரந்தனைச் சேர்ந்த இளைஞரிடம் எந்தவிதமான விசாரணையும் மேற்கொள்ளாமல் கைகளைப் பின்புறமாகக் கட்டிவைத்துத் தாக்குதல் மேற்கொண்டு, எச்சரித்துச் சென்றுள்ளனர். இத்தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் தற்போது சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கிளிநொச்சி பூநகரிப் பிரதேசத்தில் சிறிலங்காப் படையினரால் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பாலியல் வல்லுறவுக்குட்பட்டவர் பனை ஓலையில் பொருட்கள் செய்து விற்கும், 38 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த சிலநாட்களுக்கு முன்னர் மாலை 4.30 மணியளவில் பனை ஓலை எடுப்பதற்காக வந்திருந்த இரு படையினரே முகத்தைத் துணியினால் மறைத்துக் கட்டியபடி இப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

குறித்த பெண் கடும் இரத்தப்போக்குக் காரணமாக முதலில் பூநகரி மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு தாயகத்தில் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா படையினரதும் அதன் ஆதரவுக் குழுக்களினதும் வன்கொடுமைகள் தொடர்கின்றன.

உலகெங்கும் வாழ் தமிழ் உறவுகளே இது உங்களின் கவனத்திற்கு!

நீங்கள் ஓய்ந்து இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் சிறீலங்கா இனவாதத்திற்கு சாதகமே. சிந்தியுங்கள்!

செயற்படுங்கள்!!

(சூறையாடல்கள் தொடரும்)

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/32539/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.