Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்தின் சதித்திட்டங்களை தகர்த்தெறிய எமது முழுப்பலத்தையும் பிரயோகிக்க வேண்டும்

Featured Replies

மட்டக்களப்பு மாவட்டத்தின் நிர்வாகக் கட்டமைப்பை தனிச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கையில் கொழும்பு மகிந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளதால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

batt%200025.jpg

கிழக்கு மாகாணத்தில் போர் நடைபெற்ற காலங்களை விடவும், சமாதானம் ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதாக கொழும்பு அரசாங்கம் தெரிவித்த பின்னர்தான், மிகக் கூடுதலானளவு தமிழர்களின் பூர்விகக் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் சிங்களம் அத்துமீறிய நில அபகரிப்பு இடம்பெறும் நிலையில், அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லீம் - சிங்களம் இணைந்து தமிழர் காணிகளை கபளீகரம் செய்கின்றனர். இதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று ஆரையம்பதியில் கொழும்பு அரசாங்கத்தின் பின்புலத்தில் முஸ்லீங்ம் அரசியல்வாதிகள் தமிழர்களின் காணிகள் அபகரிப்பு செய்யப்பட்டு தனியான முஸ்லீம் கிராமங்களை உருவாக்கியுள்ளனர்.

அதுமாத்திரமல்ல, ஆரையம்பதியில் எல்லை நிர்ணயம் தொடர்பாக பிரதேச செயலாளர் வாசுகி கடுமையான போக்கை கடைப்பிடித்திருந்த நிலையில், அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் கிழக்குப் பிராந்திய தபால் மா அதிபராக பதவி உயர்வு வழங்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மேலக அரசாங்க அதிபராக இருந்த வாசுதேவன் ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கும், ஆரையம்பதியில் கடமையாற்றிய வாசுகி கிழக்குப் பிராந்திய தபால் மா அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளமை மேலும சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு கிழக்குப் போர்க்குற்றவாளிகளான படைத்தரப்பு ஆட்சியாகும். இரு மாகாணங்களிலும், ஆளுநரான இராணுவ அதிகாரியின் கட்டளையின் பிரகாரமே சிவில் நிர்வாகம் செயற்படுத்தப்படுகிறது. இராணுவ ஆட்சிக்கு சான்றாகத்தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் மற்றொரு சம்பவம் இடம்பெற்றுள்ளதை அவதானிக்கலாம். பதில் அரசாங்க அதிபராக அம்பாறை மாவட்ட சிங்கள அரசாங்க அதிபரை நியமனமும் இடம்பெற்றுள்ளது. உண்மையில் வாசுதேவன் அரசாங்க அதிபராக இருக்க வேண்டியவர், அரசாங்க அதிபராக வேண்டிய அனைத்துத் தகமைகளும் இருந்த போதிலும், அரசியல் பழிவாங்கல் மற்றும் கருணா மற்றும் பிள்ளையான் குழுவினரின் அழுத்தம் காரணமாக இவர் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்ப் பிரதேசங்களில் இருவகையான நிர்வாக நடைமுறைகள் இடம்பெறுகின்றன. அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சார்பானவர்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்தல் மற்றது இராணுவ ரீதியான அணுகுமுறையைக் கையாண்டு அச்சுறுத்தும் வகையிலான நிர்வாக நடவடிக்கையாகும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆயுதக்குழுக்களின் பங்களிப்பு மிகவும் உச்ச நிலையில் உள்ளதைக் காணலாம்.

தமிழ்ப் பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் நடவடிக்கையாக தற்போது, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சாள்ஸ் விடுமுறையில் சென்றிருப்பதனால், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக ஒரு சிங்களவரை பதில் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரு ஆண்டுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் உதவித் தேர்தல் ஆணையாளராக கடமையாற்றிய கிருஸ்ணானந்தலிங்கத்திற்கு பதிலாக தற்காலிகமாக பதில் ஆணையாளராக ஒரு சிங்களவர் நியமிக்கப்பட்டார்.

ஆனால், காலப் போக்கில் சிங்களவரையே நிரந்தர உதவித் தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தற்போது அம்பாறை மாவட்ட சிங்கள அரசாங்க அதிபரை மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்காலிய பதில் அரசாங்க அதிபராக நியமனம் செய்யப்பட்டமை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கெவீளியாமடு, சுவாமிமலை, ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலளார் பிரிவிலுள்ள மஞ்சள் ஆறு (மங்களாகம) ஆகிய பிரதேசங்களில் சிங்களவர்களினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய குடியேற்றங்கள் தொடர்பான பதிவுகள் அம்பாறை மாவட்ட நிர்வாகப் பிரிவில் பதிவுகள் இடம்பெறுவதற்கு இந்த சிங்கள அரசாங்க அதிபர்தான் முந்நின்று செயற்படுகின்றார்.

இந்நிலையில், விடுமுறையில் சென்றுள்ள மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மீண்டும் பதவிக்கு வருவதற்குள், அத்துமீறிய குடியேற்றக்காரர்களுக்கு இவரின் நிர்வாகக் காலத்தில் வாக்காளர் இடாப்புப் பதிவுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கலாம், அந்தக் காணிகளுக்கான காணி உறுதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சாள்ஸ் தனது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்கான விடுமுறையில் சென்றுள்ளதாகவும், பிரதேச செயலாளர் வாசுகியின் கணவர் திருகோணமலையில் வசிப்பதனால் பதவி உயர்வு பெற்ற வாசுகி திருமலைக்கு சென்றுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், விடுமுறையில் சென்ற அரசாங்க அதிபருக்குப் பதிலாக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால், காணிப்பத்திரம் வழங்கல், வாக்காளர் இடாப்பு பதிவு  போன்ற நிரந்தரமான பணிகளை செய்ய முடியாது என உள்நிர்வாகச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதிமன்றம், கச்சேரி, பிரதேச செயலகம் என முக்கிய அரச பதவிகளில் சிங்கள இனத்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட விகாராதிபதி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தமைக்குப் பிரதிபலிப்பாகத்தான் மட்டக்களப்பு மாவட்டத்தின்  தேர்தல் ஆணையாளராக ஒரு சிங்களவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதுதான் பொதுமக்களின் கணிப்பாகவுள்ளது.

அத்துமீறி குடியேற்றம் செய்யப்படும் காணிகளுக்கான பதிவுகள் அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இரு மாவட்ட அரசாங்க அதிபர்களை வலியுறுத்தியுள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக் கிராமங்களில் நூற்றுக் கணக்கான ஏக்கர் வயல் நிலங்களை அபகரிப்பதற்கான முயற்சிகளை சிங்களவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

30 வருட யுத்த பின்னணியில் தமிழர்கள் இழந்தது ஏராளம். அதேபோல் இந்த சமாதான சூழலிலும் காணிகள் அரசின் அங்கிகாரத்துடன், சுவிகரிக்கப்படுகிறன்றன அல்லது அத்துமிறீய குடியேற்றங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே மட்டக்களப்பில் வவுணதீவில் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ஊர்காவல்படையினர் பயிர்ச் செய்கையில் அத்துமீறி ஈடுபட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் நிர்வாகப் பிரிவுக்குட்பட்ட மகா ஓயாவில் பிரிவில் மேற்கொண்டுள்ளனர்.

இவை குறித்து சட்டரீதியான நடவடிக்கைகள் எடுத்தும் கொழும்பு அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக அரசாங்க அதிகாரிகள் கண்டும் காணாமல் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். இதுதான் இன்றைய எமது நிலை. எம்மிடம் அதிகாரம் எதுவுமில்லை. இருப்பதையும் பறித்துக் கொள்கின்றார்கள். இந்நிலையில், இன்று 13 என்றும், 13பிளஸ் என்னும் சிங்கள பேரினவாத சக்திகள் தென்பகுதியில் ஓலம்விடுகின்றனர். அரசு, மக்களுக்கு என்ன நலத்திட்டங்களை வகுக்கின்றார்களோ அது அனைத்தும் தமிழ் சமூகத்திற்கு பாதிப்பாகத்தான் அமைவதைக் காணலாம்.

அரசு வெற்றுக் காணிகள் இருக்கக் கூடாது என்பதை கொள்கையாகக் கொண்டுள்ளமையும், தமிழர் பகுதியில்  அத்துமீறிய குடியேற்றத்திற்கு நல்ல வாய்ப்பாக அமைகின்றது. கடந்த 30 வருடங்கள் காடடைந்திருந்த தமிழர் வயல் காணிகளை இனம் கண்டு பயிர்ச் செய்கையின் ஈடுபடுவதன் மூலம் ஓரளவு தமது சொந்தக் காணிகளை பாதுகாத்துக் கொள்ள முடியும். அவற்றுக்கும், சில மாவட்டங்களை அவதானித்தால் குடியிருப்புக் காணிகளும், பயிர்ச் செய்கை காணிகளும் ஒரே இடத்தில் இருந்தால், அந்த மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமே அவர்களால் அங்கு குடியிருக்க முடியும்.

ஆனால், இவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு யார் முன்வருவார் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. இவற்றை தற்காலியமாக தீர்ப்பதற்காக சரி புலம்பெயர் எமது உறவுகள் தோள்கொடுக்க வேண்டும். பெரியளவிலான உதவிகளை செய்யாவிட்டாலும், மிக முக்கியமான குடிநீர்ப்ப் பிரச்சினையாவது தீர்த்துவைக்க முன்வரலாம். இல்லையேல் இன்றைய சூழலில் காணிகள் அபகரிக்கப்படுவதற்குரிய சாத்தியங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன இது எல்லைப் பகுதியில் அமைந்திருப்பதால் அதற்கான சாத்தியம் மிக அதிகமாகவே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

- கிழக்கில் இருந்து எழுவான்  

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/32538/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.