Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆங்கிலேயர் தார்வீதி அமைத்தார்கள், என்பதற்காக எமது விடுதலையை அடகு வைத்தோமா? -

Featured Replies

sarveswaran-150x150.jpgஆங்கிலேயர் தார்வீதி அமைத்தார்கள், என்பதற்காக எமது விடுதலையை அடகு வைத்தோமா? என்று கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் கேள்வி எழுப்பினார். நேற்று வட்டுக்கோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சமவுரிமை கேட்டுப் போராடியதற்காக இலங்கை அரசாங்கம் எம்மீது தொடர்ந்தும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு எம்மினத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கி வருகின்றது. இதனால் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் இன்றைய இலங்கை அரசு அபிவிருத்தி என்ற மாயையைக் காட்டி அவற்றிலிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றது. வடக்கு- கிழக்கில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவி, எம்மினத்தை அதற்குள் கரைத்துவிடும் நோக்கில் இனவொழிப்பு அடிப்படையிலான அரசின் அபிவிருத்தித் திட்டங்களை உலகம் புரிந்துகொண்டுள்ளது. அதனால்தான்; சர்வதேச சமூகம் அபிவிருத்தியைப் பற்றிய அரசின் புலம்பல்களைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக, தமிழனத்திற்கு நியாயமான நீடித்திருக்கத்தக்க அரசியல் அதிகாரத்தை வலியுறுத்தி வருகின்றது என அவர் தெரிவித்தார்.

சர்வதேச சமூகம் இத்தகைய நிலைப்பாட்டினை எடுப்பதற்குத் தமிழ்ச் சமூகம் அளப்பரிய தியாகங்களைச் செய்திருக்கின்றது. கபளீகரம் செய்து வைத்திருக்கும் எமக்குரிய அரசியல் அதிகாரத்தினை சிங்கள பௌத்த மேலாதிக்க வாதிகளால் இனியும் தம்வசம் வைத்திருக்க முடியாது என்ற நிலையைத் தோற்றுவிப்பதற்கான ஒரு வாய்ப்பு எமக்குக் கிட்டியுள்ளது.

எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதினூடாக நாம் அதனை நோக்கி அடியெடுத்து வைக்கமுடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் எங்கே தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்கவேண்டி வந்துவிடுமோ என்று அரசாங்கம் அஞ்சுகின்றது. அதிகாரங்களை வழங்காவிட்டாலும் சர்வதேச சமூகத்தின் கடுமையான கண்டனங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதையிட்டும் அரசாங்கம் அஞ்சுகின்றது. அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியைத் தடுக்கின்ற அல்லது குறைக்கின்ற நோக்கில் தனது விசுவாசிகளான சில தமிழர்களைப் பயன்படுத்தி அவர்கள் மூலம் வடக்கில் அபிவிருத்தியென அவர்கள் கருதும் விடயங்களைப் பட்டியலிட வைத்துள்ளது .

இங்கு நாம் ஒன்றை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். ஆங்கிலேயர்கள் இந்நாட்டை நவீனமயப் படுத்தினார்கள். அவர்களின் ஆட்சியின் கீழ்தான் எமக்கு தார்ச்சாலைகளும், புகையிரத சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்னும் சொல்லப்போனால் தேயிலை தோட்டங்களும்கூட உருவாக்கப்பட்டன. நாம் அவற்றிற்கு மயங்கி, அவர்களே இந்நாட்டைத் தொடர்ந்தும் ஆட்சி செய்யட்டும் என்று அனுமதி வழங்கினோமா? இல்லையே! ஏனெனில், இந்த நாட்டு மக்களின் வசதிக்காகவோ தேவைகளுக்காகவோ அவை உருவாக்கப்படவில்லை. மாறாக, எமது வளங்களைக் கொள்ளையடித்து தமது நாட்டை வளப்படுத்தவே அவை உருவாக்கப்பட்டன. அந்தப் பாதைகளும் இரயில் வண்டிகளும் எமக்கும் பயன்பட்டன என்பது வேறுவிடயம். எனவேதான் எமது தாய்நாட்டைவிட்டு அந்நியர்கள் வெளியேற வேண்டும் என்று தமிழர்களாகிய நாம் விடுதலையுணர்வுடன் போராடினோம்.

இன்று வடக்கின் வசந்தம் என்ற பெயரால் செயற்படுத்தப்படும் வேலைத்திட்டங்களும் கிழக்கின் உதயம் என்ற பெயரால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களும் மேற்சொன்னதுபோல் காலனித்துவ வாதிகள் இங்கு மேற்கொண்ட அபிவிருத்தியை ஒத்ததே. அபிவிருத்தி என்ற பெயரால் இங்கு நடைபெறுகின்ற வேலைத்திட்டங்கள் யாவும் தமிழ் மக்களை அடிமைப்படுத்தவும், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவவும் எமது வளங்கள் அனைத்தையும் சூறையாடுவதையும் நோக்கமாகக் கொண்டதே. எனவே, வெள்ளையர் ஆட்சியை விரும்பாத சிங்கள மேலாதிக்கம் தமது ஆட்சியை தமிழ்த் தேசிய இனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்தவகையில் நியாயமாகும்?

ஒரே தேசம் ஒரே மக்கள் என்று இராணுவ சோதனைச் சாவடிகளில் விளம்பரப் பலகை வைத்திருக்கிறார்கள். ஆனால் ஓமந்தையில் சோதனைச் சாவடியை அமைத்து அதற்குள் போய்வரும் அனைவரின் அடையாளங்களையும் பொருட்களையும் சோதனை செய்வது இரு தேசங்களின் எல்லையில் நடைபெறும் செயலன்றி வேறென்ன?

வீதி அகலிப்பிற்காக தென்னிலங்கையில் கையகப்படுத்தப்பட்ட காணித்துண்டுகள் அனைத்திற்கும் சந்தை விலையில் நட்டஈடு வழங்கிய அரசு, வடக்கு-கிழக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட காணிகளுக்கு ஒரு சதத்தைக்கூட வழங்கவில்லை.

தனது இராணுவ அதிகாரத்தைப் பயன்படுத்தி காலனித்துவவாதிகள் எமது நிலங்களையும் வளங்களையும் எவ்வாறு கபளீகரம் செய்தார்கள். அவர்களைத் தொடர்ந்து இன்றுவரை தனது ஆட்சி அதிகாரத்தையும் இராணுவ பொலிஸ் படைகளையும் பயன்படுத்தி சிங்கள அரசும் எமது காணிகளையும் வளங்களையும் அரசியல் உரிமைகளையும் கபளீகரம் செய்வது எந்த வகையைச் சார்ந்தது?

இது ஒரே தேசம் ஒரே மக்கள் என்றால் தேர்தல்களில் சிங்கள மக்களின் ஆணைகளை மதித்துச் செயற்படும் அரசாங்கம் தமிழ் மக்களின் ஆணைகளை மிதித்துச் செயற்படுவதன் அர்த்தம் என்ன?  பிரித்தானியர்கள் செய்தது காலனித்துவம் என்றால் சிங்கள அரசின் மேற்கண்ட நடவடிக்கைகள் எந்த வகையைச் சார்ந்தது?

எனவே, பிரித்தானியர் எம்மிடமிருந்து பறித்து சிங்கள பௌத்த மேலாதிக்கவாதிகளிடம் கையளித்த அரசியல் அதிகாரம் எமது கைக்கு வரவேண்டும். அதனை அடைவதற்கான கதவுகளைத் திறப்பதற்கு அமையப் போகும் வடக்கு மாகாண அரசு ஓர் திறவுகோலாக அமையும். எமக்குப் பொருத்தமானதும் தேவையானதுமான அபிவிருத்தியை நாமே மேற்கொள்வதற்கும் நிலையான தீர்வை நோக்கி நகர்வதற்கும் வடக்கு மாகாணசபைத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

ஆகவே, தமிழர்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதன் மூலம் அனைத்துத் தமிழர்களும் தமது பறிக்கப்பட்ட உரிமையை மீண்டும் நிலைநாட்டுவதில் உறுதியாக உள்ளனர் என்பதை அனைவருக்கும் தெளிவாக வலியுறுத்த முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்காம் இலக்க யாழ் மாவட்ட வேட்பாளர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தமது பரப்புரையில் குறிப்பிட்டார்.

 http://www.thinakkathir.com/?p=52011#sthash.dQRfeAJw.dpuf

நல்ல பதில் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.