Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரியாவை நோக்கி ஏவப்பட்ட 2 ஏவுகணைகள்- மத்திய தரைக் கடலில் விழுந்தன: ஏவியது அமெரிக்காவா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டமாஸ்கஸ்: சிரியா மீது இன்று 2 பேலிஸ்டிக் வகை ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், ஆனால் அவை இரண்டுமே மத்திய தரைக் கடல் பகுதியில் விழுந்துவிட்டதாகவும், சிரியாவைத் தாக்கவில்லை என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரையடுத்து அங்கு பொது மக்கள் மீது ராணுவம் ரசாயண ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சிரியா மீது ராணுவத் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது.

ஆனால், சிரியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு தந்து வருகிறது. சிரிய அதிபர் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு ஆதரவாக நிற்கிறது ரஷ்யா. இதனால், ஐ.நா. சபையில் சிரியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தால் அதை ரஷ்யா தனது வீடோ அதிகாரம் மூலம் முறியடிக்கும் நிலை உள்ளது.

 

03-missile-61100.jpg

 

இதைத் தவிர்க்க, ஐ.நா. சபையிடம் கேட்காமலேயே நேரடியாக சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது. இந்த விவகாரத்தில் தனது நாடாளுமன்றத்தில் அனுமதி பெற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முயற்சித்து வருகிறார். இந்த அனுமதி கிடைக்குமா என்பதே சந்தேகத்திற்கிடமாக உள்ளது.

இந் நிலையில் சிரியாவை நோக்கி இரு நீண்ட தூரம் சென்று தாக்கும் பேலிஸ்டிக் வகை ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இதை தெற்கு ரஷ்யாவின் அர்மவீர் பகுதியில் உள்ள ஏவுகணை எதிர்ப்பு ரேடார்கள் கண்டுபிடித்துள்ளன.

இன்று காலை 10.16 மணியளவில் சிரியாவை நோக்கி வந்த இந்த இரு ஏவுகணைகளும் மத்திய தரைக் கடல் பகுதியில் (Mediterranean Sea) விழுந்துவிட்டதாகவும், அவை சிரியாவைத் தாக்கவில்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது.

மேலும் இது குறித்து அதிபர் விளாடிமீர் புடினிடம் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் சொய்கு விவாதித்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

03-mediterranean-map2-600-jpg.jpg

 

இந் நிலையில் தங்களது நாட்டை இதுவரை ஏவுகணை ஏதும் தாக்கவில்லை என்று சிரியாவும், இந்த விவகாரம் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று இஸ்ரேலும் கூறியுள்ளன.

கடந்த வாரம் அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை சிரியாவுக்கு நெருக்கமாக அனுப்பியது. இதை கடுமையாக கண்டித்த ரஷ்யா, போட்டிக்கு தனது உளவு பார்க்கும் போர்க் கப்பல்களை சிரியாவுக்கு உதவியாக அனுப்பி வைத்தது.

அதே போல அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலான USS Nimitz கப்பலும் ரெட் சீ பகுதியை நோக்கி சென்று கொண்டுள்ளன. இந்தக் கப்பல்களில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டனவா அல்லது வேறு எங்கிருந்தாவது ஏவுகணைகள் வந்தனவா என்பது தெரியவில்லை.

கச்சா எண்ணெய் விலை அதிரடியாய் உயர்வு:

எப்படா சண்டை வரும் என்று காத்திருக்கும் யூக வியாபாரிகள், புரோக்கர்களுக்கு இந்த ஏவுகணைகள் விவகாரம், காதில் தேன் வந்து பாய்ந்தது போல இருந்ததால், லண்டன் பங்குச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உடனடியாக 1.2 சதவீதம் உயர்ந்தது. இது இன்னும் மேலே போகவும் வாய்ப்புள்ளது.

 

http://tamil.oneindia.in/news/2013/09/03/world-missiles-launched-mediterranean-towards-syrian-coast-182675.html

  • கருத்துக்கள உறவுகள்

எணணை விலை உயர்வது கனேடிய பொருளாதாரத்துக்கு நல்லது.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எணணை விலை உயர்வது கனேடிய பொருளாதாரத்துக்கு நல்லது.. :D

எண்ணை வளம் இருக்கின்றது என்ற திமிராக்கும் .....  :D
 
எனக்கென்னமோ இந்த ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது போல கிடக்குது இலக்கை அடைய முன்பே கடலுக்குள்ள விழுந்து போச்சுது ...... :D  :lol: 
 
 
 இசைக்கலைஞன் உங்களின் நகைச்சுவையான கருத்துக்காக காத்திருந்தேன். :)  
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
us-4913-150.jpg

மத்தியத் தரைக்கடல் பகுதியில் அமெரிக்காவுடன் இணைந்து ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகையாக இது இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மத்தியத் தரைக்கடல் பகுதியில் 2 ஏவுகணைகள் ஏவப்படுவதை ரஷியாவின் ராடார்கள் கண்டறிந்ததாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஆர்ஐஏ செய்தி நிறுவனம் தெரிவித்தது. இது குறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், செவ்வாய்க்கிழமை காலை 10.16 மணிக்கு இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதை கருங்கடல் அருகே அர்மாவீர் பகுதியில் ரஷியா அமைத்துள்ள ராடார்கள் கண்டறிந்தன. மத்தியத் தரைக்கடலின் மத்தியப் பகுதியில் இருந்து அவை அக்கடலின் கிழக்குப் பகுதியை நோக்கிச் சென்றன'' என்றார்.

  

எனினும், இந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது யார் என்று அவர் கூறவில்லை. இது சிரியா மீதான தாக்குதலாக இருக்கலாம் என்று முன்னர் தகவல்கள் வெளியாகின. எனினும், மத்தியத் தரைக்கடல் பகுதியில் அமெரிக்காவுடன் இணைந்து ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 9.15 மணிக்கு இச்சோதனை நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், மத்தியக் கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வரும் நிலையில், இந்த ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=91932&category=WorldNews&language=tamil

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.