Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீனாவுடனான இலங்கையின் உறவு மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தல் அல்ல - கோத்தபாய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
gotabhaya-rajapakse-seithy-150.jpg

சீனாவுடனான இலங்கையின் உறவு என்பது மற்ற நாடுகளுக்கு ஒரு அச்சுறுத்தல் அல்ல என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருக்கிறார். தலைநகர் கொழும்பில். இலங்கை ராணுவம் நடத்திய மூன்றாவது பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய கோத்தபாய ராஜபக்ஷ, இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகக் கூறப்படுவது குறித்த தவறான புரிதல்கள் காரணமாக மற்ற நாடுகளிடம் இது ஒரு பிரச்சினையாக சில சமயங்களில் மாறிவிட்டது என்று கூறினார். "இலங்கையில் சீனாவின் ஈடுபாடு என்பது ராஜிய ரீதியிலானதும், பொருளாதார ரீதியிலானதுமாகும் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். சீனா இலங்கையின் வளர்ச்சித் திட்டங்களில் பல ஆண்டுகளாக ஒரு முக்கிய கூட்டாளியாக இருந்து வந்திருக்கிறது. அது இலங்கையின் முக்கிய பொருளாதார திட்டங்கள் பலவற்றுக்கு பெரிய அளவு பங்களிப்பைச் செய்திருக்கிறது. ஆனால் இந்த ஈடுபாட்டை ஏதோ சீனா இலங்கையில் அளவுக்கதிகமான செல்வாக்கு இருப்பதைப் போலக் காட்டி தவறாக சித்தரிக்கப்படுகிறது. இலங்கைக்கு விஜயம் செய்யும் சில முக்கிய நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் கூட இது பற்றி கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்," என்றார் கோத்தபாய ராஜபக்ஷ.

  

'இந்திய உறவில் தமிழகத் தாக்கம்'

இந்தியாவுடனான நட்பு குறித்து குறிப்பிட்ட கோட்டாபய ராஜபக்ஷ , தென்னிந்திய மாநிலமான தமிழ்நாடு காரணமாக, இந்தியா இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் குறித்து மிகவும் கரிசனை காட்டுகிறது என்றார். இது தேர்தல் சமயத்தில் குறிப்பாக பெரிய அளவு பேசப்படுவதாகவும் அவர் கூறினார். இது தவிர மீனவர் பிரச்சினைகள் போன்ற இரு தரப்பு பிரச்சினைகளும் இந்திய இலங்கை உறவுகளில் தாக்கம் செலுத்துவதாக அவர் கூறினார்.

 

"சில இரு தரப்பு பிரச்சினைகள் இந்த இரண்டு நாடுகளுக்கிடையே பொதுவாக நிலவும் நல்ல உறவை நெருக்கடிக்குள்ளாக்குகின்றன. உதாரணத்துக்கு , இலங்கை கடற்பரப்பில், சட்ட விரோதமாக தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் விஷயம். தெற்காசியாவில் இந்தியா சந்தேகத்துக்கிடமின்றி, மிகவும் முக்கியமான, மிகவும் சக்தி வாய்ந்த நாடுதான். ஆனால் இலங்கை ஒரு முழுமையான சுதந்திரமான, இறைமையுள்ள நாடு. இதை இந்தியாவும் அறிந்திருக்கிறது . இலங்கையை அது ஆதரிக்கிறது. இந்த இரு நாடுகளும் அவைகளுக்கிடையே சில சமயம் உருவெடுக்கும் இது போன்ற சில பிரச்சினைகளைத் தாண்டி, ஒரு அர்த்த புஷ்டியான, நெருக்கமான உறவைப் பேணுவது முக்கியம்" என்றார் கோத்தபாய ராஜபக்ஷ.

 

'விடுதலைப்புலி சார்பு இயக்கங்கள் - இலங்கைக்கு ஒரு சவால்'

போருக்கு பிந்தைய இலங்கை எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிக் குறிப்பிட்ட கோட்டாபய ராஜபக்ஷ, போர் முடிந்துவிட்டாலும், இலங்கை விடுதலைப்புலிகளின் சார்பு இயக்கங்கள் புலம்பெயர் நாடுகளில் நடத்துகின்ற பிரச்சாரங்களில் சில ஓரளவு வெற்றி பெற்றிருக்கின்றன என்று கூறினார். இதன் விளைவுதான் சமீபத்தில் இலங்கைக்கு ஐநா மன்ற மனித உரிமைக் கவுன்சிலின் ஆணையரின் விஜயம் என்றும் கோத்தபாய கூறினார்.

 

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்ட சில குழுக்களில் விடுதலைப்புலிகளால் பயிற்றுவிக்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் இது போன்ற பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்கள். இலங்கையில் கூட ஜனநாயக மைய நீரோட்டத்தில் இயங்கும் சில குழுக்கள் கூட இது போன்ற விடுதலைப்புலி ஆதரவு வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து பணம் பெறுகிறார்கள் என்றார் அவர். இது போன்று தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குவதை முறியடிப்பதே இலங்கை எதிர்கொள்ளும் சவால் என்றார் அவர்.

 

(பிபிசி)

 

http://www.seithy.com/breifNews.php?newsID=91915&category=TamilNews&language=tamil

971092_648090515215898_1286675841_n.jpg

உங்க ரீல் எல்லாம் அறுந்து ரொம்ப நாளாச்சு 

  • கருத்துக்கள உறவுகள்
சீனாவுடனான இலங்கையின் உறவு மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தல் அல்ல
ஆனால் இலங்கைக்கு அச்சுறுத்தல்........

"தகாத உறவாக இல்லாதிருந்தால்...."

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.