Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவின் கண்ணில் மண்தூவும் சிறீலங்கா! - கந்தரதன்

Featured Replies

வடக்கில் சூடுபிடித்துள்ள மாகாணசபைத் தேர்தல் வன்முறைகள் ஒருபுறம் இருக்க, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் விஜயம் அங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் நிலையில், யாழ்ப்பாணம், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, திருகோணமலை - என்று ஆணையாளர் சென்றுள்ளார்.

Sri%20Lanka_Pillay.jpg

சிறீலங்கா இராணுவக் கெடுபிடிகளையும் மீறி, கறுப்புக்கண்ணாடி அணிந்து பிறவிக் குருடர்கள் போன்று வேடமணிந்தவர்கள் அம்மையார் பின்னால் அணிவகுக்க, அவற்றுக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட தமிழ் உறவுகள் தமக்கு நிகழ்ந்த கொடுமைகளை அவரிடம் கொட்டித் தீர்த்துள்ளனர். இவ்வாறானவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையின்போது யாழ்.பொது நூலத்தின் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் போனவர்களுடைய உறவினர்களுக்கு தற்போது சிறீலங்கா இராணுவப் புலனாய்வாளர்களினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் போனவர்களுடைய உறவினர்களுடைய வீடுகளுக்கு செல்லும் இராணுவப் புலனாய்வாளர்களே இவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றர். இவ்விடையம் தொடர்பாக யாழ்.காவல்துறை நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. 

கடந்த மாதம் 26 ஆம் நாள் யாழ்ப்பாணத்திற்குச் சென்ற ஆணையாளர் நவநீதம்பிள்ளை மறுநாள் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். இதன் போது அவருடைய கவனத்தினை ஈர்க்கும் முகமாக காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் யாழ்.பொது நூலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். எனினும் படையினரின் கட்டாயத்தின் பேரில், அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் போனவர்களுடைய உறவினர்களைக் கண்டும் காணாதது போல் நூலகத்தின் பின்புறமாகச் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் போனவர்களுடைய உறவினர்கள், சிறீலங்கா அரசாங்கத்தினையும் சர்வதேச நாடுகளினையும் ஐக்கிய நாடுகள் சபையினையும் திட்டித்தீர்த்துள்ளனர்.

இதனை சிறீலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள் தனித்தனியே புகைப்படம் மற்றும் வீடியோப் பதிவுகளை மேற்கொண்டிருந்ததுடன் அவர்களின் விபரங்களையும் குறிப்பெடுத்துச் சென்றுள்ளனர். இதன் பின்னர் குறித்த நாள் இரவு முதல் ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் பதிவானவர்களுடைய வீடுகளுக்குச் செல்லும் புலனாய்வாளர்கள் காணாமல் போனவர்களுடைய உறவினர்களை அச்சுறுத்தி உள்ளனர். இனிமேல் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக யாழ்.காவல்துறை நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதும், அவர்கள் அவற்றை சினிமா பாணியில் பதிவு செய்துவிட்டு அனுப்பிவைத்துள்ளனர்.

இதேவேளை, இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேற்கொண்ட முயற்சி அரசின் கடும் எதிர்ப்பையடுத்து கைவிடப்பட்டுள்ள கொடுமையான சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை பயணம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மற்றும் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் தாயாரித்திருந்த உத்தியோகபூர்வ நிகழ்ச்சிநிரலில் மலர்வளையம் வைக்கும் நிகழ்வு உள்ளடக்கப்படவில்லை.  

இருப்பினும், முள்ளிவாய்க்காலுக்குச் செல்லும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், இறுதிப்போரில் மரணித்தவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார் என வெளிவிவகார அமைச்சுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, கொழும்பிலுள்ள ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி சூபினே நெண்டியுடன் தொடர்பு கொண்ட வெளிவிவகார அமைச்சு இது தொடர்பில் வினவியபோது மேற்படி தகவலை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, அரச பாதுகாப்பு பிரிவுக்குத் தகவல் வழங்கப்பட்டது, பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுகள் இணைந்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாயின், கடும் மக்கள் எதிர்ப்புக் கிளம்பும் எனக் காரணம் காட்டி, இதற்கு அனுமதியளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் மாநாட்டில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.   

இதற்குப் பதிலளித்த அவர், போர் இடம்பெற்ற பல நாடுகளுக்கு நான் சென்றிருந்தபோது போரில் மரணித் தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழமை. அவ்வாறானதொரு நடவடிக்கையை இங்கும் மேற்கொள்ள எண்ணியிருந்தேன். இருப்பினும் அது சாத்தியப்படவில்லை எனத் தெரிவித்தார். இதில் இருந்து சிறிலங்காவில் மனித உரிமையின் நிலை எவ்வாறு உள்ளது என்று ஐ.நா. உணர்ந்திருக்கத் தவறினால் தமிழருக்கு என்றும் அநீதியே என அவதானிகள் தெரிவித்துள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வடக்கு விஜயத்தை முன்னிட்டு அகற்றப்பட்ட காவலரண்கள், மீண்டும் அதே இடங்களில் அமைக்கப்பட்டுள்ளமையானது சிறிலங்கா அரசு சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு அரங்கேற்றிய கபட நாடகமே இது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.

ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, கடந்த 26ஆம் நாள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக இவரது வருகையை முன்னிட்டு ஆனையிறவு மற்றும் யாழ். குடாநாட்டிலிருந்த நெருக்கடியான இராணுவ காவலரண்கள் வேகமாக அகற்றப்பட்டதுடன், இராணுவத்தினரின் ரோந்து சேவையும் இடை நிறுத்தப்பட்டிருந்தது. வீதிகளிலும் இராணுவத்தினரைக் காணமுடியாது அவர்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நவநீதம்பிள்ளை யாழ். முல்லைத்தீவு விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்பியதும் காவலரண்களும் இராணுவ ரோந்து நடவடிக்கைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் மீண்டும் வீதிகளில் கடமையில் ஈடுபட்டுள்ளனர். அரசின் இத்தகைய செயற்பாடானது சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு அரங்கேற்றிய கபட நாடகமாகவே நாம் கருதுகிறோம். சர்வதேசத்தின் முன்னால் அரசு உண்மையை மூடிமறைப்பதையே இது தெளிவாக உணர்த்துகிறது என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு தாயகத்தில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா படையினரதும் அதன் ஆதரவுக் குழுக்களினதும் வன்கொடுமைகள் ஐ.நாவின் கண்களில் மண் தூவித் தொடர்கின்றன. உலகெங்கும் வாழ் தமிழ் உறவுகளே இது உங்களின் கவனத்திற்கு! நீங்கள் ஓய்ந்து இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் சிறீலங்கா இனவாதத்திற்கு சாதகமே. எதிர்வரும் 30.09.2013 பெல்ஜியத்தில் ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக ஓரணியெனத் திரண்டு தமிழர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளுக்கு நீதிகேட்போம்! 

(சூறையாடல்கள் தொடரும்)

நன்றி: ஈழமுரசு

Ponkutamil_New2013or.jpg

 

http://www.sankathi24.com/news/32836/64//d,fullart.aspx

இதே ஐ.நா.வின் 2009ம் ஆண்டு செய்ற்திறனை(?) நினைக்கும்போது "தூங்குபவனை தட்டி எழுப்பலாம், தூங்குவதுபோல் நடிப்பவனை எழுப்பமுடியாது" என்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது.என்ன செய்வது? உலக நாட்டாமையின் காசுக்கணக்கில் வரவுவைக்க எம்மண்ணில் எண்ணை வயல் இல்லையே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.