Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உ.பி மதக் கலவரங்களில் 28 பேர் இதுவரை பலி

Featured Replies

வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இந்து-முஸ்லீம் மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்திருக்கிறது.

கலவரத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த சுமார் 1,000 துருப்புக்கள் அந்தப்பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

130909104645_indiaupmuzzaffarnagarviolen

கலவரம் பாதித்த முசாபர்நகர் பகுதி

உள்ளூர் பெண்மணி ஒருவர் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதை ஆட்சேபித்த மூன்று ஆண்கள் கொல்லப்பட்டதை அடுத்து இந்த மத மோதல்கள் வெடித்தன.

பின்னதாக, இரண்டு பேர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்படுவதாகக் காட்டும் ஒரு போலி வீடியோ விநியோகிக்கப்பட்டதை அடுத்து மேலும் வன்செயல்கள் வெடித்தன.

நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர், பல உள்ளூர் அரசியல்வாதிகள் இந்த ரத்தக்களறியைத் தூண்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

http://www.bbc.co.uk/tamil/india/2013/09/130909_indiaviolence.shtml

  • தொடங்கியவர்

ரௌத்திரம் பழகு

1238874_10200576154707311_512381600_n.jp
ஒரு இளம்பெண்ணை ஒருவன் சீண்டியிருக்கிறான். பின்னர் அந்தப் பெண்ணின் சகோதரர்கள் அவனிடம் தகராறு செய்திருக்கிறார்கள். தொடர்ந்து நடந்த மோதலில் ஒருவன் கொல்லப்பட்டான். பதிலடித் தாக்குதல் நடத்தப்பட்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டார்கள்...

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முசாபர் நகர் மாவட்டத்தில் எரிகிற தீயின் பொறி இது.

பெண்ணிடம் வம்பு செய்தவனுக்கும், அதனால் ஆத்திரப்பட்டவர்களுக்கும் இடையேயான பிரச்சனை. முற்றிலும் தனி மனித ஒழுக்கம், பண்பு, பிரச்சனையைக் கையாள்கிற பக்குவம் ஆகியவை பற்றாக்குறையாகிப் போன பிரச்சனை. சம்பந்தப்பட்டவர்கள் மீது மட்டும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய பிரச்சனை.

இந்தப் பிரச்சனையை அப்படியே கடத்திச் சென்று, ஒரு பெரும் மதக்கலவரமாய் மாற்றிவிட்டார்களே! 31 பேர் வரை பலியாகச் செய்துவிட்டார்களே!, இதை ஒரு மதப்பிரச்சனையாகத் திசை திருப்பியவர்கள் யாரானாலும், மதக்கலவரமாய் மாறுவதற்கு முதல் காரணம் யாராக இருந்ததாலும் அவர்கள் வன்மையான கண்டனத்திற்கு உரியவர்கள். சமுதாயத்தால் தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள்.

இப்படியொரு வாய்ப்புக்கென்றே காத்திருந்தது போல், சாதிப்பஞ்சாயத்துகளின் கூட்டத்தைக் கூட்டி, மதவெறி நஞ்சைக் கக்கி, பகைமை நெருப்பை விசிறிவிடுகிறார்கள். பாகிஸ்தானில் நடந்த ஒரு வன்முறையின் படப்பதிவை இங்கே இப்போது நடந்த சம்பவம் போல ஒட்டு வேலை செய்து குறுந்தகடுகளாக மக்களிடையே பரப்ப முயல்கிறார்கள். அதனை மின்னஞ்சல் மூலமாக ஏராளமானோருக்கு அனுப்புகிறார்கள். சமூக வலைத்தளங்களில் வெறுப்பை விதைக்க விசைப்பலகையைத் தட்டுகிறார்கள். (அடேயப்பா, எவ்வளவு வேகம்!)

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும்போது, மத உணர்வைக் கிளறிவிட்டு வாக்கு அறுவடை செய்யும் அரசியல் நோக்கம் இல்லை என்று நம்பச் சொல்கிறார்கள். 

திட்டமிட்ட பதற்ற நிலைமைகள் அடுத்தடுத்து உருவாக்கப்பட்டு வரும் சூழலில், விழிப்புடன் இருந்து வன்முறை பரவாமல் தடுக்கத் தவறிய மாநில அரசும் இதற்கான பொறுப்பிலிருந்து நழுவிவிட முடியாது. இனிமேலாவது அக்கறையோடு நடந்துகொண்டாக வேண்டும்.

வன்மம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் கிளப்பிவிடப்பட்டு மோதிக்கொள்கிறபோது, இரு தரப்பு மதவெறிகளும் ஒன்றுக்கொன்று தூண்டுதலாக, ஒன்றையொன்று வளர்ப்பதாக இருக்கிறது என்பதுதான் அழுத்தமாக வெளிப்படுகிறது.

விசுவாசத்தோடு மதங்களைப் பின்பற்றும் அன்பர்களே, நீங்கள் வணங்கும் கடவுள்களின் பெயரால் வன்முறையைக் கிளறிவிட்டு உங்கள் கடவுள்களையே இழிவு படுத்துகிற, உங்களுடைய மதத்தைச் சேர்ந்த இப்படிப்பட்ட வெறிகூட்டங்களைப் புறக்கணித்திடுவீர்.

  •  

thankx facebook 

ரௌத்திரம் பழகு

நேற்று உத்திரபிரதேசத்தில் நடந்த கலவரத்திற்கும் படுகொலைக்கும் முக்கிய காரணம் சில சங்பரிவார் காவி பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இரண்டு வாலிபர்கள் அடித்து கொள்ளப் பட்ட ஒரு வீடியோவை எடிட் செய்து அதை உ பி யில் உள்ள ஹிந்து வாலிபரை முஸ்லிம்கள் அடித்து கொள்கிறார்கள் என்று மாற்றி வதந்தியை பரப்பியதன் விளைவு 26 உயிர்கள் அநியாயமாக படுகொலை செய்யப் பட்டுள்ளது.

இதில் இரண்டு பத்திரிக்கை துறையினரும் அடக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.