Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு போர் தளபாடங்கள் ஆயுதங்களை வழங்குவதை இந்திய அரசு ஒ

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைக்கு போர் தளபாடங்கள் ஆயுதங்களை வழங்குவதை இந்திய அரசு ஒத்திவைத்தது

[14 - August - 2006] [Font Size - A - A - A]

இலங்கைக்கு இராணுவ தளபாடங்களையும் ஆயுதங்களையும் வழங்குவதை புதுடில்லி ஒத்திவைத்துள்ளது.

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரத்தை கருத்தில் கொண்ட இந்தியா இந்த முடிவையெடுத்துள்ளது.

இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் ஆயுதங்களை கோரியுள்ளது. இந்த ஆயுதங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படமாட்டா என இலங்கை உறுதியளித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் கிளேமோர்களுக்கு எதிராக பயன்படுத்தக் கூடிய வாகனங்களையும் இலங்கை கோரியுள்ளது.

மேலும், கடல்புலிகளை இலங்கைக் கடற்படையினர் வலிமை மிகுந்த எதிரிகளாக கருதுவதால் அவர்களை எதிர்கொள்வதற்கு இந்திய கடற்படை உதவ வேண்டும் எனவும் இலங்கை விரும்புகின்றது.

குறிப்பாக, விடுதலைப் புலிகளுக்கான விநியோகத்தினை கட்டுப்படுத்துவதற்கு இலங்கையின் வட, கிழக்கு கடல்பகுதியை அண்டிய பகுதிகளில் இந்திய கடற்படை மேலும், கண்காணிப்பினை அதிகரிக்க வேண்டும் எனவும் கொழும்பு விரும்புகின்றது.

விடுதலைப் புலிகளின் விமானப் படையினை கண்காணிப்பதற்கு இந்தியா மேலும் தொழில் திறனை வழங்க வேண்டும் என்பதும் கொழும்பின் எதிர்பார்ப்பு.

கொழும்பு, தனக்கு இந்த விடயத்தில் உதவுவதற்கு விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவசியம் எனவும் புலனாய்வு ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் கருதுகின்றது.

எனினும், இந்தியா யுத்தத்தினை மேற்கொள்வதற்கு உதவும் ஆயுதங்களை வழங்கத் தயங்குகின்றது.

மேலும், இலங்கை அரசாங்கம் இராணுவ நடவடிக்கையினை மேற்கொள்ளும் ஒவ்வொரு தடவையும் அவதானமாக செயற்படுமாறு இந்தியா எச்சரித்து வருகிறது.

இலங்கை அரசாங்கம் தனக்கு தேவையான ஆயுதங்கள், இராணுவ தளபாடங்களின் பட்டியலை சமர்ப்பித்துள்ள அதேவேளை, மோதல்கள் பொது மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து புதுடில்லி கவலை கொண்டுள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தூரத்தை கருத்தில் கொள்ளும்போது, இந்தியாவின் பாதுகாப்பும் இதனுடன் தொடர்புபட்டுள்ளதை கருத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது. இதன் காரணமாக பொறுமையைக் கடைப்பிடிக்குமாறும் பொது மக்களுக்கு உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்குமாறும் கோரியுள்ளோம் என இந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை யுத்த சூழலைத் தவிர்க்க வேண்டும், அந்த நாடு எதிர்கொள்ளும் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் மாத்திரமே தீர்க்கலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளால் தமிழ் நாட்டில் உணர்வலைகள் பாதிப்படையக் கூடிய அபாயம் குறித்து அவதானமாக இருக்க வேண்டியுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Dinakural

இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் ஆயுதங்களை கோரியுள்ளது. இந்த ஆயுதங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படமாட்டா என இலங்கை உறுதியளித்துள்ளது

கேக்கிறவன் கேனையா இருந்தா எருமை மாடு

ஏரோப்பிளேன் ஓட்டுமாம். :evil: :x :evil: :x

கேணைய தமிழ் நாட்டு தமிழன் இருக்கும் வரை சிங்களவன் முத்துவேல் கருணாநிதி யிடமும் ஆயுதம் கேட்பான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு, தனக்கு இந்த விடயத்தில் உதவுவதற்கு விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவசியம் எனவும் புலனாய்வு ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் கருதுகின்றது

யார் சிங்களவனுக்கு உந்தப் படங்களை எங்கள் பிள்ளைகளைக் கொல்ல கொடுத்தாங்கள் என்று இப்போ தெரியுது. உந்தப் படங்களை வெளிநாட்டுக்காரனுக்கு காட்டி கொமிக்கல் கெஹலி கொக்கரிக்கிறான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின்ர ஆயுதத்தால அழிஞ்சு போறது பொது மக்கள் தான் என்டு இந்தியாக்கு விழங்கவில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.