Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விநாயகர் சதுர்த்தி: தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்… 10,000 போலீசார் பாதுகாப்பு

Featured Replies

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் சிலைகளின் பாதுகாப்பிற்காகவும்,ஊர்வலத்தை ஒட்டியும் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாருக்கு 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டை படையல் இடப்பட்டது. உச்சிப்பிள்ளையார் கோவிலில் செப்டம்பர் 9ம் தேதி முதல் வரும் 22ம் ந் தேதி வரை பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ அலங்காரம், மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷ பாருடர், சித்திபுத்தி கணபதி, நடன கணபதி ஆகிய அலங்காரங்களில் விநாயகர் காட்சி அளிக்கிறார்.
10-1378791862-vinayakarchathuthi999-600-

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா ஆக. 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஞாயிறன்று நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் 10ம் நாளான நேற்று அதிகாலை 4 மணியளவில், கோயில் நடை திறக்கப்பட்டது.கற்பக விநாயகர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். சிறப்பு அபிஷேக, தீபாராதனைகளுக்கு பிறகு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. பின்னர் விநாயகர், சண்டிகேஸ்வரர் திருவீதி உலா நடந்தது.மதியம் 1 மணியளவில் 18 படி அரிசியில் செய்யப்பட்ட ‘மெகா சைஸ்' கொழுக்கட்டை மூலவருக்கு படைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
10-1378791927-vinayakar-chathuthi46545-6

தஞ்சை மாவட்டத்தில் பா.ஜ., மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் மொத்தம், 297 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, நேற்று வழிபாடு நடத்தினர். இதில் நேற்று மட்டும், 55 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய, பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
10-1378791947-vinayakar-chathuthi-chenna

 சென்னையில் 1705 இடங்களில் பெரிய விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். இது தவிர ஆயிரக்கணக்கான சிறிய சிலைகள் ஆங்காங்கே வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பொது மக்கள் பூஜை செய்வார்கள். இந்த சிலைகள் 1 வாரத்துக்கு பின்னர் நீர் நிலைகளில் கரைக்கப்படும்.
10-1378792002-vinayakarchathuthi09890-60

சென்னையில் வருகிற 15 ஆம் தேதியன்று இந்து முன்னணி சார்பில் ஊர்வலம் நடத்தப்படுகிறது.இதில் ராமகோபாலன் பங்கேற்கிறார். மற்ற இந்து அமைப்புகள் சார்பில் 4 நாட்கள் ஊர் வலம் நடத்தப்படுகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. செப்டம்பர் 9ம் தேதி முதல் அனைத்து விநாயகர் சிலைகளும் கடலில் கரைக்கப்படும் வரை சுமார் 1 வார காலத்துக்கு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
10-1378792063-vinayakarchathuthi9867-600

எளிதில் தீப்பிடிக்கக் கூடிய ஓலை கொட்டகைகள் போன்றவற்றை அமைக்க கூடாது. விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அனு மிக்கப்பட்ட சாலை வழியாக மட்டுமே சிலைகளை எடுத்து செல்ல வேண்டும். மாட்டு வண்டிகளில் சிலைகளை எடுத்து செல்லக் கூடாது.
10-1378792167-vinayaka-chathurthi56546-6

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. மத உணர்வுகளை தூண்டும் வகையில் ஒலி பெருக்கி மூலம் பிரசாரங்கள் எதையும் மேற்கொள்ளக் கூடாது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் போலீசாரால் விதிக்கப்பட்டுள்ளன.
10-1378792196-vinayakachathurthi809987-6

இந்து முன்னணி ஊர்வலம் நடைபெறும் போது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பதட்டமான ஒரு சில பகுதிகளிலும் விநாயகர் சிலைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது

http://tamil.oneindia.in/news/2013/09/10/tamilnadu-tight-security-place-vinayaka-chathurthi-183072.html#slide321203

 

அண்மை காலங்களில் விநாயகர் வழிபாடு அதிகரிக்கிறது. இதை புராணங்கள் தலை எடுத்த காலத்துடன் ஒப்பிட முடியும். தமிழ்நாட்டில் பக்தி மார்கமும் அதன் பின்னர் சைவ சித்தாந்தமும் விருத்தி பெற்ற் காலங்களில் இறைபத்தி பூர்ணமான வ்ழிபாடு முறையாக இருந்தது. இன்று திரும்ப புராண மனநிலை தலை எடுபத்தால் பெருகிவரும் விஞ்ஞானத்தையும், உபரி உற்பத்தி திற்னுகளையும் வைத்து வழிபாடு ஆன்மிகத்திற்கு வெளியே வழிய ஆரம்பிக்கிறது, பிளாஸ்டிக் சிலைகளும், 400 இறத்தல் கொளுக்கட்டையும், கோவ்லிற்குப் போவது ஒரு குடும்ப கேளிக்கையாக மற்றப்படிருப்பதும் மதம் மீண்டும் புராண காலத்திற்குள் இறங்குவதையே காட்டுகிறது.

 

பிள்ளையாரை வணங்குவதில் எதிர்ப்புக் காட்ட வேண்டியதில்லை. அவர் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்ட கடவுள்.  ஆனால் பிள்ளையார் புராணத்தின் பிரதிபலிப்பு. இந்து கடவுள்களான, சிவன், கொற்ற்வை அல்லது காளி, முருகன், கிருஸ்ணன் எல்லோருமே புத்தர், யேசு போன்று, தமிழ் மண்ணில் காலம் வரையறுக்கப்பட்ட காலத்தில் இருந்த மாமன்னர்கள், அல்லது சமய குரவர்களாகத்தான் கணிக்கப்படுகிறார்கள். ஆனால் தனிய புராணக்கத்தைகளால் உருவானவராகத்தான் பிள்ளையார் கணிக்கப்படுகிறார்.  இந்திரன், பிரமா, உருத்திரன், போன்ற்வர்கள் கைவிடப்பட்டது போல  பிள்ளையார் புதிதாக புராண காலத்தில் உருவாக்கப்ப்டார். புராண கால சுவைகளுக்குகேற்றபடி உருவாக்கப்பட்டவர்தான் பிள்ளையார். ஆறுமுகன், நெற்றிக்கண்ணன், நான்முகன்,  கரிகரபுத்திரன, ஆயிரம் கண் இந்திரன், போன்றவை மற்றைய கடவுகளை புராண சுவைக்கு ஏற்ப மாற்ற முயன்ற செய்லபாடு. ஆனால் பிள்ளையார் தூய புராணப் படைப்பு. அதனால் பிள்ளையாரின் வளர்ச்சி புராணத்தின் வளர்ச்சி. அதே போல கிருஸ்ணனின் வளர்ச்சி அரசியலையும், முருகனின் வளர்ச்சி, தோல்வி, தனிமை, ஒதுக்க நிலையையும், சிவனின் வளர்ச்சி ஆன்மீகத்தையும் குறிக்கும். அதனால் உண்மையான அடிப்படை ஆன்மீக வளர்ச்சி திரும்ப தலையெடுக்க வேண்டுமாயின் சிவ வழிபாடுதான் தலை எடுக்க வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.