Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனந்தி சசிதரன் எழிலன் தாக்குதல் முயற்சியில் ஒன்றில் இருந்து மயிரிழையில் தப்பினார்:- படங்கள் இணைப்பு

Featured Replies

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ananthi%20new_CI.jpg

 

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை தேர்தலிற்கான பெண் வேட்பாளரும் விடுதலைப்புலிகளது திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகவிருந்து காணாமல் போயுள்ள எழிலனினது மனைவியுமான அனந்தி தாக்குதல் முயற்சி ஒன்றிலிருந்து மயிரிழையில் தப்பியுள்ளார். 

வழமை போன்று பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு விட்டு சுழிபுரத்திலுள்ள தனது வதிவிடத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த போதே யாழ்.நகரின் ஜந்து சந்தியில் வைத்து இன்றிரவு அவர் தாக்கப்பட்டுள்ளார். தமது வாகனத்தை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்த படையினரது பாதுகாப்பு வாகனமொன்று தங்களது வாகத்தினை தாண்டிச்சென்ற சில நொடிகளில் அதனை பின்தொடர்ந்து சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளிலிருந்தே கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Annanthi%20attack1.jpg

தாக்குதலுக்கு உள்ளான அனந்தி பயனித்த வாகணம்

குறித்த பிரச்சார வாகனத்தின் ஓரமாக தான் அமர்ந்திருந்ததாகவும் தன்னை நோக்கி கற்கள் வீசப்பட்டதையடுத்து சுதாகரித்துக்கொண்டு குனிந்தமையினால் தப்பித்துக்கொண்டதாக தெரிவித்த அவர் அடுத்தடுத்து சிறு கற்களும் வீசப்பட்டதாகவும் தெரிவித்தார். தாக்குதலில் அவர் பயணித்த பிரச்சார வாகனம் சேதமடைந்துள்ளது.

முன்னதாக சுன்னாகத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பிரச்சாரக்கூட்டமொன்று நடந்து கொண்டிருந்ததாகவும் அதனை தான் தாண்டி சென்று கொண்டிருந்த வேளை பஸில் ராஜபக்ஸ அங்கு பேசிக்கொண்டிருந்ததாகவும் அங்கிருந்து தான் பின் தொடரப்பட்டிருக்கலாமெனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Annanthi%20attack2.jpg

தாக்குதலுக்கு உள்ளான அனந்தி பயனித்த வாகணம்

தாக்குதல் தொடர்பில் கட்சி தலைமையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் நாளை யாழ்.பொலிஸ் நிலையத்திலும் தேர்தல் திணைக்களத்திலும் முறைப்பாடுகளை செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே இத்தாக்குதல் சம்பவத்தினையடுத்து தனது பிரச்சார நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் வாடகைக்கு எவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிற்கு வாகனங்களை வழங்க மறுத்துவரும் நிலையில் இன்றைய தாக்குதலையடுத்து அவ்வாறான வாகனங்களை பெறமுடியாமையால் பிரச்சாரங்களை இடைநிறுத்த யோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை காணாமல் போனவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் பசில் ராஜபக்ஸ யாழ்ப்பாணத்தில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசி 24 மணித்தியாலத்துள் இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96357/language/ta-IN/article.aspx

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்குமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட தளபதி எளிலனின் மனைவி அனந்தியை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செவ்வாக்கிழமை இரவு 9.45 மணயளவில் யாழ்.ஜந்து சந்தியில் வைத்தே மேற்படித் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் சம்பவத்தில் அனந்தி மயிரிளையில் உயிர் தப்பித்துக் கொண்டதுடன் அவர் பயணித்த வாகனம் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக அனந்தி தெரிவிக்கையில்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றினை நிறைவு செய்து கொண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து எனது வீட்டிற்கு யாழ் – மானிப்பாய் வீதியூடாகச் சென்று கொண்டிருந்தேன். இதன் போது ஜந்து சந்திப்பகுதியில் வைத்து எங்களுடைய வாகனத்திற்குப் பின்னால் வந்து கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினுடைய வாகனம் எங்களுடைய வாகனத்திற்கு முன்பாகச் சென்றது.

திடீரென சிறிலங்கா இராணுவத்தினருடைய வாகனம் எமது வாகனத்திற்கு குறுக்காக வீதியில் நிறுத்தப்பட்டது. இதன் போது பின்னால் மோட்டார் சைக்கிலில் வந்த நபர்கள் வாகனத்தின் ஜன்னல் பக்கமாக இருந்த என்னை நோக்கி கல் தாக்குதல் மேற்கொண்டனர்.

எனினும் நான் விலத்திக் கொண்ட காரணத்தினால் என்மீது கல் படவில்லை. இருப்பினும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கல் தாக்குதலில் எனது வாகனம் முழுமையான சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
எனினும் சிறிது நேரம் அங்கு நின்று தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் மக்கள் அவ்விடத்தில் கூடுடியதை அடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.http://goldtamil.com/?p=8216

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர்களை படையில் சேர்க்கிறார்கள், போர்க்குற்றம் செய்கிறார்கள் என வாய் கிழிய கத்தியவர்கள் இன்று பம்முவது ஏன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.