Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு விலைகள் விண்ணில் ஏறி நிற்கி

Featured Replies

உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு விலைகள் விண்ணில் ஏறி நிற்கின்றன! மாற்று ஏற்பாட்டுக்கு அரச அதிபர் கொழும்பிடம் விண்ணப்பம்

யாழ். குடாநாட்டிற்கான அனைத்து விநியோகப் பாதைகளும் தடைப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கான உணவுப் பொருள்களுக்குப் பெரும் தட்டுப் பாடு ஏற்படும் நிலை தோன்றியுள்ளது. இதனால் பொருள்களின் விலைகளும் எக்கச் சக்கமாக ஏறியுள்ளது. நேற்று சற்று நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்த போது பொருள்களை வாங்குவதில் பொதுமக்கள் பெரிதும் முண்டியடித்தனர். இதனைப் பயன்படுத்திக்கொண்ட வர்த்தகர்கள் விலைகளை உச்சத்திற்கு எகிற வைத்தனர்.

உடனடியாக ஒரு செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வியாபாரிகள் முயல்கின்றனர் என்றும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை துரிதமாக எடுக்கப்படும் என்றும் யாழ். அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்தார்.

குடாநாட்டிற்கு உடனடியாக உணவுப் பொருள்களையும், எரிபொருளையும் எடுத்து வருவதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அரச அதிபர் நேற்றுமுன்தினமே கொழும்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சந்தைப்படுத்துவதற்கான பொருள்கள் எவற்றையும் அரசு சார்பில் களஞ்சியப்படுத்தி வைக்கும் ஏற்பாடுகள் எவையும் தற்சமயம் இல்லாமையால் யாழ்.செயலகம் சார்பில் உணவுப் பொருள்கள் இருப்பு ஏதுமில்லை என்றும் அரச அதிபர் தெரிவித்தார். அதேவேளை நிவாரணப் பொருள்கள் போதி யளவில் கையிருப்பில் உள்ளன என்றும் நிவாரணம் வழங்கவேண்டிய தேவை ஏற்படும் பட்சத்தில் மக்களுக்கு அப்பொருள்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடை யில் சண்டை கடுமையாகி இருப்பதன் காரணமாக யாழ்.குடாநாட்டிற்கான அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளாக குடாநாட்டிற்கு உணவுப் பொருள்களை எடுத்துவரும் பிரதான விநியோகப் பாதையாக ஏ9 நெடுஞ்சாலையே இருந்து வருகின்றது. தற்போது அது முற்றுமுழு தாக மூடப்பட்டுள்ளது. எப்போது மீண்டும் திறக்கும் என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து தனியார் வியாபாரிகள் பொருள்களைப் பதுக்கும் நடவடிக்கைகளிலும் ஆங்காங்கு ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அனேகமாக அனைத்து வியாபரிகளுமே பொருள்களின் விலைகளை எக்கச் சக்கத்திற்கு எகிற வைத்துள்ளனர். ஊரடங் குத் தளர்வு நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு பல வியாபாரிகள் தமது கடை களில் இருந்தும் வர்த்தக நிலையங்களில் இருந்தும் பொருள்களை ஏற்றி தமது வீடுகளுக்கு எடுத்துச் சென்றதை பெருமெடுப்பில் அவதானிக்க முடிந்தது.

நேற்று முற்பகல் 10 மணிமுதல் 12.30 மணிவரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட சமயத்தில் பொருள்களைக் கொள்வனவு செய்ய முண்டியடித்த பொதுமக்கள் பொருள்களின் விலைகளைக் கேட்டு ஏக்கமடைந்தனர். அவை ஆகாயத்தின் உச்சியில் போய் உட்கார்ந்துகொண்டிருந்தன. பல பொருள் களைப் பெறமுடியாத தட்டுப்பாட்டு நிலைமையும் காணப்பட்டது. அச்சத்தின் காரணமாக அளவுக்கதிகமாகப் பொருள்களை மக்கள் வாங்க முற்பட்டதும் இதற்கொரு காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையே, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொருள்களைக் கப்பல் மூலம் அனுப்புவதற்கு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார் என தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் தெரிவித்தார்.

நன்றி-www.newstamilnet.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.