Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எழிலன் தொடர்பான ஆட்கொணர்வு மனு குறித்து விசாரணைக்கு உத்தரவு

Featured Replies

விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட ஐந்து பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான ஆரம்ப விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருக்கின்றது.

இறுதி யுத்தத்தின்போது கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி எழிலன் உட்பட பெரும் எண்ணிக்கையான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அராசங்கத்தின் பாதுகாப்பு உறுதி மொழியை ஏற்று இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தாங்கள் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை இராணுவத்தினரிடம் கையளித்ததாகவும், இராணுவத்தினர் அவர்களைப் பொறுப்பேற்று, தமது பஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்றதாகவும்,அவர்கள் இன்னமும் திரும்பவில்லை என்றும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

110426082032_camp_304x171_bbc_nocredit.j

இறுதிப் போர் நடந்த இடம்

 

நான்கு வருடங்களாகிவிட்ட போதிலும், அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை இராணுவமோ அல்லது அரசாங்கமோ தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றும். எனவே அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை விசாரணை செய்வதுடன், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரி, எழிலன் உட்பட ஐந்து பேர் தொடர்பில் ஆட் கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

சரணடையவில்லை

இந்த மனுக்கள் தொடர்பாக இராணுவ தரப்பில் கால தாமதத்தின் பின்னர் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தங்களிடம் எவரும் சரணடையவில்லை என்றும், தாங்கள் யாரையும் எவரிடமிருந்தும் பொறுப்பேற்கவில்லை என்றும் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, தங்களுடைய ஆம்கொணர்வு மனுக்களில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் ஆஜராகியிருந்த மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் மேல் நீதிமன்றத்தில் கோரியதையடுத்து, இது தொடர்பான நீதவான் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளை அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி ஆரம்பித்து கூடிய விரைவில் நடத்தி முடித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது,

இதேவேளை, மற்றுமொரு தொகுதியாகிய மேலும் 7 பேர் தொடர்பிலான ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான இராணுவ தரப்பு கருத்துக்களை வரும் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டு, வவுனியா மேல் நீதிமன்றம் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்த்தரப்பினராகிய இராணுவ தரப்பினருக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/09/130912_ezhilancase.shtml

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர் - நேரில் பார்த்தவர் தகவல்

 

 

விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான லோறன்ஸ் திலகர் அல்லது லோறன்ஸ் கிறிஸ்ரி, இளம்பருதி, யோகரட்ணம் யோகி, விடுதலைப்புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை, தங்கன், குட்டி, பாப்பா, பூவண்ணன் ஆகியோர் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்ததற்கான சாட்சியங்கள் இருக்கின்றன என ’சிறிலங்கா காடியன்’ என்ற ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்திருப்பதாவது,

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டியு குணசேகர அவர்கள் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களான யோகரட்ணம் யோகியும் க.வே. பாலகுமாரனும் இறுதியாக நடந்த யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று வெளியிட்ட தகவலைத் தொடர்ந்து படையினரிடம் சரணடைந்து இராணுவத்தின் பிடியிலிருந்த ஏனைய சில மூத்த உறுப்பினர்கள் தொடர்பாக அவர்களது உறவினர்கள் தகவல் தருமாறு கேட்கின்றனர்.

இந்தக் கட்டுரையில் வெளியிடப்படும் விபரங்கள் நம்பகமான வட்டாரங்களிலிருந்து கிடைத்த உண்மையான தகவலாகும்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக குறித்த நபரின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.

இங்கு குறிப்பிடப்படும் விபரங்கள் தொடர்பில் மனித உரிமை அமைப்புக்கள் அல்லது சர்வதேச சட்ட நிறுவனங்கள் தகவல் கோரும் பட்சத்தில் சிறிலங்கா கார்டியன் அவர்களுக்கு தொடர்புபட்ட நபரின் தொடர்பை ஏற்படுத்தித் தரும்.

இந்தத் தகவலின்படி, மே 18, 2009 காலை 8.00 மணிக்கு அதாவது உத்தியோகபூர்வமாக யுத்தம் முடிவடைந்துவிட்டததாக அறிவிக்கப்பட்டமைக்கு ஒரு நாள் முன்னர், வன்னியிலிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் 45 உறுப்பினர்கள் இராணுவத்திடம் சரணடைவதற்கான ஒழுங்குகளை வண.பிதா. பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார்.

இடைத்தங்கல் முகாம்களுக்கு கொண்டு செல்வதற்காக காத்துநின்ற மக்கள் முன்னிலையில், வட்டுவாகலிற்கு அண்மையிலுள்ள குறிப்பிட்ட இடத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பொதுமக்களிடமிருந்து புலி உறுப்பினர்களைப் பிரித்த இராணுவத்தினர் முழுமையான உடற் சோதனையை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவர்கள் ஒவ்வொருவரும் ஒளிப்படம் எடுக்கப்பட்டு பேருந்து ஒன்றில் ஏற்றப்பட்டு கொண்டுசெல்லப்பட்டனர்.

சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களுள் லோறன்ஸ் திலகர் அல்லது லோறன்ஸ் கிறிஸ்ரி, இளம்பருதி, யோகரட்ணம் யோகி, விடுதலைப்புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை, தங்கன், குட்டி, பாப்பா, பூவண்ணன் ஆகியோரும் அடங்குவர் என இதனை நேரில்கண்ட பொதுமகன் ஒருவர் தெரிவித்தார். அவர்களுடன் வண.பிதா. பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரும் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த விடுதலைப்புலி உறுப்பினர்களின் உறவினர்கள் அவர்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவிட்டனர்.

ஆனால் அவர்களால் எந்த தகவலையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. விரக்தியுற்ற சிலர் டக்ளஸ் தேவானந்தாவை அணுகியபோது, இவர்கள் இராணுவத்தின் தடுப்பில் இல்லை எனக்கூறி அவரும் அவர்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

க.வே. பாலகுமாரன் அவர்கள் மே 16 அன்று இராணுவத்திடம் சரணடைந்ததாகவும் அவரும் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார்.

இராணுவத்திடம் சரணடைந்து அவர்களால் அழைத்துச்செல்லப்பட்டனர் என்பது ஒருபுறமிருக்க, யோகரட்ணம் யோகியும் க.வே. பாலகுமாரனும் போரில் கொல்லப்பட்டதாக அமைச்சர் டி.யு. குணசேகர உறுதி செய்வது அவர் கூறும் இக்கதியே சரணடைந்த ஏனைய புலி உறுப்பினர்களுக்கும் நேர்ந்திருக்கலாம் என அவர்களின் உறவினர்கள் அஞ்சுகின்றனர்.

இந்த இருவரும் போரில் இறக்கவில்லை எனவும் அவர்கள் போரில் கொல்லப்பட்டார்கள் என்ற அமைச்சரின் கூற்று பொய் எனவும் இந்த சாட்சி உறுதி செய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போன கணவரது வருகை பசில் ராஜபக்ச கூறுவது போல எனக்கு சுயநலம் தான்!- அனந்தி சசிதரன்

நாங்கள் எவருமே காணாமல் போனவர்களிற்காக தேர்தல் காலத்தினில் மட்டும் குரல் எழுப்பவில்லை. அரசின் முக்கிய அமைச்சரான பஸில் ராஜபக்ஸவோ காணாமல் போனோர் பற்றி கதைக்கவேண்டாமென்கிறார். எமக்கான நீதி கிடைக்கும் வரை இந்தக் குரல்கள் ஓயப்போவதில்லை. இவ்வாறு அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

elect-ananthiy.jpg

அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

இலங்கை அரசு ஒரு புறம் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் பற்றி கதைக்கின்றது.

அரசின் முக்கிய அமைச்சரான பஸில் ராஜபக்ஸவோ காணாமல் போனோர் பற்றி கதைக்க வேண்டாமென்கிறார்.

எங்கள் குடும்பத் தலைவர்களை எங்கள் குடும்ப உறவுகளை பற்றி கதைப்பது சுயநல அரசியல் நோக்கமென்கிறார்.

இவ்வாறெல்லாம் ஞானோபதேசம் செய்துவிட்டு இரவு ஆட்களை விட்டுத் தாக்குகிறார்கள். இதுவோ அவர்களது ஜனநாயக அரசியல் என கேட்க விரும்புகின்றேன்.

நாங்கள் எவருமே காணாமல் போனவர்களிற்காக தேர்தல் காலத்தினில் மட்டும் குரல் எழுப்பவில்லை.

யாழ்.குடாநாடு படையினரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட 1996 ம் ஆண்டு காலப்பகுதி தொடக்கமாயினும் சரி அதே போன்று வன்னி படையினரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட 2009 மே 19 இன் பின்னரும் சரி ஆயிரமாயிரம் தமிழ் குடும்பங்கள் காணாமல் போன உறவுகளிற்காக இந்நிமிடம் வரை குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன.

எமக்கான நீதி கிடைக்கும் வரை இந்தக் குரல்கள் ஓயப் போவதுமில்லை.

அனந்தி சசிதரனாகிய நான் பல தடைவைகளாக எனது நிலைப்பாட்டை தெளிவு படுத்தியுள்ளேன்.

அரசியலுக்கு அப்பால் காணாமல் போயுள்ள ஆயிரமாயிரம் உறவுகளிற்காக எவருமே குரல் தர முன்வராத நிலையினில் பாதிக்கப்பட்டவள் என்ற அடிப்படையினில்; ஏனையவர்களையும் இணைத்துக் கொண்டு குரல் எழுப்ப நான் முன்வந்திருந்தேன்.

இத்தேர்தலில் வெற்றி தோல்வி என்பதற்கப்பால் காணாமல் போனோருக்காக குரல் எழுப்புவதென்பது எனது வரலாற்றுக் கடமையாகும்.

எமது குரலிற்கான ஓர் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளவே இத்தேர்தல் களத்தினில் குதிக்க நான் முடிவு செய்திருந்தேன்.

அமைச்சர் பஸில் ராஜபக்ஸ கூறுவது போல காணாமல் போனோர் பற்றி கதைப்பது சுயநலமென்ற கருத்தினில் எனக்கு அதில் ஒருபகுதி உடன்பாடுண்டு.

ஏனெனில் நாள்தோறும் காணாமல் போயுள்ள தமது தந்தையை தேடி அழுது கொண்டிருக்கும் மூன்று பெண் குழந்தைகளினது தாய் என்ற வகையினில் எனது கணவரது வருகை எனக்கு சுயநலமிக்கதொன்றே.

என்னைப் போன்றே ஏனைய பெண்களும் தங்களது குழந்தைகளிற்காக காத்திருப்பர்.

தாக்குதல்களை நடத்துவதாலோ மிரட்டல்களை விடுப்பதாலோ என்றுமே எனது குரல்களை ஒடுக்கிவிட முடியாது.எமது உறவுகளது வருகைக்காக நான் தொடர்ந்தும் குரல் கொடுப்பேன்.

அச்சமூட்டல்களும் தாக்குதல்களும் உணர்வுகளை முடக்கிவிட முடியாதென்பதை மீண்டுமொருமுறை இப்போதும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எம்மீது யாழ்.நகரின் ஐந்து சந்தியினில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பினில் கூட்டமைப்பின் தலைமைக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் புகார் செய்துள்ளேன்.

அப்பட்டமாக பின் தொடர்ந்து வந்து அத்தகைய தாக்குதல்களை நடத்துபவர்கள் யாரென்பது தொடர்பினில் எவருக்கும் சொல்லி தரவேண்டியதில்லை.

நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் நடக்கப் போவதில்லையென்பதை மீண்டுமொரு முறை இத்தாக்குதல் அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கின்றதென்பதை சுட்டிக்காட்ட நான் விரும்புகின்றேன்.

**

எழிலனை எவரும் ஒப்படைக்கவேயில்லை – மேல்நீதிமன்றத்தில் சிறிலங்கா இராணுவம் அறிக்கை

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட எவரும் தம்மிடம் சரணடையவோ, எவரையும் தாம், யாரிடம் இருந்தும் பொறுப்பேற்கவோ இல்லை என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடந்து வரும், எழிலன் உள்ளிட்ட ஐந்து பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்களின் மீதான விசாரணையிலேயே, சிறிலங்கா இராணுவம் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

2009ம் மே மாதம் 18ம் நாள் எழிலன் உள்ளிட்ட பெருமளவு விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள், அரசின் பாதுகாப்பு உத்தரவாதத்தின் பேரில், சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் இவர்களைத் தாம் படையினரிடம் ஒப்படைத்ததாகவும், மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட அவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறும் உறவினர்கள் வவுனியா மேல்நீதிமன்றில் முறையிட்டிருந்தனர்.

இந்த மனுக்கள் தொடர்பாக சிறிலங்கா இராணுவ தரப்பில் இழுத்தடிப்புகளின் பின்னர், சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே, தம்மிடம் எவரும் சரணடையவில்லை என்றும், தாங்கள் யாரையும் எவரிடமிருந்தும் பொறுப்பேற்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆட்கொணர்வு மனுக்களில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் முன்னிலையான

மூத்த சட்டவாளர் கே.எஸ்.ரட்ணவேல் நீதிபதியிடம் கோரினார்.

இதையடுத்து, இதுதொடர்பான விசாரணையை நடத்தி கூடிய விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்துக்கு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை, மேலும் 7 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் குறித்து, வரும் ஒக்டோபர் 23ம் நாள் சிறிலங்கா இராணுவத் தரப்பைப் பதிலளிக்குமாறும் வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

http://www.eelamview.com/2013/09/12/ananthi-4/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.