Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் – ஈழத்தமிழரின் இராஜதந்திர யுத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாணசபைத் தேர்தல் – ஈழத்தமிழரின் இராஜதந்திர யுத்தம்
[ புதன்கிழமை, 18 செப்ரெம்பர் 2013, 07:19 GMT ] [ புதினப் பணிமனை ]

 

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், ஈழத்தமிழர்கள் எதிர்கொண்டுள்ள முக்கியமான சவால் இது.

வரும் சனிக்கிழமை வடக்கிலுள்ள தமிழர்கள் அளிக்கப் போகும் தீர்ப்பை உலகமே உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உலகமயப்படுத்திய ஆயுதப்போராட்டம், முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த பின்னர், தமிழர்களின் எதிர்காலத்தை தமிழர்களும், வெளியுலகமும் தீர்மானிக்கும் களமாக இது மாறியுள்ளது.

இது தன்னாட்சிக்கும், ஒற்றையாட்சிக்கும் இடையில் நடக்கின்ற நேரடி யுத்தம்.

இதில் எவர் வெல்கிறார் என்பதைப் பொறுத்தே ஈழத்தமிழர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.

தனிநாடு கோரிப் போராடிய தமிழினம், அதிகாரங்களில்லாத மாகாணசபைக்காகப் போராடுவது நியாயமா என்ற கேள்விகளும் காதுகளைத் துளைக்கத் தான் செய்கின்றன.
முள்ளிவாய்க்கால் பேரழிவு ஆயுதப் போராட்டத்துக்கு மட்டும் முடிவு கட்டவில்லை.

தமிழ்த் தேசிய இனத்தின் பேரம் பேசும் பலத்தையும் கூடவே, அழித்து விட்டிருந்தது.

தனிநாடு என்ற உச்ச இலக்கை அடைவதற்கான கதவுகளையும் அது இறுக அடைத்து விட்டது.

ஆயுதப் போராட்டத்தின் முடிவில், நடுக்கடலில் தள்ளிவிடப்பட்ட நாம் ஏதாவதொரு சிறுதுரும்பையேனும் பற்றிப் பிடித்துக் கொண்டு கரையேறுவதே சாதுரியமானது.
இல்லையேல் மூழ்கிப் போய் விடும் ஆபத்தில் இருந்து தப்ப முடியாது.

இன்றுள்ள புவிசார் அரசியல் போக்கு, தனியரசுக்கான போராட்டத்தை ஆயுதவழியில் முன்னெடுப்பதற்கு ஒருபோதும் இடம்தரப் போவதில்லை.

அத்தகையதொரு ஆயுதப் போராட்டத்துக்கான இருப்பையும் தமிழினம் கொண்டிருக்கவுமில்லை.

எனவே, ஜனநாயக அரசியல் வழிமுறைகளின் ஊடாக தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பையும், பலத்தையும், உறுதிப்படுத்திக் கொள்வதே முக்கியமானது.

அதுவே, போராட்டத்தை இராஜதந்திரத்துடன் முன்கர்த்துவதற்கான ஒரே வழி.

நாம் எதைச் செய்வோம் என்று எதிரி எதிர்பார்க்கிறானோ, அதனை செய்யாமல் இருப்பதும், நாம் எதைச் செய்யமாட்டோம் என்று எதிரி நினைக்கிறானோ, அதை செய்து காட்டுவதும் தான், எதிரிகளைத் திகைக்க வைக்கும் முக்கியமான உத்தி.

தமிழர்தரப்புக்கு இராஜதந்திரம் தெரியாது, அரசியல் வழிமுறைகளின் ஊடாக அழுத்தம் கொடுக்கும் சக்தியாக அவர்களால் எழுச்சி பெற முடியாது என்று சிங்களத் தலைமைகள் இறுமாந்திருந்தன.

ஆனால், வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதன் தலைமையும் நகர்த்திய காய்நகர்த்தல்கள், சிங்களப் பேரினவாத அரசியல் சக்திகளுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

முதலமைச்சர் வேட்பாளர் தெரிவும், தேர்தலுக்காக களப்பணியாற்றும் முறையும், தேர்தல் அறிக்கையும், சிங்களத் தலைமைகளை அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளதென்றால் அவர்கள் இவை எதையும் எதிர்பார்க்கவில்லை என்றே அர்த்தம்.

அவர்களின் கணிப்புகள் பிசகத் தொடங்கி விட்டன. அதுவே சிங்களத் தலைமை எதிர்கொண்டுள்ள முதல் தோல்வி தான்.

இன்றுள்ள சூழலில், தமிழரின் அரசியல் உரிமைப் போராட்டத்தை முன்னகர்த்துகின்ற ஒரு வாகனம் தான், மாகாணசபைத் தேர்தல்.

தமிழரின் ஆயுதப் போராட்டத்தை சிறிலங்கா அரசு எப்படி பயங்கரவாத முத்திரை குத்தி உலகிற்கு அறிமுகப்படுத்தியதோ, அதுபோலவே, தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளையும் விடுதலைப் புலிகளின் அபிலாசைகளாக முன்னிறுத்துவதிலும் சிறிலங்கா அரசு வெற்றி கண்டிருந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளில், சிறிலங்கா அரசு தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன என்று அறிந்து கொள்ளவும் இல்லை, தமிழர் பிரச்சினைக்கான தீர்வு என்ன என்று வெளிப்படுத்தவுமில்லை.

வெறும் அபிவிருத்திகள், திட்டங்கள் மூலம் தமிழர் பிரச்சினையை மூடிமறைப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தது.

இப்போது நடக்கவுள்ள தேர்தல், அனைத்துலக அழுத்தங்களினால், நடத்தப்படும் ஒன்று.

இது தமிழர்களின் எதிர்பார்ப்புகள், விருப்பங்கள் என்னவென்று வெளியுலகிற்கு வெளிப்படுத்தக் கிடைத்துள்ள வாய்ப்பு.

மாகாணசபை, தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக அமையாது போனாலும், இந்தத் தேர்தல் அந்தத் தீர்வை அடைவதற்கான ஒரு கருவியாக மாறியுள்ளது.

வடக்கிலுள்ள தமிழர்கள் இந்தத் தேர்தலில் வெளிப்படுத்தப் போகும், செய்தி, சிங்கள அரசுக்கு சவால்மிக்கதொன்றாக மட்டும் அமைவது முக்கியமில்லை, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வைத் தருவதாகவும் அமைய வேண்டும்.

சுயநிர்ணய உரிமையுள்ள, தமிழ்த் தேசிய இனத்தின் மரபுவழித் தாயகத்தில், ஒரு சுயாட்சி அதிகாரமுள்ள அலகை அடைவதற்கான ஏணி தான் இந்தத் தேர்தல்.

இந்த ஏணியைப் பயன்படுத்தி உச்சத்துக்குச் செல்வதற்கான வாய்ப்பைத் தவறவிட்டால், இன்னொரு வாய்ப்பு இனிக் கிடைக்காது.

கிடைத்துள்ள வாய்ப்பை நழுவவிடாமல் பற்றிக் கொள்வது தான், இன்றுள்ள சூழலில் தமிழரின் புத்திசாதுரியத்தை வெளிப்படுத்துவது மட்டுமன்றி சிறிலங்கா அரசையும் தீர்வு ஒன்றுக்குள் இழுத்து வரும்.

காலத்தின் தேவையை கருத்தில் கொள்வோம். செயற்படுவோம்.

- புதினப்பலகை குழுமத்தினர்

http://www.puthinappalakai.com/view.php?20130918109074

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.