Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செஞ்சோலை படுகொலைகள் - வைகோ கண்டனம்

Featured Replies

செஞ்சோலையில் கோர நர்த்தனம் ஆடிய சிங்கள அரசின் காட்டுமிராண்டிச் செயலுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று திங்கட்கிழமை வைகோ வெளியிட்ட அறிக்கை:

உலகெங்கும் உள்ள தமிழர்களின் நெஞ்சத்தை மனிதநேயம் உள்ளோர் மனதை நடுநடுங்கச் செய்யும் படுகொலையை சிங்கள அரசின் விமானப்படை நடத்தி இருக்கிறது. இலங்கைத் தீவின் கிளிநொச்சிப் பகுதியில், செஞ்சோலை எனும் குழந்தைகள் காப்பகம் மனிதநேயத் தொட்டிலாக இயங்கி வருகிறது.

சிங்கள அரசின் ஈவு இரக்கம் அற்ற இனப்படுகொலையால் உயிர்நீத்த தமிழர்களின் குழந்தைகளை-தாய்-தந்தையரை இழந்த அனாதைக் குழந்தைகளைப் பாதுகாத்து, அரவணைத்து வளர்க்கும் சேவை மையமாக இந்த செஞ்சோலையை விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்தி வருகின்றனர். .

இங்கு பயிலும் மாணவ-மாணவிகளை, பச்சிளம் குழந்தைகளை, சிங்கள அரசின் விமானங்கள் குண்டு வீசி கொலை பாதகம் புரிந்து உள்ளன.

இஸ்ரேல் நாட்டில் இருந்து சிங்கள அரசு வாங்கி உள்ள கிபீர் குண்டுவீச்சு ஜெட் விமானங்களாக நான்கு போர் விமானங்கள் இங்கு சரமாரியாக குண்டுவீசித் தாக்கியதில், 70 சின்னஞ்சிறு மாணவ-மாணவிகள் கொல்லப்பட்டு உள்ளனர். நூற்றுக்கும் அதிகமான பள்ளிப் பிள்ளைகள் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கின்றனர். இத்தகைய பேரழிவுக் கொடுஞ்செயல்கள் அண்மைக்காலத்தில் வேறு எந்த நாட்டிலும் அரசாங்கப் படைகளால் நடத்தப்பட்டது இல்லை.

ஹிட்லரின் நாஜிப் படைகள்தான் இத்தகைய அக்கிரமமான - அழிவு வேலைகளைச் செய்தது உண்டு. இலங்கையில் போர் நிறுத்தக் கண்காணிப்பு வேலையில் ஈடுபட்டு உள்ள அமைப்பின் பிரதிநிதிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளதாகத் தெரிவித்து உள்ளனர்.

ஐ.நா. மன்றத்தில் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் அமைப்பினரும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளும், செஞ்சோலையைப் பார்வையிட்டு, நடந்து உள்ள இந்த படுபாதகக் கொலையை உலக நாடுகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று துன்பக் கடலில் பரிதவிக்கும் ஈழத்தமிழர்கள் விரும்புகின்றனர்.

இந்த மாபாதகக் கொடுஞ்செயலில் ஈடுபட்ட சிங்கள அரசு, ஓர் பயங்கரவாத அரசு என்றும், அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் பயங்கரவாதச் செயலை பட்டவர்த்தனமாகச் செய்யும் அரசு என்றும் குற்றம் சாட்டுகின்றேன்.

செஞ்சோலையில் கோர நர்த்தனம் ஆடிய சிங்கள அரசின் காட்டுமிராண்டிச் செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கின்றேன்.

மனித நேய உணர்வு உள்ள இந்திய மக்களின், தாய்த் தமிழகத்து மக்களின் மனசாட்சியின் கதவு திறக்கட்டும்.

மானத்தோடும் - உரிமையோடும் வாழ, தங்கள் தாயகத்து மண்ணில் ஆக்கிரமிப்பு ராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை நடத்துகிறார்கள்.

இந்த நிலையில் இலங்கையின் சிங்கள அரசு இந்தியாவின் இராணுவத் தளவாடங்களையும், இந்திய கப்பற்படையின் உதவிகளையும் நாடியதாகவும், அம்மாதிரியான உதவிகளைச் செய்வதற்கு இந்திய இராணுவ அமைச்சகம் முன்வந்து உள்ளதாகவும், ஊர்ஜிதமாகாத தகவல்கள் இலங்கை அரசின் ஆதரவு ஊடகங்களில் வெளிவந்து உள்ளன.

இலங்கையின் சிங்கள இனவாத அமைப்புகளுக்கும், தமிழர்களை அடிமை இனமாக ஒடுக்க முயலும் பேரினவாதிகளுக்கும், யுத்த களத்தில் பீதி அடைகிற சிங்கள இராணுவத்துக்கும் நம்பிக்கை ஊட்டுவதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியாகக் கூட இத்தகைய செய்திகள் ஒருவேளை இருக்கக்கூடும்.

இலங்கையில் போர் மூளும் சூழலில் இந்தியா எந்தவிதமான உதவியும் செய்யாது என்றும், ஆயுத விற்பனையில் கூட ஈடுபடாது என்றும் 1999 ஆம் ஆண்டு அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் ஏற்படக் கூடாது.

எனவே, பதட்டம் நாளுக்கு நாள் இலங்கையில் வளர்ந்து வரும் இன்றையச் சூழ்நிலையில் சிங்கள அரசுக்கு இராணுவ ரீதியிலான எத்தகைய உதவியையும் இந்தியா செய்யக் கூடாது என்றும், அப்படி செய்தால் தமிழ் இனத்துக்கு எதிராக சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்புத் தாக்குதலுக்கு உதவுகின்ற பெரும் பழிக்கு ஆளாக நேரிடும் என்றும் பொறுப்பு உணர்வோடு இந்திய அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வைகோ அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

http://www.eelampage.com/?cn=28206

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.