Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கென்னியா பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு; 20பேர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
gunken.jpg
கென்னியாவின் தலைநகர் நெய்ரோபியிலுள்ள பிரபல பல்பொருள் அங்காடியினுள் புகுந்த ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 20இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
நெய்ரோபியிலுள்ள பல்பொருள் அங்காடிக்குள் புகுந்த ஆயுததாரிகள் கொள்ளையடிக்க முற்பட்டதாகவும், அதன் பின்னர் தீவிரவாத தாக்குதலாக அதனை மாற்றிக்கொண்டதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
 
தற்சமயம் பல்பொருள் அங்காடியைச் சுற்றி பாதுகாப்பு பிரிவினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது.
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Kenya-mal-23913-150.jpg

கென்யா நாட்டின், நைரோபி நகர வணிக வளாகத்தில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், இந்தியர்கள் உட்பட,68 பேர் உயிரிழந்தனர். ஆப்ரிக்க நாடான கென்யாவில், "வெஸ்ட் கேட்' என்ற வணிக வளாகம் உள்ளது. நேற்று, இந்த வணிக வளாகத்தில் புகுந்த, அல் குவைதா அமைப்புடன் இணைந்த, "அல்-ஷபாப்' என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த, 15 பேர், அங்கிருந்த வாடிக்கையாளர்கள் பலரை, சரமாரியாக சுட்டனர்; இன்னும் பலரை, பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இந்த தாக்குதலில், இந்தியர்கள் உட்பட, 59 பேர் கொல்லப்பட்டனர். 175 பேர் படுகாயமடைந்தனர். வணிக வளாகத்தின் அடித்தளம் மற்றும் நான்காவது தளத்தில், பயங்கரவாதிகள் ஒளிந்துள்ளனர்.

  

இதற்கிடையே, கென்ய பாதுகாப்பு படையினர், வணிக வளாகத்தில் நுழைந்து, 1,000க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளனர். சுமார் 30 பணயக் கைதிகள் இன்னமும் அவர்கள் வசம் உள்ள நிலையில், கென்ய இராணுவம் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. சோமாலியாவில், அமைதி ஏற்படுத்தும் பணியில், கென்ய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நைரோபி வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்தியுள்ளதாக, அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்து உள்ளது.

 

இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீதரன் நடராஜன், 40, பரம்சு ஜெயின், 8, ஆகியோர், இந்த தாக்குதலில் பலியாகி உள்ளனர். நைரோபியில் உள்ள மருந்து கம்பெனியில், நடராஜன் பணியாற்றி வந்தார். இந்த தாக்குதலில், நடராஜனின் மனைவி மஞ்சுளாவும், பரம்சு ஜெயினின் தாய் முக்தா, சகோதரி பூர்வி, மற்றும் ராமசந்திரன் ஆகியோர் காயமடைந்துள்ளனர். பயங்கரவாதிகளின், இந்த காட்டுமிரான்டி தனமாக தாக்குதலுக்கு, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

வெஸ்ட் கேட் வணிக வளாகத்தில் மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த பகுருதீன் என்பவரும் இறந்ததாக தகவல் பரவியது. இது குறித்து உளவுத்துறை மற்றும் தனிப்பிரிவு போலீசார் விசாரணை செய்கின்றனர். நேற்று மாலை வரை இறந்தவர் குறித்த தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை. இறந்தவர் போலி பாஸ்போர்ட்டில் சென்றுள்ளரா எனவும் விசாரணை செய்து வருகின்றனர்.

 

அதேவேளை, இந்தச் சம்பவத்தில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 7 பேர் பலியாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.அவர்கள் சவுராஷ்டிரா மற்றும் கட்ஸ் பகுதிகளை சேர்ந்தவர்கள் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=93536&category=WorldNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.