Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழிழ விடுதலைப்போரின் தொடர்ச்சியை யாரும் நிறுத்திவிட முடியாது-காசியானந்தன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கின்ற யோக்கிய அருகதை தகுதி தமிழ் உலகத்தில் எவனுக்கும் கிடையாது நேற்று கொழும்பில் முழைத்து இன்று யாழ்ப்பாணத்தில் தளைவிட்ட விக்னேஸ்வரன் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது நீதியே இல்லாத தேசத்தில் நீதிபதியாக இருந்தவர் வாயடிக்கின்றார் கடும்தொனியில் காசியானந்தன்(காணொளி)

 

வடமாகாண தேர்தல் முடிந்து அங்கே விக்னேஸ்வரன் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் இதனை பெரிதாக ஊடகர்கள் அலசி ஆய்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

அங்கிருந்து கொண்டு தமிழர்களின் விடுதலைஉணர்வினை மழுங்கடிக்கும் முயற்சியினை நாலுபக்கத்திலும் நஞ்சர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த தேர்தல் மகிந்த அரசிற்கு பெரிதும் உதவி புரிந்திருக்கின்றது மகிந்தவின் அரசு ஒருநேர்மையான அரசு ஜனநாயகத்தை மதிக்கிற அரசு ஆகவே அந்த ஜனநாயவாதியான மகிந்த போற்றுதற்குரியவர் என்று ஐ.நா மன்ற ஆணைக்குழு அவர்மீது கொடுமையான சர்வதிகாரி என்ற குற்றச்சாட்டை சுமத்தியிருக்கின்ற நேரத்தில் அவரை ஒருஜனநாயகவாதியாக காட்டுகின்ற நாடகத்திற்கு இந்த மாணாசபை பயன்பட்டிருக்கின்றது

இன்னென்று இந்த மாகாணசபையினை தமிழீழ மக்கள் வடக்கு மக்கள் ஆதரத்திருக்கின்றார்கள் தமிழர் கூட்டமைப்பினை ஆதரித்திருக்கின்றார்கள்.

 

தமிழர் கூட்டமைப்பினை ஏன் ஆதரித்தார்கள் என்றால் அந்த கூட்டமைப்பினை எதிர்த்து நின்ற சிங்கள ஆட்சியாளர்கள் படுதோல்வி அடையவேண்டும் என்ற நோக்கோடுதான் மக்கள் இந்த வாக்கினை அளித்திருக்கின்றார்கள்.

 

விக்னேஸ்வரன் போன்றவர்கள் சமஸ்டிதான் எங்கள் கொள்ளை என்று சொல்கிறார்கள் அந்த சமஸ்டிக்காக வடமாகாண மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை விக்னேஸ்வரன் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழீழத்திற்காக போராடிய மக்களை ஒடுக்கிய அடக்கிவிட்டதான நினைத்த மகிந்த அரசினை தேற்கடித்து தமிழிழத்தின் மீது தமிழீழ மக்கள் உறுதியாக நிக்கின்றார்கள் என்பதற்காகவே கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்.

 

கூட்டமைப்பு ஒருவகையில் சிறுஅளவு பயன்பட்டிருக்கின்றது அது என்னவென்றால் அந்த மண்ணில் சிங்களஆட்சியாளர்களும் அவர்களின் கைகூலிகளும் அந்த மாகாணசபையில் உட்காராமல் தடுத்திருக்கின்றது அது ஒன்றைத்தான் இந்த மாகாணசபை செய்திருக்கின்றது

 

மகாணசபை பயனுள்ளதா இல்லையா என்றால் முழுமையாக பயனற்றது ஆனால் உலகத்தின் பார்வையில் தமிழீழத்தின் ஒருபகுதியினை ஒருமாகாண சபையாக வருகின்றபோது அதுசிங்களவன் கையில் இல்லை என்பதை காட்ட பயன்பட்டிருக்கின்றது.

 

வெற்றிக்களிப்பில் விக்னேஸ்வரன் போன்றவர்கள் பேசுகின்ற பேச்சு அயோக்கியதனமான பேச்சு நாங்கள் தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று அவர் சொல்கின்றார்.அவர் எந்த தமிழீழத்தை கைவிட்டோம் என்று சொல்கின்றார் 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தந்தைசெல்வா தீர்மானம் இயற்றி நிறைவேற்றிய 27ஆண்டுகளாக சமஸ்டி கேட்டு சிங்களவனோடு இணைந்து சமஸ்டி பெறமுடியாது என்று உறுதியாக நம்பிய தந்தைசெல்வா அதே அண்டு வட்டுக்கோட்டையில் நிறைவேற்றி தமிழீழ தீர்மானத்தை எதிர்த்து தமிழீழ தீர்மானத்தை கைவிட்டுவிட்;டோம் என்று சொல்கிறார்.

 

அந்த தமிழீழ தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு விட்டு பொது தேர்தலில் வாக்களித்து அதை வெற்றிபெற செய்தார்களே அந்த வெற்றிபெற செய்த தமிழிழத்தை கைவிட்டு விட்டோம் என்று சொல்கிறார்

 

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று காலம்முழுவதும் சொல்லி வந்த எங்கள் அரும்பெரும் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் கொண்டிருந்த அந்த ஈடுணையற்ற கொள்ளை தமிழீழம் அதனை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கிறார்

 

எந்த தமிழீழத்திற்காக 40ஆயிரம் வீரவிடுதலைப்புலிகள் தங்கள் உயிரைகொடுத்து மாவீரர்களாகி போனார்களே அந்த தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கிறார் 3இலட்சம் மக்கள் செத்து மடிந்தார்களே இதுவரை அந்த தமிழீழத்தை கைவிட்டு விட்டோம் என்று சொல்கிறார்.

 

தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கின்ற யோக்கிய அருகதை தகுதி தமிழ் உலகத்தில் எவனுக்கும் கிடையாது நேற்று கொழும்பில் முளைத்து இன்று யாழ்ப்பாணத்தில் தளைவிட்ட விக்னேஸ்வரன் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது நீதியே இல்லாத தேசத்தில் நீதிபதியாக இருந்தவர் வாயடிக்கின்றார்.

 

அவருடைய சொற்பொழிவு தமிழீழ மக்களின்அடிநெஞ்சில் நெருப்பு வைக்கின்றது தமிழீழ மக்களின் உணர்வு பற்றி எரிகிறது அவர் மறந்துவிடகூடாது அவர் தெளிவாக சொல்லவேண்டும் ஒன்று பட்டஇலங்கைக்குள் நாங்கள் சிக்கலை தீர்ப்போம் என்று சொல்கிறார் சிங்கள சிறீலங்காவின் சட்டதிட்டங்களுக்கு அமைய எங்களின் போராட்டங்கள் அமையும் என்கிறார் நான் இவரைபார்த்து கேட்கிறேன் போராடுங்கள் உங்களால் முடியுமா? காந்தியடிகள் பிரிட்டிஸ்காரனின் சட்டதிட்டங்களுகமையதான் இந்தியாவில் அறபோராட்டங்கள் நடத்தினார் இது உங்களால் முடியுமா?

 

ஏதாவது ஒரு மேடையில் விக்னேஸ்வரன் என்னுடைய தாயகம் தமிழீழம் என்று சொல்லமுடியுமா?

விக்னேஸ்வரனோ சம்மந்தனோ துணிச்சலான ஒருமேடையில் என்னுடைய தாயகம் தமிழீழம் என்று சொல்லமுடியுமா இன்னிலையில் இவர்கள் சமஸ்டி பேசுகின்றார்கள்.

 

வேதாளம் பளையபடி முருங்கைமரத்தில் ஏறுகின்றார்கள் தமிழ் நாட்டுமக்கள் விக்னேஸ்வரனை விட போரடிக்கொண்டிருக்கின்றார்கள் தமிழக முதல்வர் ஜெயலிதா தமிழீழத்திற்கு வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றார்கள் தமிழீழத்திற்காக தமிழ்நாட்டில் இருந்து கூட்டமைப்பை விட அதிகமாக போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.

 

தமிழ்நாட்டில் நெருப்பு விட்டு எரியும் தமிழீழ விடுதலை உணர்வினை அணைக்கவேண்டும் என்று நினைக்கிறார் விக்னேஸ்வரன்.அது அணையாது உலகத்தில் நீங்கள் மட்டும்தான் தமிழீழத்திற்காக இருக்கின்றீர்கள் என்று நினைக்காதீர்கள் தமிழீழத்தில் தமிழீழமா சமஸ்டியா என்று ஒருதேர்தல் நடத்தமுடியுமா அப்பொழுது பாருங்கள் மக்கள் உங்கள் முகத்தில் செருப்பால் அடிப்பார்கள்.

 

இவ்வாறான சின்னத்தனமான முயற்சிகளில் இறங்காதீர்கள் என்று விக்னேஸ்வரனை பார்த்து பணிவாக கேட்டுக்கொள்கின்றேன் என்று உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.

 

http://www.sankathi24.com/news/33567/64//d,fullart.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

1990 ஆம் ஆண்டு பிரேமதாசா பேச்சுக் காலத்தில் சண்டை தொடங்கியவுடன் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையாவிடம் கெஞ்சிக் கூத்தாடி ”நான் இந்தியா போக உதவி செய்யுங்கள்” என்று கெஞ்சிக் கூத்தாடி பின்னர் மாத்தையா இவரை இந்தியா செல்வதற்கு அனுமதித்த கதை எமக்குத் தெரியும் திரு காசியானந்தன்.

 

அதேபோன்று புலம்பெயர் தமிழர்கள் உங்களுக்கும் தேனிசை செல்லப்பாவுக்கும் அனுப்பிய பணத்தில் சமமாக பிரிக்காது நீங்களே முழுப்பணத்தினையும் எடுத்துக்கொண்டதனை அறிந்து பின்னர் செல்லப்பா கோவித்த கதை எங்களுக்குத் தெரியும் திரு காசியானந்தன்.

 

உங்களுடைய பிள்ளைகளை பத்திரமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு அதேபோன்று இந்திய உளவுத்துறையின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நீண்ட காலமாக இந்தியாவில் இருப்பதும் எங்களுக்குத் தெரியும் திரு காசியானந்தன்.

 

இவ்வளவற்றையும் செய்துவிட்டு அந்த மண்ணிலேயே நின்று கொண்டு சிங்கள அரசின் கெடுபிடிகளுக்கு மத்தியில் நின்று தேர்தலைச் சந்தித்த விக்கினேஸ்வரனும் சரி ஆனந்தியும் சரி பிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் சரி போற்றுதலுக்கு உரியவர்கள்.

 

மாகாண சபை மூலம் தேர்தல் மூலம் உரிமைகளைப் பெறுவதற்காக தேர்தலில் நிற்கவில்லை. எந்தத் தேர்தல் வைத்தாலும் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே தமது ஆதரவினை வழங்குவார்கள் என்பதனை உலகுக்கு மீண்டும் மீண்டும் அந்த மக்கள் தெளிவாகக் கூறி வருவதனையே இது காட்டுகின்றது.

 

ஆகவே, இந்தியாவில் இருந்து கொண்டு அறிவுரை கூறுகின்ற வேலைகளை விட்டு விட்டு இரண்டு சினிமாப் பாட்டு எழுதி சம்பாதிக்கலாமா என்று பாருங்கள். விடுதலைப் புலிகளோடு இருந்து இன்று இருப்பே தெரியாத நலையில் இருக்கின்ற புதுவை இரத்தினதுரை அவர்களுக்கு அண்மையில் கூட நிற்கக்கூட நீங்கள் தகுதியற்றவர் என்பதனை மனதில் வைத்திருங்கள்.

 

அதேபோன்று மீண்டும் மீண்டும் புலம்பெயர் தமிழ் ஊடகங்களிடம் கேட்டுக்கொள்வது, இவ்வாறான காவாலித்தன அறிக்கைகளை வெளியிட்டு மீண்டும் மீண்டும் மக்களை குழப்புகின்ற செயல்களை செய்யாதீர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எதிர்த்த புலம்பெயர் ஊடகங்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுவது வரவேற்கத்தக்கது.

 

மீண்டும் கஜேந்திரகுமார் அணியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து பணியாற்றுவது தொடர்பில் சிந்திக்க வேண்டுகின்றேன்.

 

2015 ஆம் அண்டு இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை இன்றே வீச்சோடு எதிர்கொள்ளக்கூடிய வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்துகின்ற வேலையினை தொடங்க வேண்டும்.

 

யாழ். மாவட்டத்தில் இவ்வளவு காலமும் இருந்த 8 ஆசனங்களில் இனி 6 ஆசனங்களே பெற முடியும். ஆகவே, அந்த 6 ஆசனங்களை கைப்பற்றுகின்ற வேலையினை இன்றே செய்ய வேண்டும்.

 

விகிதாசார பிரதிநித்துவ தேர்தல் முறைமை தமிழர்களுக்கு எதிரானது என்பதனை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

Edited by nirmalan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.