Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடுத்த வருடம் இரண்டு தேர்தல்களுக்கு தயாராவோம்-மனோ கணேசன்!

Featured Replies

பாரிய அரசியல் பொருளாதார சர்வதேச நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் இந்த அரசாங்கம் அடுத்த வருடம் ஆரம்பத்தில் மேல்மாகாணசபை தேர்தலையும் நடுப்பகுதியில் ஜனாதிபதி தேர்தலையும் அதையடுத்து பாராளுமன்ற தேர்தலையும் நடத்த முடிவு செய்துள்ளது.

எனவே வருட ஆரம்பத்தில் மேல் மாகாணசபை தேர்தலுக்கும் வருட நடுப்பகுதியில் பாராளுமன்ற தேர்தலுக்கும் நாம் தயாராக வேண்டும். எனவே அடுத்த வருடம் நமக்கு தேர்தல் வருடமாகும்.

வடக்கிலும் மலையகத்திலும் நமது தமிழ் இனம் பெற்றுள்ள வெற்றிகளுக்கு சமானமான வெற்றிகளை மேல்மாகாணசபை தேர்தலில் கொழும்பு கம்பஹா களுத்தறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நாம் பெற வேண்டும். நமது கட்சியின் தனித்துவ பலத்தை உறுதிப்படுத்தி உருவாகப்போகும் புதிய ஆட்சியில் ஒரு பலமிக்க பங்காளி கட்சியாக நாம் இடம்பெற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான எஸ். ராஜேந்திரன் தலைமையில் கொழும்பு பிரைட்டன் விருந்தக மண்டபத்தில் தலைநகர மக்கள் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது

மேல் மாகாணம் எங்கள் கோட்டை. இதை நாங்கள் கடந்த காலங்களை விட மிகவும் அதிகமாக உறுதி படுத்தி காட்டிட வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. யுத்தத்தை முடித்து யுத்த வெற்றியை மாத்திரம் மூலதனமாக கொண்டு நடத்தப்படும் இந்த ஆட்சி அடுத்த வருடம் முடிவுக்கு வரும். இந்நாட்டு சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ள இந்த அரசுக்கு எதிராக ஒரு பலமிக்க எதிரணி ஜனநாயக கூட்டணி உருவாகும் வேளை வந்து கொண்டிருக்கின்றது. அதற்கான பல்வேறு திரைமறைவு அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டுள்ளன.

மகிந்த ராஜபக்சவுக்கு பதிலாக ரணில் விக்கிரமசிங்கவையோ சஜித் பிரேமதாசவையோ சரத் பொன்சேகாவையோ சந்திரிக்கா குமாரதுங்கவையோ ஆட்சியில் அமர்த்தி விட்டு நாம் கைதட்டி வேடிக்கை பார்க்க முடியாது. ஆட்சியின் பயன்பாடு நமது மக்களுக்கும் கிட்டும் வகையில் புதிய ஆட்சியில் நாம் ஒரு பலமிக்க பங்காளி கட்சியாக இருக்க வேண்டும். அதற்கு நமது கட்சி நமது மக்களின் வாக்கு பலத்தை பெற்று இருக்க வேண்டும்.

கடந்த காலங்களில் நாம் பெரும் சவால்களை சந்தித்தோம். அத்தனை சவால்களையும் நாம் வெற்றிகரமாக சந்தித்தோம். இத்துனை சவால்கள் வந்தும் நாம்இ தலைநகர் பிரதேச தமிழர்களின் தலைமை கட்சி என்ற அந்தஸ்தை தேர்தல்கள் மூலம் தக்க வைத்துக்கொண்டுள்ளோம். கஷ்டமான காலங்களில் வந்த சவால்களையே வென்று காட்டிய எமக்கு இனிமேல் எந்த ஒரு சவாலையும் சந்தித்து வெல்லும் திறன் இயல்பாக ஏற்பட்டுவிட்டது.

தேர்தல் முறைமையின் நடைமுறை தேவைகள் காரணமாக நாம் சில தேர்தல்களில் எமது சொந்த ஏணி சின்னத்திலும் சில தேர்தல்களில் யானை சின்னத்திலும் போட்டியிட்டுள்ளோம். தேர்தல் சட்டங்கள் காரணமாகதான் நாம் சில வேளைகளில் பெரும்பான்மை கட்சிகளுடன் தேர்தல் கூட்டுகளை உருவாக்குகின்றோம். எதிர்வரும் தேர்தல்களில் நாம் தனித்தும் போட்டியிடலாம் அல்லது தேர்தல் கூட்டுகளை உருவாக்கலாம். அவற்றை உரிய வேளையில் முடிவு செய்வோம். பயணத்தில் ஆறு வரும்போது அந்த ஆற்று வெள்ளத்தை நீந்தி கடப்போமா அல்லது தோணியில் துடுப்பு வலித்து கடப்போமா என முடிவு செய்வோம். ஆனால் நாம் தனித்து போட்டியிட்டாலும் சேர்ந்து போட்டியிட்டாலும் நமது தனித்துவம் உறுதி படுத்த வேண்டும். 

மேல்மாகாணத்தில் வாழும் நமது தமிழ் மக்களின் எதிர்காலத்தை நாம் ஆளும் கட்சிக்கோ எதிர்கட்சிக்கோ எழுதி கொடுக்க முடியாது. தலைநகர் தமிழ் மக்களின் எதிர்காலம் நமது கைகளில்தான். அடுத்தவன் கைகளில் கொடுத்தோம் என்றால் நமது கதி அதோ கதிதான். நாம் உஷாராக எமது தனித்துவத்தை பாதுகாத்து பலமாக இல்லாவிட்டால் இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து எம்மை ஏமாற்றிவிடுவார்கள். ஏனென்றால் இங்கே எந்த ஒரு பெரும்பான்மை கட்சியும் உண்மையான தேசிய கட்சி இல்லை. எல்லாமே சிங்கள பெரும்பான்மை கட்சிகள்தான். எமது மக்கள் ஆதரவு வேண்டும் என்றால் அது எமது கட்சி மூலமாகத்தான் கிடைக்கும். பெரும்பான்மை கட்சிகளுக்கு எமது மக்களின் ஆதரவை நேரடியாக பெற்று கொள்ள நாம் உதவி செய்ய முடியாது. 

எங்கள் ஆதரவும் வாக்குகளும் வேண்டுமானால் எம்முடன் கூட்டு சேருங்கள். அந்த கூட்டிலே உங்களுக்கும் எங்களுக்கும் உடன்பாடு இருக்குமானால் நாம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் அல்லது தனித் தனியாக போட்டியிட்டு வெற்றிபெற்று சபைக்கு வந்து பின்னர் கூட்டாக வேலை செய்வோம்.

இப்போது இப்படிதான் கொழும்பு மாநகரசபையில் நாம் ஐக்கிய தேசிய கட்சியுடன் தேர்தலுக்கு பின்னர் கூட்டு அமைத்து வேலை செய்கின்றோம். கடந்த மாநகர சபை தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி எங்களை இழிவு படுத்தி பிரச்சாரம் செய்தது. நாம் ஐதேகவின் தமிழ் வாக்குகளை உடைகின்றோம் என்றும் தேர்தல் முடிந்தவுடன் இந்த கேடு கேட்ட அரசாங்கத்துடன் நாம் இணைந்து விடுவோம் என்றும் ஐதேக மேயர் நண்பர் முசம்மில் எமக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.

ஆனால் மாநகரசபை தேர்தலுக்கு பின்னர் என்ன நடந்துள்ளது? ஐதேகவைவிட அதிக தமிழ் வாக்குகளும் அதிக தமிழ் உறுப்பினர்களும் எமது கட்சிக்கு கிடைத்துள்ளன. அரசாங்கம் எம்மை விலைக்கு வாங்கி மாநகரசபையை கைப்பற்ற முயற்சி செய்ததுதான். ஆனால் நாம் விலை போகவில்லை. அத்துடன் நண்பர் முசாமிலின் கொழும்பு மாநகரசபை ஐதேக நிர்வாகத்துக்கு தேவையான பெரும்பான்மையை தந்து நமது கட்சி அவரை காப்பாற்றி வருகிறது.

எனவே ஜனநாயக மக்கள் முன்னணியை எவரும் விலைகொடுத்து வாங்கவும் முடியாது. எம்மை யாரும் பொய் பிரச்சாரம் செய்து இழிவு படுத்தி எமது மக்களின் ஆதரவை பெறவும் முடியாது. கொழும்பில் தமிழ் வாக்கு வங்கி இன்று ஐதேகவிடம் கிடையாது. அது எங்களிடம் இருகின்றது. அது மட்டும் அல்ல கடந்த மாநகரசபை தேர்தலுக்கு பிறகு அது இன்று இன்னமும் வளர்ந்துள்ளது. இந்த உண்மை அடுத்த தேர்தலின் போது கொழும்பு மாவட்டத்தில் மட்டும் அல்ல வத்தளை நீர்கொழும்பு பிரதேசங்களை உள்ளடக்கிய கம்பஹா மாவட்டத்திலும் களுத்தறை மாவட்டத்திலும் வெளிப்படும்.

http://www.sankathi24.com/news/34152/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.