Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்:- பொது நல வழக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்:- பொது நல வழக்கு

09 அக்டோபர் 2013



இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்கும் வழக்கு - 6 வாரங்களுக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மேல் நீதிமன்றில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை மேல் நீதிமன்ற சட்டத்தரணி பி.அருள்மொழிமாறன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

இந்திய பாராளுமன்றத்தில், 1983-ம் ஆண்டு சட்டவிரோத குடியேற்ற சட்டம் இயற்றியது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. இந்தச் சட்டம் முழுவதும் சட்டவிரோதமானது. எனவே அந்த சட்டத்தை ரத்து செய்கிறோம் என்று உயர் நீதிமன்றம் 12-7-2005 அன்று தீர்ப்பளித்துள்ளது.

பூடான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு குடியேறிய 'சக்காஷ்' என்ற இனத்தை சேர்ந்த 65 ஆயிரம் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்று உயர் நீதிமன்றில் தேசிய மனித உரிமை ஆணையம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சக்காஷ் இன மக்களுக்கு குடியுரிமை வழங்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு லட்சம் இலங்கை தமிழ் அகதிகள் வாழ்கின்றனர். அதில் 70 ஆயிரம் பேர் 115 அகதிகள் முகாம்களிலும், 35 ஆயிரம் பேர் வெளியிலும் வசிக்கின்றனர். இவர்களும், சக்காஷ் இன மக்களை போல், 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் வாழ்கின்றனர்.

ஓரு மனிதனின் ஆயுள்காலம் சுமார் 60 அல்லது 70 ஆண்டுகள் ஆகும். அதில், 30 ஆண்டுகளுக்கு மேல் குடியுரிமை இல்லாமல் வாழ்வது என்பது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது. மனித தன்மைக்கு எதிரானது.

தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் இலங்கை தமிழ் அகதிகள் சுமார் ஒரு லட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்கும் வழக்கு - 6 வாரங்களுக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்டுத் தரக் கோரி திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்த வழக்கில் 6 வாரங்களுக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு சிறை பிடிக்கப்படுகிறார்கள்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல முறை கோரிக்கை விடப்பட்டது.

சமீபத்தில் கச்சத்தீவு பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் எழுந்தபோது, மத்திய அரசிடம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

'கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானதல்ல் மீன்வலைகளை காயப்போட இந்திய மீனவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், கச்சத்தீவை உரிமை கொண்டாட முடியாது' என்று மத்திய அரசு தன் பதில் மனுவில் கூறியிருந்தது.

இதைத்தொடர்ந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. கச்சத்தீவு விஷயத்தில் தமிழகத்தில் உள்ள பலரும் ஒரே கருத்தை கொண்டுள்ள நிலையில், திடீரென மத்திய அரசு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டமை குறித்து பலரும் கண்டனம் தெரிவித்தனர். கச்சத்தீவு விஷயத்தில் உள்ள வரலாற்று பின்னணி குறித்து சொல்லி, அதை மீட்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது.

இந்நிலையில், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தமானது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கடந்த 1974, 1976ம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும் துன்புறுத்தப்படுகிறார்கள். இதனால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கச்சத்தீவை மீட்டு மீண்டும் இந்தியாவுக்கே தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். சவுகான், பாப்டே பெஞ்ச் முன்பு நேற்று (08) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், மனுத்தாக்கல் செய்ய 8 வாரம் கால அவகாசம் கேட்டார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் கச்சத்தீவு தொடர்பாக 6 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டனர்.


http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97474/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.