Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சருக்கு அரசாங்கம் அழைப்பு விடுக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சருக்கு அரசாங்கம் அழைப்பு விடுக்குமா?


14 அக்டோபர் 2013



இலங்கையின் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் இரசாங்கத்தின் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வடமாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வடமாகாண சபையின் முதல் அமர்வு எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறுவதற்கு முன்னர் இது குறித்து அவருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக கொழும்பின் அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

ஒவ்வொரு வாரத்திலும் வியாழக்கிழமைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது வழமை. இந்தக் கூட்டங்களில் மாத இறுதி அமர்வில் மாத்திரமே மாகாண முதல்வர்கள் அழைக்கப்படுகின்றனர்.

மாகாண அபிவிருத்தித் திட்டப் பொறிமுறைகள், மாகாண விடயதானங்கள் குறித்தான சட்டமூலங்கள் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என்பதுடன் முதல்வர்களின் ஆலோசனைகளும் பெறப்படும்.

குறிப்பாக இலங்கையிலுள்ள ஒன்பது மாகாண சபைகளில் எட்டு மாகாண சபைகள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதனால் அரசாங்கம் முன்மொழியும் திட்டங்களை ஆதரிக்கும் நிலைப்பாட்டையே முதலமைச்சர்கள் எடுப்பது வழமையாகி வருகின்றது. எனினும், ஜனாதிபதி மஹிந்தராஸபக்சவின்; ஆட்சியில் இம்முறை எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும், குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சரொருவர் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உதயமாகியுள்ளது.

மாகாண சபை சம்பந்தமான பிரேரணைகள் அமைச்சரவையின் அனுமதிக்காக வரும்போது, அது மாகாண நிர்வாகத்துக்கு பாதகமாக இருந்தால் அதற்கு எதிராக முதல்வரால் கருத்து வெளியிடமுடியும். அத்துடன், தேவையான திருத்தங்களை மேற்கொள்ளு மாறும் அவரால் கோரிக்கை விடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97662/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.