Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் மாபெரும் அஞ்சலிக் கூட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடம்: Milliken District Park "B" பிரிவு (Mc Cowan/Steel)

காலம்: எதிர்வரும் ஆவணி திங்கள் 20ம் நாள் காலை 9.00 மணி

அன்பிற்கினிய கனடா வாழ் தமிழ் மக்களே!

எங்கள் தாய் தேசத்தில் இன்று அழிவுகளும், மரணங்களும் மலிந்து கிடக்கின்றன. போர் நிறுத்தம் போர் தொடக்கமாகி தமிழர் உயிர் குடிக்கிறது. தினமும் விடிகின்ற காலையெல்லாம் எங்கள் இல்லங்களில் மரணச் செய்தி சொல்லி செல்கின்றது. வானொலிகள்,தொலைகாட்சிகள் தினம் சோககீதமிசைக்கின்றது. பத்திரிகையின் பக்கங்கள் யாவும் சாவுச் செய்தியை காவிச் செல்கின்றன. இணையங்களின் இணைப்புக்கள் எல்லாம் இறந்தவர் நாமம் சொல்லியே எங்கள் கணனிக்கு வந்தடைகின்றன.

வாழ்வாதாரத்துக்கான போராட்டம், வலிமை பெற்று நிற்கும் வேளையிலும், சமாதானம் பேசி எம்மினத்தை மிலேச்சத்தனமாக கொல்ல நினைக்கிறது சிங்கள இனவாத அரசு. எங்களை விட எமது மண்னை நேசித்த அந்த மக்கள் மனிதத்தன்மையின்றி கொல்லப்படும் செய்திகேட்டு நாம் அதிர்ச்சியடைகின்றோம்.

சிங்கள அரசின், படுகொலைகளின் வழியே, கடந்த ஆவணித்திங்கள், 13 ம் நாள் வன்னியின் இதயமான முல்லைத்தீவில் புதுக்குடியிருப்புக்கும் உடையார் கட்டுக்குமிடையே உள்ள வல்லிபுனம் பகுதியில் இருந்த செஞ்சோலை சிறுவர் இல்லம் மீது சிங்கள பயங்கரவாத அரசின் கொடூரமான கொலை வெறித்தாக்குதலில் 65 க்கு மேற்ப்பட்ட பள்ளி மாணவர்கள் பலியான செய்தி கேட்டு வாயடைத்து பேச மொழியின்றி தவிக்கின்றோம். இக் கொடூர தாக்குதலில் 150 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். எங்கள் உறவுகளின் கண்ணீர் துடைக்க புகலிடத்திலிருந்து நாம் என்ன செய்யமுடியும்?

அன்புறவுகளே!

ஆவணி 13 அன்று நடாத்தப்பட்ட கொடூர தாக்குதலில் பலியான மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாகவும், மீளா துயரில் மிதக்கும் எங்கள் துயரில் பங்கு பற்றும் விதமாகவும், வன்னித்தமிழ் சமூக கலாச்சார அமையம் எதிர்வரும் 20 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு "அஞ்சலிக் கூட்டம்" ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளது. எனவே தாங்களும் இவ் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டு, சாவடைந்த மாணவரின் ஆத்ம சாந்திக்காக பிரார்திப்பதுடன், துயருற்றிருக்கும் மக்களின் துயரில் பங்குபற்றுவதுடன், இனிமேலும் சாவுகள் தொடராமல் இருக்க உறுதி எடுப்போம். வாருங்கள்..

குறிப்பு:

படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் குடும்பங்களுக்கு நேரடி உதவிகளை வழங்க விரும்புவோர் அமையத்துடன் தொடர்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு: யசோ:- (416) 831-7325

நிரோஜன்:- (416) 908-5023

மகேஸ்: (416) 625-3066

வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையம்-கனடா

VANNI TAMIL COMMUNITY AND CULTURAL CENTRE- CANADA

  • கருத்துக்கள உறவுகள்

ஆவணி 13ம் திகதி இல்லை 14ம் திகதியா நடந்தது? 14ம் திகதி (உள்ளூர்), இங்கு 13ம் திகதி எண்டு நினைச்சேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேஷ் நீங்கள் சொல்வது சரியே, கனடாவில் 13 ம் திகதி இரவு 9.00 மணிக்கே தாக்குதல் நடாத்தப்பட்டது. அதை வைத்து அவர்கள் 13 திகதி என்று சொல்லியிருக்கிறார்கள்.

சபேஷ் நீங்கள் சொல்வது சரியே' date=' கனடாவில் 13 ம் திகதி இரவு 9.00 மணிக்கே [b']தாக்குதல்

தாக்குதல் :?: :?: :?:±ýÉ ¾¡ì̾ø ±ôÀ,±í¸ :shock: :shock:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஈழவன் சின்ன பிள்ளைதனமாக இருக்கிறது கேள்வி, தலைப்புடன் சம்பந்தப்பட்ட செஞ்சோலை வளாகம் மீதான தாக்குதல், தாயகத்தில் 14ம் திகதி காலை 7 மணிக்கும் கனடாவில் 13ம் திகதி இரவு 9மணிக்கு நடைபெற்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.