Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா தொடர்பாக இந்திய மத்திய அரசின் 'சாதுவான, கோழைத்தனமான' கண்டனம் - ஜெயலலிதா அதிருப்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா தொடர்பாக இந்திய மத்திய அரசின் 'சாதுவான, கோழைத்தனமான' கண்டனம் - ஜெயலலிதா அதிருப்தி
[ புதன்கிழமை, 16 ஒக்ரோபர் 2013, 07:43 GMT ] [ அ.எழிலரசன் ]


சிறிலங்கா கடற்படையால் தொடர்ந்தும் இந்திய மீனவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கமானது 'சாதுவான, கோழைத்தனமான' கண்டனத்தை வெளியிடுவதானது தொடர்ந்தும் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்வதற்கு சிறிலங்கா கடற்படையினருக்கு ஊக்கத்தை வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா செவ்வாயன்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முதலமைச்சர் ஜெயலலிதா தனது அதிருப்தியை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

"எமது மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினரால் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கமானது மிகவும் சாதுவான, கோழைத்தனமான அறிக்கையை வெளியிடுவதானது சிறிலங்காக் கடற்படையினர் தொடர்ந்தும் எமது மீனவர்கள் மீது மிகத் தீவிரமான தாக்குதல்களை மேற்கொள்வதற்கு உந்துதல் அளிக்கிறது" என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி வைத்த கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இராமேஸ்வரத்திலிருந்து ஐந்து படகுகளில் புறப்பட்ட 22 இந்திய மீனவர்களை திங்களன்று சிறிலங்கா கடற்படையினர் வழிமறித்து கைதுசெய்ததாகவும், இவர்கள் மேலதிக விசாரணைக்காக தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இக்கடிதத்தில் ஜெயலிலதா குறிப்பிட்டுள்ளார். திங்களன்று பிறிதொரு சம்பவத்தில் நான்கு படகுகளில் சென்ற 15 மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினர் வழிமறிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்பாக பிரதமருக்கு அனுப்பப்படும் தனது கடிதங்கள் எவற்றுக்கும் உண்மையான பதில் வழங்கப்படுவதில்லை எனவும் தமிழ்நாட்டு முதலமைச்சர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஆத்திரமூட்டும் சிறிலங்கா கடற்படையினரின் நடவடிக்கைக்கு இந்திய மத்திய அரசாங்கமானது மிகவும் தீவிரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்காது இரு நாடுகளின் மீனவ சமூகங்களால் சமரசம் செய்யப்பட்டு தீர்க்கப்பட வேண்டிய விவகாரமாக இது இருப்பதாக சாதரணமாகக் கூறுவதாகவும் ஜெயலிலதா குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத் மீனவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக இந்தியா, பாகிஸ்தானின் பிரதி உயர் ஆணையாளரிடம் தனது எதிர்ப்பை வெளியிட்ட அதேவேளையில், இந்திய மத்திய அரசாங்கமானது தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் பாராமுகமாக நடந்துகொள்வதாகவும் முதலமைச்சர் ஜெயலிலதா மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.


http://www.puthinappalakai.com/view.php?20131016109262

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.