Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னாசியாவில் பட்டினி - இந்தியாவுடன் ஒப்பிடும் போது சிறிலங்கா சிறந்த இடத்தில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாசியாவில் பட்டினி - இந்தியாவுடன் ஒப்பிடும் போது சிறிலங்கா சிறந்த இடத்தில்
[ புதன்கிழமை, 16 ஒக்ரோபர் 2013, 08:29 GMT ] [ நித்தியபாரதி ]


தென்னாசியப் பிராந்தியத்தில் சிறிலங்காவில் மிகக் குறைந்தவர்களே பட்டினியில் வாழ்வதாக நேற்றைய தினம் வெளியிடப்பட்ட பூகோள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக உணவுக் கோட்பாடு ஆய்வு நிறுவனத்தால் the International Food Policy Research Institute - IFPRI வெளியிடப்பட்ட பட்டினி நாடுகள் தொடர்பான சுட்டியில் 2013ல் சிறிலங்காவானது 43வது இடத்தில் உள்ளதாகவும் தென்னாசியாவில் உள்ள இதன் ஏனைய அயல்நாடுகளுடன் ஒப்பிடும்போது சிறிலங்காவானது சிறந்த இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அபிவிருத்தி அடைந்து வரும் 120 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் இந்த நாடுகளின் பட்டினி மட்டங்கள் மற்றும் வெப்பநிலைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. போசக்கற்றவர்களின் எண்ணிக்கை, ஐந்து வயதிற்குட்பட்ட சிறார்களில் நிறை குறைந்த பிள்ளைகளின் எண்ணிக்கை, ஐந்து வயதிற்குட்பட்ட சிறார்களின் இறப்பு வீதம் போன்றனவும் இச்சுட்டியில் கவனத்திற் கொள்ளப்பட்டது.

இந்த மூன்று விடயங்களிலும் சிறிலங்காவானது இவ்வாண்டில் 15.6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 1990ல் 22.3 புள்ளிகளை சிறிலங்கா பெற்றிருந்தது. 1990ல் வெளியிடப்பட்ட பூகோள பட்டினி சுட்டியுடன் ஒப்பிடும் போது 2013ல் உலக நாடுகளின் சராசரி பட்டினி மட்டமானது 34 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. தென்னாசியாவில் 1990ல் 31.5 சதவீதமாகவும் 2013ல் 20.7 சதவீதமாகவும் பட்டினி மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது.

சிறிலங்காவில் 2010-2012 வரையான காலப்பகுதியில் 24 சதவீத மக்கள் போசாக்குக் குறைவடைந்தவர்களாக இருந்துள்ளனர். இக்காலப்பகுதியில் ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளில் 21.6 சதவீதத்தினர் குறை நிறையுள்ளவர்களாவர். 2011ல் சிறிலங்காவில் ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளில் 1.2 சதவீதத்தினர் இறந்துள்ளனர் அயல்நாடான இந்தியாவுடன் ஒப்பிடும் போது சிறிலங்கா சிறந்த இடத்தில் உள்ளது. இந்தியா 21.3 புள்ளிகளைப் பெற்று 67வது இடத்தில் உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதே.

இந்தியாவின் ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளில் 40 சதவீதத்தினர் நிறைகுறைந்தவர்களாகவும், 6.1 சதவீத பிள்ளைகள் ஐந்து வயதிற்குள் இறக்கின்ற நிலையும் காணப்படுவதாக பூகோள பட்டினிச் சுட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சுட்டியின் படி, பாகிஸ்தான் 19.3 புள்ளிகளையும், 19.4 புள்ளிகளையும் பெற்று முறையே 57 மற்றும் 58 வது இடங்களிலும் நேபாளம் 17.3 புள்ளிகளைப் பெற்று 49வது இடத்திலும் உள்ளன.

இந்தச் சுட்டியின் பிரகாரம், ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 120 நாடுகளில் 19 நாடுகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளன. அதாவது இந்த நாடுகள் 'ஆபத்தான' 'மிகவும் ஆபத்தான' நாடுகளின் பட்டியலில் உள்ளன. பூகோள பட்டினி சுட்டியின் படி, தென்னாசியாவானது அதிகூடிய பட்டினியாளர்களைக் கொண்ட பிராந்தியமாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


http://www.puthinappalakai.com/view.php?20131016109263

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.