Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிர்ச்சி வைத்தியம் - The Shock Doctrine

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

naomi-klein-doktrina-soka-the-shock-doct

 

சில வருடங்களிற்கு முன் எனது ஆசரியர் ஒருவர் இந்த புத்தகத்தை படித்து பார் பின்னர் உலகில் நடக்கும் பல சம்பவங்களை நீ வேறொரு கண்ணால் பார்ப்பாய் என்றார்.

 

இதையே இந்த புத்தகத்தை படிக்காதவர்களிற்கும் நான் கூற விரும்புகின்றேன். 

 

இந்த புத்தகம் தமிழில் வெளிவரவில்லை. யாராவது இதை மொழிபெயர்க்க வேண்டும். 

 

பூமியில் நடைபெறுகின்ற இயற்கையான/செயற்கையான அழிவுகள் அனைத்துமே யதார்த்தமாக நடந்துவிடுவதில்லை. இயற்கை அழிவுகளை எதிர்பார்த்து ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கின்றது. அதனை வைத்து பணம் சம்பாதிப்பதற்கு. இந்த பணத்தாசை பல மக்களின் உயிரை பலி கொடுக்கவும் தயங்காது. இந்த கூட்டம் உலகத்தின் அதிகார நாற்காலியில் தொங்கிக்கொண்டிருக்கின்றது.

 

ஈராக் போரின் காலத்தில் அமெரிக்க ராணுவத்திற்கு ஆயுதம் விற்ற நிறுவனம், உணவு பொருட்கள், விநியோகிஸ்த நிறுவன,ம் காப்புறுதி நிறுவனம் என்று அனைத்துமே அமெரிக்க அரசாங்கத்தின் அதிகார பொறுப்பில் உள்ளவர்களின் பங்கு நிறுவனங்கள். எண்ணை மட்டுமே காரணம் என்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி அதற்கு பின்னால் இப்படி கொள்ளை நடப்பதை நம் கவனத்திலிருந்து எடுத்துவிட்டார்கள். 

 

அமெரிக்காவில் நடைபெற்ற இயற்கை அழிவுகளில் கொள்ளை லாபம் அடித்தவர்களும் ஆட்சியிலிருந்தவர்களே. புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளிற்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து புதிய பொருட்களை கொள்வனவு செய்ய வைத்தவர்கள் அந்த நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த அதிகார வர்க்கமே. 

 

இப்படி பல நூற்றுக்கணக்கான கண்ணிற்கு தெரியாத விடயங்களை வெளிக்கொண்டுவந்தள்ளது இந்த நூல். 

 

இதில் முக்கியமான ஒன்று இலங்கையில் நடந்த சுனாமி அனர்த்தம் பற்றியது. 

 

அது இயற்கையாகவே நடந்ததென்றாலும் இப்படியொன்றை எதிர்பார்த்து காத்திருந்தது ஒரு ஓநாய் கூட்டம். 

 

கடற்கரையோரங்களில் சுற்றுலா விடுதி அமைப்பதற்கு திட்டங்கள் ஆயத்தமாகவே இருந்தன.ஆனால் அதில் உள்ள சிக்கல் மீனவர்கள். இந்த திட்டம் மேற்குலகத்தால் இந்தோனிசியா, சிறிலங்கா போன்ற நாடுகளில் நிறைவேற்ற திட்டமிடப்ட்டது. அதற்கான சரியான நேரத்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள். சொன்னது போல் சுனாமி வந்தது. 

கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் தூசி தட்டி எடுக்கப்பட்டன. 

மக்களின் பாதுகாப்பு கருதி மீனவர்கள் தங்களின் வாழ்விடங்களை கடற்கரையிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் தான் அமைக்க வேண்டும் என்ற சட்டம் வந்தது. இலங்கையில் இதனை Puffer Zone என்று அழைத்தார்கள். 

இதன் மூலம் இந்த மீனவர்கள் பிரச்சனை தீர்க்கப்பட்டது. வருகின்ற சுனாமிக்கு இந்த 100 மீற்றர் என்பது ஒரு பொருட்டே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

 

எம்மை சுற்றி நடக்கும் துரோகத்தை அறிய துடிப்பவர்கள் இந்த புத்தகத்தை ஒரு புரட்டு புரட்டுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் செங்கொடி.. போரினால் வெளியேற்றப்பட்ட சம்பூர் மக்கள் இப்போது அங்கு நடக்கும் "அபிவிருத்திகளை" இடம்பெயர்ந்த சூழ்நிலையில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு நல்ல உதாரணம் "kalpitiya" என்ற இடம். இது தமிழ் ஊரா என தெரியவில்லை.

 

இங்கு இருந்தவர்களை அரசாங்கமே கலைக்கின்றது. பல சுற்றுலா நிறுவனங்களிற்கு பகுதி பகுதியாக அங்கிருக்கும் இடங்களை குத்தகைக்கு விடுகின்றது. இதில் சுவிசில் இயங்கும் ஒரு சிங்களவரால் நிர்வகிக்கப்படுகின்ற சுற்றுலாநிறுவனமும் ஒன்று சம்மந்தப்பட்டுள்ளது. 

 

http://www.sundaytimes.lk/130728/business-times/kalpitiya-land-grab-for-tourism-54035.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2004 சுனாமி ஒரு இயற்கை அழிவு அல்ல….

2004 டிசம்பர் 26ல் இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தல் 30 அடி உயரத்திற்கு பெரிய சுனாமி அலைகள் தோன்றின…. 
இதில் 14 நாடுகளில் வாழ்ந்த 230,000 மக்கள் உயிரிழந்தனர்…

இது நிலநடுக்கத்தால் ஏற்பட்டது அல்ல என்றும்… சில வளர்ந்த நாடுகள் இனைந்து கடலுக்கு அடியில் ரகசியமாக நடத்திய அணு ஆயுத சோதனையின் விளைவே என்று சில புவியிளார்கள் அடித்து கூறுகிறார்கள்…

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அதில் இந்தியாவுக்கும் தொடர்பு உண்டாம்….
நம்பவும் முடியல… நம்பாம இருக்கவும் முடியல….
ஏன்னா அதிகம் செத்தது தமிழந்தானே…..

https://www.facebook.com/photo.php?fbid=536828253058179&set=a.535167219890949.1073741828.524097414331263&type=1&theater

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.