Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க கப்பலின் பொறியாளர் தற்கொலை முயற்சி! - கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
capitan-201013-150.jpg

அமெரிக்க கப்பலில் பராமரிப்புப் பணியைக் கவனிப்பதற்காக இருந்த தலைமைப் பொறியாளர் நேற்று திடீரென தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அவரையும், கப்பல் கேப்டனையும் க்யூ பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்திய கடல் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக இந்தக் கப்பலில் இருந்த மாலுமிகள், பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட 35 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். கப்பல் பராமரிப்புப் பணிக்காக தலைமைப் பொறியாளர் ஷிடரன்கோ வேளரி என்பவரும், கப்பலின் கப்டன் டட்னிக் வாலன்டைனும் கப்பலிலேயே இருந்தனர்.

  

பராமரிப்புப் பணிக்கு கப்பல் நிறுவனம் மாற்று ஏற்பாடு செய்ததும் இவர்களும் கைது செய்யப்படுவார்கள் என க்யூ பிரிவு போலீஸார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தலைமைப் பொறியாளர் ஷிடரன்கோ வேளரி சனிக்கிழமை பிற்பகலில் கப்பலில் உள்ள ஒரு பகுதியில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயன்றாராம். கப்பலில் காவலில் இருந்த போலீஸார் அவரைத் தடுத்து மீட்டனர். பின்னர், அவரையும், கப்பல் கப்டனையும் க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

தலைமைப் பொறியாளர் தற்கொலைக்கு முயன்றதால் அவருக்கு துறைமுக மருத்துவனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் உறுதியளித்த பின்னர், இருவரையும் முத்தையாபுரம் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். பின்னர், மாலை 6.30 மணியளவில் தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் அகிலாதேவி வீட்டில் அவர் முன் ஆஜர்படுத்தினர். தற்கொலைக்கு முயன்ற தலைமைப் பொறியாளரை அரசு மருத்துவமனையில் பரிசோதித்த பிறகு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர், பொறியாளரும், கப்பல் கப்டனும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதற்கிடையே தூத்துக்குடி அருகே ஆயுதங்களுடன் பிடிபட்ட அமெரிக்க கப்பலுக்கு டீசல் விற்பனை செய்ததாக 6 பேரை பிடித்து க்யூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பல், மீனவர்களிடம் திருட்டுத்தனமாக 1500 லிட்டர் டீசல் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.இந்நிலையில், டீசல் விற்றது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு ராஜா தெருவைச் சேர்ந்த மரிய அன்டன் விஜய், அவரது உதவியாளர் முருகேசன், விசைப்படகு ஓட்டுநர் திரேஸ்புரத்தைச் சேர்ந்த செல்லம், சென்னையைச் சேர்ந்த முகவர் தேவன், உள்ளூரில் டீசல் வாங்கிய ரஞ்சித்குமார், விஜய் ஆகிய 6 பேரையும் க்யூ பிரிவு போலீஸார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வேறு யாருக்காவது தொடர்பிருக்கிறதா என்பது ஓரிரு நாளில் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=95353&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=YyhzPjBOtS0

 

பொறியியலாளர் இறந்திருந்தால்.... கப்பல் பிரச்சினை, வேறு திசையில் சென்றிருக்கும்.
33 வெள்ளைக்காரருக்கும்... பாளையங் கோட்டை சிறையில், களி தின்ன வேண்டும் என்று விதி இருந்திருந்தால்.... அதனை மாற்ற முடியாது.

 

கப்பல், சீமானுக்கு சொந்தமான கப்பல், போலையும்... இருக்குது. :D  :lol:

 

அமெரிக்க தூதுவர் என்ன பண்ணுறார்? :icon_idea:

கப்பல் கம்பனி உதவி கோரும் வரை அவரால் ஒன்றும் செய்ய முடியாது. அதன் பின்னர் பிரத்தியேக பயங்கரவாதம் என்றில்லாமல் சாதாரண வழக்கொன்றாக மாற்ற உதவலாம். இது இரண்டு நாடுகளுக்குமிடையில் சில சிக்களை வரப் பண்ணப் போகிறது. இத்தாலிய மாலுமிகள் மாதிரி 35 பேர் இலகுவில் டிமிக்கி விட்டுவிட்டு ஓடுவது கஸ்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் கம்பனி உதவி கோரும் வரை அவரால் ஒன்றும் செய்ய முடியாது. அதன் பின்னர் பிரத்தியேக பயங்கரவாதம் என்றில்லாமல் சாதாரண வழக்கொன்றாக மாற்ற உதவலாம். இது இரண்டு நாடுகளுக்குமிடையில் சில சிக்களை வரப் பண்ணப் போகிறது. இத்தாலிய மாலுமிகள் மாதிரி 35 பேர் இலகுவில் டிமிக்கி விட்டுவிட்டு ஓடுவது கஸ்டம்.

 

இத்தாலிய மாலுமியினர் ஓடியது தான்... பெரிய தமாஸ்.

இத்தாலியில்... தேர்தல் நடந்த நேரத்தில், அவர்கள் கைது செய்யப் பட்டதால், தாங்கள் இத்தாலிக்குச் சென்று வாக்களித்து விட்டு, திரும்பி வருகின்றோம் என்று கூறியதை.... இந்திய அரசு நம்பி, வழியனுப்பி வைத்தது. இத்தாலிக்குகு... போனவன் போனவன் தான். அவங்கள் இந்தியா பக்கம், தலை வைச்சும் படுக்க மாட்டம் என்றிட்டாங்கள். :D

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.