Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

54 நாடுகளில் 21 நாட்டுத் தலைவர்களே இலங்கை சென்றனர்: ஒருவருக்கு தலா 70 கோடி செலவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

54 நாடுகளில் 21 நாட்டுத் தலைவர்களே இலங்கை சென்றனர்: ஒருவருக்கு தலா 70 கோடி செலவு:-

 

விரைவில் வரியில் திணறுவர் மக்கள் - திஸ்ஸ அத்தநாயக்க

thissa-attanayaka_CI.jpg

 

பொதுநலவாய மாநாட்டு கொழும்பு பிரகடனம் மூலம் மனித உரிமை தொடர்பான சர்வதேச நீதிமன்றுக்கு இலங்கையை அழைத்துச் செல்லும் திட்டத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இணங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ரோம் பிரகடனத்தில் ரணில் விக்ரமசிங்க கைச்சாத்திட மறுத்ததன் காரணமாக இலங்கையை சர்வதேச யுத்த குற்ற நீதிமன்றுக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை காணப்படுகின்ற போதும் மஹிந்த ராஜபக்ஷ அரசு அதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளதாக ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (18.11.13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது,

´கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை இலங்கை செயற்படுத்தினால் சர்வதேசத்தில் இருந்து இவ்வாறு அழுத்தம் வராது. ஐக்கிய நாடுகள் சபை இதனை அடிக்கடி கூறி வருகிறது.

சார்ள்ஸ் இளவரசருடன் நின்று படம் ஒன்றை எடுத்துக் கொள்ளவென இலங்கை அரசாங்கம் 10-14 பில்லியன் நிதி செலவிட்டு சாதனை படைத்துள்ளது. மாநாட்டிற்கு செலவிடப்பட்ட பணம் எவ்வளவு என அரசாங்கம் இன்னும் கூறவில்லை.

பஸ், கார் உள்ளிட்ட வாகன போக்குவரத்திற்கு மாத்திரம் 4300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. வந்தவர்களை உபசரிக்க 3000 மில்லியன், அவர்களுக்கு அழைப்பு விடுக்க 500 மில்லியன், ஊடகவியலாளர் ஒருவருக்கு 100,000 என பணம் செலவிடப்பட்டுள்ளது.

மாநாடு ஆரம்ப நிகழ்விற்கு 400 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. பொதுவாக நோக்கின் 10-14 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இதற்கான பணத்தை ´சோகம்´ வரி என்ற பெயரில் அறவிட்டுக் கொள்வர்.

54 நாடுகளில் 21 நாட்டுத் தலைவர்களே வந்திருந்தனர். இதில் ஒரு தலைவருக்கு 70 கோடியை அரசாங்கம் செலவிட்டுள்ளது. இத்தொகை பிழை என்றால் சரியான தொகையை கூறவும்.

அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள உயர்வு வழங்காத, விவசாய ஓய்வூதியம் வழங்காத, வைத்தியசாலைகளுக்கு மருந்து வழங்காத அரசாங்கம் மாநாட்டிற்கு கோடிக்கணக்கில் பணம் செலவிட்டது எவ்வாறு?

சனல் 4 ஊடகவியலாளர்கள் சிறிகொத்தவிற்கு வந்ததாகக் குற்றம் சுமத்தப்படுகிறது. அரசாங்கம் அவர்களுக்கு விசா வழங்கி நாட்டுக்கு அழைத்ததுதான் குற்றம்.

இதேவேளை, இன்று (18) கூடவிருந்த ஐதேக தலைமைத்துவ சபை கரு ஜயசூரியவிற்கு ஏற்பட்டுள்ள சுகயீனம் காரணமாக எதிர்வரும் 27ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99157/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

18-1379496311-swaziland-king-lobamba3-60

 

சுவாசிலாந்து மன்னரும்... மாநாட்டுக்கு வரவில்லைப் போலுள்ளது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.