Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடந்ததை நடக்காததுபோல் பிரமையில் வாழும் மக்கள்: கிழக்கு வாழ் மக்களும் கிறீஸ் மர்ம மனிதனும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிறீஸ் மனிதனை நாம் மறந்திருக்க முடியாது. இரண்டு வருடங்களுக்கு முன்னதாக  ஒரு சில மாதங்கள் இந்த நாட்டிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்களையெல்லாம் அலைக்கழித்த பயங்கரம்.

பெருந்தோட்டப்பகுதியில்தான் இது ஆரம்பித்தது. இரத்தினபுரி மாவட்டத்தில் பெண்கள் பொதுவிடங்களில் தனியே போக முடியாத அளவுக்கு அவர்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன எனச் செய்திகள் எங்களை வந்தடைந்து கொண்டிருந்த வேளையில் திடீரென யாரோ ஒரு மர்ம மனிதன் பெண்கள் இருக்கும் வீடுகளில் புகுந்து அவர்களைப் பிராண்டி விட்டு ஓடுகின்றான் என்கின்ற செய்திகள் கிளம்பத் தொடங்கின. முதலில் ஒன்றுமாக விளங்கவில்லை. ஆனால், நாம் சிந்தித்து செயலாற்ற நேரம் கொடுக்காமல் இந்த மர்ம மனிதனின் வெளிப்பாடு கடகடவென மலையகத்தில் அனேக பிரதேசங்களில் பரவி கிழக்கிலும் வெளிப்பட்டது. இது ஏதோ பகிடி இதோ நிறுத்தப்படப் போகின்றது என நாம் எண்ணிக்கொண்டிருந்த வேளை, அது கிழக்கில் முஸ்லிம் கிராமங்களில் இருந்து தமிழ் கிராமங்களுக்குப் பரவியது. என்ன அல்லோலகல்லோலம். அப்போதுதான், கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தாமதமாக, இது உண்மையாகவே ஒரு பிரச்சினைதான் என எம்மில் பலர் விழித்துக்கொண்டோம்.

இரவு பகலாக தூக்கமின்றி கிராமத்தவர்கள் காவல் நின்றார்கள். அவர்களுடைய தொழில் உழைப்பெல்லாம் பறந்தது.  பெண்கள் தமது வெளிச் சமையலறைகளில் சமைக்க முடியாமல், மலகூடத்துக்குக்கூட தனியே போக வழியின்றித் தவித்தார்கள். நகர்ப்புற வீடுகளுக்கு கிறீஸ் மனிதன் வந்தானில்லை. அவனுடைய பிரவேசம் ஆங்காங்கே பரவிக் கிடக்கும் கிராமங்களில்தான் நிகழ்ந்தது. அனேகமான தாக்குதல்கள் இரவு வேளைகளில் பெண்கள் வெளியிலுள்ள மலகூடத்துக்குச் செல்லும்போதுதான் ஏற்படுகின்றதெனக் கண்டு குடிசைக்குள்ளே சுவரோரமாக ஓட்டை விட்டு அந்தப் பள்ளத்தக்குள்ளே அவர்கள் சிறுநீர் கழிக்க ஏற்பாடு செய்திருந்த இடங்களையும் நான் கண்டேன். துள்ளிப் பாய்ந்து ஓடக்கூடிய ஸ்பிறிங் போட்ட சப்பாத்துக்களையும் கைவிரல்களில் டிரக்யூலா போன்ற நீண்ட கூரான இரும்பு நகங்களையும் மர்ம மனிதர்கள் அணிந்திருந்ததாகப் பெண்கள் தெரிவித்தார்கள்.  கிறீஸ் மனிதனால் தாக்கப்பட்ட பெண்களோ அதிhச்சியில் பிரமை பிடித்தவர்களாகத் தோற்றமளித்தார்கள். அவர்களில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப் பட்டவர்களும் உள்ளனர். அவர்களுக்கு டிக்கட் வெட்டும்போது என்ன காரணத்தை எழுதுவது என வைத்தியர்கள் குழம்பினர். பயத்தில் உண்மையான காரணங்களைக் கூறாது பொய் நோய்களை எழுதிய வைத்தியரும் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலங்களை எடுக்கத் தயங்கிய சட்டதரணிகளும் உள்ளனர். கிழக்கு முழுவதும் பரவி இது மெல்ல வடக்கிலும் தலை காட்டியது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு  கிளிநொச்சியென அங்கொன்றும் இங்கொன்றுமாக சம்பவங்கள் இடம் பெற்றன.

மலையகம், கிழக்கு, வடக்கு என நடந்த இச்சம்பவங்களில் பல பொதுத் தன்மைகள் காணப்பட்டன. எல்லாமே தமிழ் பேசும் பிரதேசங்களில் நடந்தது ஒன்று. ஒவ்வொரு சம்பவத்திலும் தாக்கப்பட்டவர்கள் பெண்களாக இருந்தது அடுத்தது. ஏதாவதொரு காவல் நிலையம், அல்லது இராணுவ முகாம், அல்லது விசேட அதிரடிப் படை முகாம் என இவ்வாறான நிலைகளுக்கு அருகாமையில் இரந்த கிராமங்களில்தான் தாக்குதல் நடந்தது மூன்றாவது. மக்களால் கண்டு பிடிக்கப்பட்டுத் துரத்தப்பட்ட மர்ம மனிதர்களெல்லாருமே அந்தந்த படையினரின் முகாமுக்குள் தஞ்சம் புகுந்தது காணப்பட்டது நான்காவது. கிறீஸ் மனிதன் தோன்று முன்னரேயே, குறிப்பிட்ட பிரதேச காவல் படையினர் மக்கள் குடியிருப்புக்களுக்குச் சென்று 'கிறீஸ் மனிதனைப் பிடித்தால் நீங்கள் அடித்து ஒன்றும் செய்யாதீர்கள், கவனமாக எங்களிடம் பாரம் கொடுங்கள்' என ஆலோசனை வழங்கியது ஐந்தாவது. அப்படிப் பாரம் கொடுக்கப்பட்டவர்கள் உடனடியாகவே விடுவிக்கப்பட்டு மக்களின் ஆத்திரத்தினைக் கிளப்பி விட்டது ஆறாவது.  எங்கு சம்பவம் நடந்தாலும் 'இதெல்லாம் மக்களின் கற்பனை, அவர்களுக்கு இல்லாததை உண்டென்று சொல்லும் மனநோய் பீடித்திருக்கின்றது (hallucination) என பாதுகாப்பு செயலர் கோத்தாபய இராஜபக்ஸ கூறியது அடுத்தது. இனி சொல்ல வேண்டுமா இதன் சூத்திரதாரிகள் யாரென்று? இதனைக் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ் முஸ்லிம் உறுப்பினர்களைக் கூட்ட முயற்சித்தோம். 'இதெல்லாம் பொய்க்கதை' என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இக்கூட்டத்துக்கு வரவே மறுத்து விட்டார்கள். ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களே வந்தார்கள். கிறீஸ் மனிதனால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று பார்வையிட்டு அதனைப் பற்றிய அறிக்கையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பியுங்கள் என்று வினயமாகக் கேட்டுக் கொண்டோம். 'ஐயோ இதெல்லாம் அரசாங்கத்தின் வேலை. நாங்கள் என்ன சொல்லியும் ஒரு பயனுமில்லை ' எனக் கையை விரித்து விட்டு அவர்கள் சென்று விட்டார்கள்.

யாழ்ப்பாணத்தில் நாவாந்துறைக் கிராமத்திற்கு வந்த கிறீஸ் மனிதனைக் கிராமத்தவர்கள் பிடித்து நையப் புடைத்திருக்கின்றார்கள். அந்தக் 'குற்றத்துக்காக' அவர்களைக் கைது செய்ததும் போதாதென்று அடுத்த நாள் இரவு இராணுவம் கிராமத்திலுள்ள வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள ஆண்களையெல்லாம் தாக்கியிருக்கின்றது. இந்த வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என நினைக்கின்றேன். இந்த சம்பவம் ஊடகங்களில் பிரபலமாக வெளியிடப்பட்ட பின்புதான் கிறீஸ் மனிதன் தனது நடவடிக்கையை நிறுத்திக்கொண்டான். இதனை யாரும் கவனித்திருப்பார்களோ தெரியவில்லை.

இப்படியான சம்பவங்கள் உலகில் எங்கும் நடந்திருக்க முடியாது. பகிரங்கமாக அரசாங்கம்தான் இதனைச் செய்கின்றது என்று சகலருக்கும் தெரிநதிருந்தது. அப்படியிருந்தும் அதே அரசாங்கம் ஒரு முழு மக்களை முட்டாள் பட்டம் கட்டிவிட்டு சுகமாக இருப்பதை நாமெல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தோம். ஏன் என்கின்ற கேள்வியைத் திருப்பித் திருப்பிக் கேட்டு நாமெல்லோரும் பைத்தியமானோம். யுத்தம் முடிந்து விட்டது, விடுதலைப் புலிகளின் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டது, இனி என்ன? ஏன் பெண்களை மட்டும்? என் தனியே பிராண்டி விட்டு ஓடவேண்டும்? எதற்காக? தமிழ் பேசும் மக்களைப் பயத்தில் ஆழ்த்தி அடக்க முயற்சிக்கிறார்கள் என்று நாமே காரணம் கற்பித்துக்கொண்டோம்.

இவ்வளவும் நடந்து முடிந்து கிழக்கு மாகாணத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸ் ஆளுங்கட்சியுடன் ஒட்டுச் சேர்ந்தது மட்டுமல்லாது, ஆளுங்கட்சியும் அமோக வெற்றி பெற்றது. கிழக்கு மாகாணத்தவர்கள் வாக்களித்ததைப் பார்த்தால் ஏதோ கிறீஸ் மனிதன் போன்ற பயங்கரங்களைத் தம்மீது இந்த அரசாங்கம் ஏவியதை அவர்கள் வரவேற்றாற்போல் இருந்தது. கிறீஸ் மனிதன் பிரச்சினை நடக்கும்பொழுது இல்லாததை இருப்பதாகச் சொல்லுகிறார்கள் (hயடடரஉiயெவiபெ) என்று அரசாங்கம் கூறியதிலும் தவறில்லை போலும். மக்கள் அதையே நிரூபித்தார்கள். கிறீஸ் மனிதன் நடக்காதது போல நடந்து கொண்டார்கள்.  இன்று நிந்தாவூர் கல்முனை கிராமங்களில் திரும்ப இப்பிரச்சினை போன்றதொரு பிரச்சினை தலைதூக்கியிருக்கின்றது. விசேட அதிரடிப் படையினர் இதில் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறார்கள். சென்ற தேர்தல்களில் வாக்களித்த முறையின்; பயனாகவே இது நடக்கின்றது என்பதை நாம் மிகத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மக்களுக்கு தாம் என்ன கொடுமை இழைத்தாலும் திருப்பித் திருப்பி தமக்கே வாக்களிப்பார்கள் என்றால் அரசாங்கம் இப்படியே தொடாந்து செய்வதற்கு என்ன குறை? சும்மா, பாதைகள் அமைப்பதும், வேலை வாய்ப்புக்கள் பெறுவதும், சலுகைகள் பெற்றுக்கொள்வதுமல்ல வாழ்க்கை. சுய கௌரவத்துடன் நாம் வாழவேண்டும். சிந்தியுங்கள் மக்களே.     

அடி என்னடி உலகம், இதில் எத்தனை கலகம்

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99400/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.