Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் நேரடி உத்தரவாதத்தையே அரசாங்கம் இனிமேல் செவிமடுக்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதானச் செயற்பாடுகளில் பிரபாகரனால் முன்வைக்கப்படும் நேரடி உத்தரவாதத்தினையே முதன்மையாகக் கருதப்போவதாகவும் புலிகளின் ஏனைய தலைவர்களின் உத்தரவாதங்களைப் பெரிதுபடுத்தப்போவதில்லை என்றும் அமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் சபையில் தெரிவித்தார்.

இஸ்ரேலில் படையினர் இருவர் கடத்தப்பட்டதற்காக லெபனானில் போர் வெடித்தது. ஆனால் இலங்கையில் படையினர் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படுகின்றனர்.

இருப்பினும் நாம் பொறுமையாகவே இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு நிலைவரம் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது:

சிறார்களைப் படையில் இணைத்து ஆயுதப்பயிற்சியை வழங்குவதை மறைக்கவே புலிகள் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றனர். படையில் சிறார்களை சேர்த்து சித்திரவதை செய்யும் புலிகள் இப்பொழுது சிறார்களுக்காக கண்ணீர் வடிக்கின்றனர்.

இந்திய இலங்கை நட்புறவை குலைக்க புலிகள் திட்டமிட்டுச் செயற்படுகின்றனர். புலிகளினாலேயே மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக இந்தியா செல்கின்றனர். பாரிய மனித நெருக்கடி புலிகளால் ஏற்பட்டது என்று தமிழ்க் கூட்டமைப்பினர் அறிந்துகொள்ள வேண்டும்.

தொடர்ந்தும் நாம் அனைத்து இனமக்களுக்கும் உதவ தயாராக இருக்கிறோம். அரசாங்கம் வலிந்து தாக்குதல்களை ஆரம்பிக்கவில்லை. மாவிலாற்றுப் பிரச்சினையே அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு காரணமாகியது.

திருகோணமலையை தாக்குவதற்கு மூதூரை புலிகள் பயன்படுத்த விரும்பியதன் காரணமாகவே அங்கு புலிகள் தாக்குதல்களைத் தொடர்ந்தனர்.

தமிழ்க் கூட்டமைப்பினர் முஸ்லிம் மக்களைப்பற்றி எதுவும் பேசாமல் இருக்கின்றனர். அவர்கள் சமர்ப்பித்த சபை ஒத்திவைப்பு பிரேரணையில் இது பற்றி எதுவும் கூறவில்லை.

புலிகளே கொன்றனர்

17 தொண்டு நிறுவன ஊழியர்களைப் புலிகள் கொன்றுள்ளனர். இது குறித்து நடுநிலையான விசாரணைகளை அரசாங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அரசசார்பற்ற நிறுவனங்களின் பணிகளை நாம் பாராட்டுகின்றோம்.

எனினும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் இலங்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்த முனைகின்றன. இது குறித்து நாம் அவதானமாக இருகின்றோம்.

தமிழகத்திற்கு அகதிகளாகிச் சென்றுள்ள மக்களைப் பாதுகாத்து உதவிகள் வழங்கப்படுவது குறித்து நாம் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

கேதீஸ் லோகநாதன் போன்ற சமாதான விரும்பிகள் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர். எனினும் அமைதி வழியில் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள அரசாங்கம் முயல்கின்றது.

மாவிலாறு, மண்டைதீவு போன்ற பிரதேசங்களில் புலிகளின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல்களையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அடையாளம் காணப்பட்ட இலக்குகளின் மீதே படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமாதானத்திட்டத்தை

ஆராய்வதற்கு தயார் விடுதலைப்புலிகளினால் முன்வைக்கப்படும் எந்தவொரு சமாதானத் திட்டத்தையும் ஆராய தயார் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பிரபாகர னால் முன்வைக்கப்படும் உறுதிப்பாடான விடயத்தை நாம் ஆராயத் தயார்.

வடக்கில் உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்படும் மக்கள் இருக்கும்போது புலிகள் ஆயுதக் கொள்வனவுக்கு நூறு மில்லியன் டொலர்களை பயன்படுத்த முன்வந்துள்ளனர்.

புலிகள் எந்தவிதமான நிபந்தனைகளுமின்றி பேச்சுக்கு முன்வர வேண்டும். புலிகள் ஜனநாயக வழிக்கு வர இன்னும் வாய்ப்புள்ளது. ஆனால் அவர்கள் அதிகாரப்பரவலாக்கலுக்கு உடன்பட வேண்டும்.

ஏற்கனவே நடைபெற்ற பேச்சுக்களின் போது அன்ரன் பாலசிங்கம் உட்பட புலிகளின் தலைவர்கள் வழங்கிய உத்தரவாதங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. இதன்படி இனிமேல் பிரபாகரன் வழங்கும் நேரடி உத்தரவாதத்தின் பேரிலேயே அரசாங்கம் செயற்படும்.

tamilwin.net

அப்படி எண்டால் என்ன அரசாங்கத்துக்கு காது கேக்க மாட்டுதாமே...???

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை இவை நம்புவினமாம். ஆனால் பிரபாகரன் இவையை நம்ப வேணுமே!

எத்தனை வாக்குறுதி! எத்தனை விசாரணைக்கமிசன்! எத்தனை தீர்வுத்திட்டங்கள்! எண்டு, எத்தனை தடவை ஏமாத்தின சிங்கள அரசை நம்ப மனசு வருமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.