Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் `படகு அகதிகளின்' அவலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் `படகு அகதிகளின்' அவலம்

* முதல்நாள் திருமணம், மறுநாள் மனைவியை கடலில் பலிகொடுத்த இளைஞனின் பரிதாபம்

தலையில் பயணப் பெட்டியுடனும் கையில் பிளாஸ்ரிக் பையுடனும் தமது தாய் நாட்டிலிருந்து மோதிச் சிதறும் அலைகளூடாக கடும் சிரமத்துடன் இலங்கை அகதிகள் இந்தியக் கரைகளை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்குப் பின்னால் அலைகள் மத்தியில் அவர்களை ஏற்றி வந்த மங்கலான சிறிய மீன்பிடிப் படகு நிற்கிறது.

இலங்கையரை சுமந்துவரும் படகுகள் தென்னிந்தியக் கரையோரங்களுக்கு ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு வருபவர்கள் தமது பயணத்திற்கு நகைகளை விற்று பணம் செலுத்தியதுடன் தமது நிலங்களையும் மீன்பிடிப் படகுகளையும் விட்டு விட்டே வருகின்றனர்.

மோதலின் காரணமான பயத்தால் ஜனவரி மாத ஆரம்பத்தில் சிறிது சிறிதாக வரத்தொடங்கிய இவர்கள் இப்போது அதிகளவில் வருகின்றனர். தீவிலிருந்து இந்தியாவின் தென்கிழக்குப் பகுதிக்கு வெளியே தனியே அமைந்திருக்கும் சிறிய தீவுக்கு கடந்த ஞாயிறு, திங்கட்கிழமைகளில் வந்த 785 பேர் உட்பட இந்த ஆண்டில் ஏறத்தாழ 8,000 அகதிகள் வந்துசேர்ந்திருக்கின்றனர்.

29 கிலோமீற்றர் தூரத்தை 3 மணித்தியால பயணத்தின் பின்னர் அரிச்சல் `முனையின்' மணல் பரப்பில் தனது பதினைந்து மாத மகளை கையில் ஏந்தியவாறு கவலையுடனும் வெற்றுப்பாதங்களுடனும் நிற்கும் சின்னத்தம்பி பாக்கியராஜா கூறுகையில்;

நாங்கள் வந்த படகில் 14 பேர் இருந்தோம். அலைகள் மிக உயரமாக இருந்ததினால் நாங்கள் முழுவதும் நனைந்திருந்தோம். பிள்ளைகள் அழுது கொண்டிருந்தார்கள். எங்கள் உறவினர்களையும் அதிகளவான சொத்துகளையும் விட்டு விட்டே வந்திருக்கின்றோம். இலங்கையில் இரு தசாப்தகாலமாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் தாயகத்திலுள்ள ஒவ்வொருவரும் ஒரு பயங்கரமான கதையைக் கொண்டிருக்கின்றனர்.

துப்பாக்கிச்சூடு, ஷெல் தாக்குதல், வன்முறைகள், அச்சுறுத்தல்கள் என நான்கு வருட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் மறுபடியும் ஒரு மூர்க்கமான நிலைமை தோன்றியுள்ளது.

அங்கு ஏதாவது சம்பவம் நடந்தாலோ, ஏதாவது வன்முறைகள் ஆயுதக் குழுக்களால் இடம்பெற்றாலோ தாங்கள் வந்து எனது மனைவியையும் பிள்ளைகளையும் கொலை செய்வோம் என இராணுவம் எங்களிடம் கூறியது. என்னால் எப்படி அந்த ஆபத்தை எதிர்கொள்ள முடியும்? எனக் கூறும் பாக்கியராஜா திருகோணமலையில் வர்ணம் பூசுபவராக தொழில் புரிபவராவார்.

இலங்கையிலிருந்து அகதிகளாக வந்து கொண்டிருக்கும் சிறுபான்மையின தமிழ் மக்களில் அதிகளவானோர் இந்துக்கள். இவர்கள் பாதுகாப்பான புகலிடத்திற்காக இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு உறவினர்களிடம் வருகிறார்கள்.

இலங்கை கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளின் கடற் புலிகளுக்குமிடையில் உண்டான மோதலின் பின் பயம் காரணமாக பல மீனவர்கள் வீட்டில் கூட தொழில் செய்ய முடியாமல் இருக்கின்றனர்.

இலங்கையின் வடமேற்குப் பக்கமான வங்காலை கிராமத்திலிருந்து வந்திருக்கும் 41 வயதான பிரின்ஸா லம்பேர்ட் என்பவர் கூறுகையில்;

ஒரு பயங்கரமான இரவு நேரம் ஆறு அல்லது ஏழு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு திறந்த வெளியில் ஒன்றாக நித்திரையில் இருந்தனர். எங்கள் எல்லோரையும் சுற்றி துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டன. யார் கொல்லப்பட்டிருந்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. நான் கடைசியாக எப்போது அமைதியாக தூங்கினேன் என்பதையே என்னால் நினைவுபடுத்த முடியாது என்கிறார்.

இவர் முதன் முதலில் தனது தாய்நாட்டை விட்டு 1990 இல் கணவர் தேவராஜாவுடன் இந்தியா வந்துள்ளார். பதினான்கு வருடங்களின் பின்னர், போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் கடல்கோள் அனர்த்தம் ஏற்படுவதற்கு முதன் நாள் இவர் நாடு திரும்பியுள்ளார்.

நாங்கள் கடல்கோளால் தப்பிப் பிழைத்த பின் ஒரு வருடத்திற்கு மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால், போரோடு சேர்ந்து துன்பமும் தொடங்கி விட்டது. எனது பிள்ளைகளால் படிக்க முடியாது. எனது கணவர் வேலைக்குப் போக முடியாது. அவரின் வலைகளும் குடில்களும் கடற்கரையில் படையினரால் எரிக்கப்பட்டுவிட்டன என அவர் மேலும் கூறினார்.

ஒவ்வொருவரும் தலா 5,000 ரூபாவிலிருந்து 8,000 ரூபா வரை செலுத்தி நாரிழை படகுகளிலேயே இந்தக் குறுகிய கடலைக் கடக்கிறார்கள். இவர்களில் அதிகமானவர்கள் பாதுகாப்பாக வந்திருந்தாலும் புஸ்பம் மிரன்டா என்பவர் இதற்காக அதிகவிலை கொடுத்துள்ளார். அவர் கூறுகையில்;

எங்கள் படகு பெரிய அலையொன்று தாக்கியதனால் கவிழ்ந்துவிட்டது. எனது கணவரும் படகுக்காரரும் எனது மைத்துனியின் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் அடுத்த அலை அவர்களை கொண்டு சென்றுவிட்டது.

5 வயதும் 18 மாதங்களுமுடைய அக்குழந்தைகளின் பெற்றோரும் மூழ்கி விட்டனர். நாங்கள் ஒரு வாரத்தின் பின்னரே இந்தியாவிலுள்ள அகதிகள் முகாமுக்கு வந்திருக்கிறோம் எனக் கூறினார். மேலும் இவரது 22 வயதான மகன் ரோத்மன் தனது மனைவியை காப்பாற்றுவதற்காக எவ்வளவோ போராடியும் அது பலனளிக்கவில்லை. இந்தியாவிற்கு பயணமாவதற்கு முதல் நாள் தான் இவர்கள் திருமணம் செய்திருக்கிறார்கள். இம் முகாமுக்கு வருவதற்கு முன்னர் அவர் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் எனவும் அவர் தெரிவித்தார்.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.