Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றங்கள்: சர்வதேச விசாரணை கோரும் தீர்மானத்தை ஐ.நாவில் இந்தியா கொண்டு வரவேண்டும்! - திமுக பொதுக்குழுவில் தீர்மானம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
dmk-151213-150.jpg

இலங்கையின் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மீது நம்பகமானதும், சுதந்திரமானதுமான சர்வதேச விசாரணை நடத்தவும் மத்திய அரசு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது. மேலும், விலைவாசி உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம், மீனவர் பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள், திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

  

சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்தும், மத்திய அரசும், மாநில அரசும், இதுவரையிலும் உரிய நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மத்திய அரசு தமிழக அரசோடு தொடர்பு கொண்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் மாநில அரசு இந்த முக்கியப் பிரச்சினையில் காலதாமதம் செய்து வருகிறது. எனவே, நெருக்கடியான இந்தச் சூழ்நிலையில் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இரு நாடுகளின் மீனவர் பிரதிநிதிகளை அழைத்து சமரசப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக வலியுறுத்துகிறது.

இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் முடிந்து முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் மாகாணக் கவுன்சில் அமைந்துள்ளது. இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தின்படி பல அதிகாரங்கள் தமிழர்களுக்கு வழங்கப்படும் என்பது இலங்கையில் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்து வருகிறது. 13வது சட்டத் திருத்தத்தின்படி நில நிர்வாகம், உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காவல் துறை நிர்வாகம் அனைத்தும் ராஜபக்ச அரசின் கையில் உள்ளது. மாகாணக் கவுன்சிலைக் கூட்டுவதும், கலைப்பதும் ராஜபக்ச அரசின் மாகாண ஆளுநரின் கைகளில் உள்ளது. முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் உள்ள அமைச்சரவையின் பரிந்துரைகளை ஏற்பது அல்லது நிராகரிப்பதற்கான அதிகாரம் மாகாண ஆளுநருக்கும் ராஜபக்சக்கும்தான் உள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுவதும் நீர்த்துப் போன அரசியல் அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கேற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய, வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையில் "பொது வாக்கெடுப்பு" நடத்தவும்; தமிழினப் படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மீது நம்பகமானதும், சுதந்திரமானதுமான சர்வதேச விசாரணை நடத்தவும் மத்திய அரசு ஐ-நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிடவும் வலியுறுத்துவதோடு, இடைக்கால நிவாரணமாக முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திடும் வகையில், 13வது சட்டத் திருத்தம் அமைந்திட இலங்கை அரசை வலியுறுத்தி தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றிடவாவது இந்திய அரசு முன்வர வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது. என்பது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=99142&category=IndianNews&language=tamil

1383556_673792739312342_1723694723_n.jpg

//மக்களே... கொரளிவித்த காட்டுறானுங்க நம்பிடாதிங்க.......//

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.