Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலைக்களங்கள் திரையிடல் - அனுபவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதம் 12ஆம் திகதி மனிதஉரிமை நாட்கள் என்ற தலைப்பில் சுவிசில் Schaffhausen மாநிலத்தில் கொலைக்களங்கள் (No Firezone - Killing fields ) திரையிடப்பட்டது. ஏற்கனவே மூன்று முறை இதனை பார்த்துவிட்டேன். ஆனாலும் கலந்துகொள்வது என உறுதியாக இருந்தேன். காரணம், Mcrae Cullum அவர்களின் வருகை!

 

இன்னொரு காரணம் அங்கே வரப்போகின்ற சிங்களவர்களின் பரப்புரை. தமிழர்கள் அதிகமாக வந்தாலும் எதிர்த்து கேள்வியோ குரல்களோ எழுப்புவதில்லை (மொழிப்பிரச்சனையாகவும் இருக்கலாம்). ஏற்கனவே இரண்டு முறை மாற்றுக்கருத்தாளர்கள் என்ற பெயரில் இவர்கள் பரப்பிய விஷத்தை ஓரிரு தமிழர்கள் கருத்துக்களால் முறியடித்திருந்தனர். 

 

இம்முறையும் இது நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்தேன். எதிரிகள் பேசிவிடக்கூடாது என்பது அல்ல என் விருப்பம். அவர்களின் கருத்திற்கு பதிலடி அந்த இடத்திலயே கொடுக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருந்தது. 

 

நிகழ்ச்சிகள் தொடங்க 30 நிமிடங்கள் முன்னரே நான் அங்கே சென்றுவிட்டேன். சுற்றிவர புதுமுகங்களாகவே இருந்தன. என்னைப்போல் தனிமையில் நின்ற ஒரு இளைஞனிடம் கதை கொடுத்தேன்.  இங்கும் மாற்றுக்கருத்தாளர்கள் வருவார்களா என கேட்டேன். வந்தால் சாத்தி எடுத்துவிடுவோம் என்றார்.  :icon_idea:

 

அங்கு தமிழர்கள் அளவிற்கு சுவிஸ் நாட்டவர்களும் வந்திருந்தது மகிழ்ச்சியான விடயம். 

 

நான் தமிழர் என்று நினைத்த ஒருவர் என்னிடம் வந்து உங்களை எங்கயோ பார்த்த மாதிரி உள்ளது என்று ஜேர்மன் மொழியில் கேட்டார். நானும் ஏதாவது பொது நிகழ்ச்சிகளில் கண்டிருப்பீர்கள் என பதிலளித்தேன். 

 

திரையிடல் நடந்த பின்னர் ஒரு கலந்துரையாடல்  இடம்பெற்றது. 

 

நான் தமிழர் என கணித்திருந்த அந்த நபர் முதலாவதாக கேள்வி கேட்க அனுமதி கேட்டார். நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு தமிழர். கேள்வி கேட்க முன்வந்தவரிடம் உங்கள் இருக்கையில் அமர்ந்து கேளுங்கள் என கேட்டுக்கொண்டு ஒலிபெருக்கியை கொடுத்தார். 

 

நான் தமிழர் என நினைத்தவர் பேச தொடங்கினார். 

 

"நான் ஒரு சிங்களவன். என்னை இருக்கையில் இருந்து பேச வேண்டும் என்று இவர்கள் எச்சரிக்கிறார்கள். நாங்கள் சுவிஸ் நாட்டில் வசிக்கின்றோம். எனக்கு முழு சுதந்திரமும் உள்ளது. இங்கே சிறிலங்காவை பிரிக்கும் துண்டுப்பிரசுரங்கள் அனைவருக்கும் கொடுத்திருந்தார்கள். தேசத்தை பிரித்தாள நினைப்பவர்களிற்கு இங்கு என்ன வேலை."

 

தொகுப்பாளர் குறுக்கிட்டு உங்களிற்கு இந்த ஆவணப்படத்தயாரிப்பாளரிடம் கேள்விகள் இருந்தால் மட்டும் கேளுங்கள் என்றார். 

 

ஆனால் அந்த சிங்களவர் விடுவதாக இல்லை. தொகுப்பாளர் ஒலிபெருக்கியை கட்டாயமாக அவரிடம் இருந்து பறித்து எடுத்தார். பின்னர் அவரின் கேள்விக்கு Cullum அவர்கள் அளித்த பதிலின் சுருக்கம் இதுதான்.

 

"நான் விடுதலைப்புலிகளை இங்கே (ஆவணப்படத்தில்) குற்றமற்றவர்கள் என காட்டவில்லை. ஆனாலும் எனனையும் சிங்களவர்கள் வெள்ளைப்புலி என்கிறார்கள். உங்களுடைய இந்த நடிவடிக்கை எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. நீங்கள் ஒரு சராசரி சிங்களவரின் மனநிலையை பிரதிபலிக்கின்றீர்கள்". 

 

ஆனாலும் அந்த சிங்களவர் ஒலிபெருக்கி இல்லாமலே கத்திக்கொண்டிருந்தார். இதனால் அங்கு வந்திருந்த வெளிநாட்டவர்களில் அரைவாசிக்கு மேல் அரங்கை விட்டு வெளியேறினர் (இதை தான் அந்த சிங்களவர் எதிர்பார்த்தாரோ தெரியவில்லை).  இருந்தாலும் அந்த சிங்களவருடன் வந்த ஏனைய இரு அல்லக்கைகளும் (அவர்களும் சிங்களவர்களாக தான் இருக்க வேண்டும்) அவரை அமைதியாக இருக்கும் படி கேட்டுக்கொண்டனர். 

அந்த சிங்களவரிற்கு யாரும் காது கொடுத்து கேட்பதாக தெரியவில்லை. ஒரு கட்டத்தில் கடுப்பானவர் தான் வெளியேறுகின்றேன் என சொல்லிவிட்டு வாசல் வரை வந்து பின்னர் தனது இருக்கைக்கு வந்து இல்லை தான் இங்கையே இருக்க விரும்புவதாக சொல்ல அரங்கம் முழுவதும் சிரிப்பொலி. அசிங்கப்பட்டான் சிங்களவன் :icon_idea:

 

இவரின் கேள்விகளிற்கு பதில் கூற நான் விரும்பினாலும் இறுதியில் அவரே தன்னை ஒரு காமெடியனாக மாற்றியதால் அவரை இனி சீரியசாக எடுக்காமல் விடுவது நல்லது என்று விட்டேன். 

 

அடுத்ததாக நான் கேள்வி கேட்க முன் வந்தேன். இந்த கேள்வியை நான் மூன்றாவது தடவையாக கேட்கின்றேன். Cullum அவர்கள் ஏற்கனவே பதில் தந்துவிட்டார். எனவே நிகழ்ச்சி நடத்துபவர்களிற்கு (அகதிகள் அமைப்பு) எனது கேள்வி. வழமை போல போர்க்குற்றம் மனிதஉரிமை மீறல் என்பதை மட்டும் பேசுகிறீர்களே இனஅழிப்பு பற்றி உங்களை பேசவிடாமல் எது தடுக்கின்றது என்றேன். அதற்கு சான்றாக சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் பார்த்தால் இது ஒரு இனஅழிப்பு என்றேன். 

 

அதற்கு நிகழ்ச்சி நடத்தியவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அவர்கள் Cullum அவரிடம் ஒலிபெருக்கியை கொடுத்து அவரை பதிலளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். 

 

நான் எதிர்பார்த்ததை விட Cullumஅவர்கள் இம்முறை ஜேர்மன் நாட்டில் நடந்த (People Tribunal) தீர்ப்பை மையமாக கொண்டு இது இனஅழிப்பு என்பதை ஒத்துக்கொண்டார். இதுவரை இதே கேள்வியை இவரிடம் இரு முறை கேட்டுள்ளேன் (ஒரு முறை எனது நண்பர் ஒருவரால் கேட்கப்பட்டது). அப்பொழுதெல்லாம் இது இனஅழிப்பா இல்லையா என்பதை நான் முடிவு செய்யமுடியாது என பதிலளித்தார். ஆனால் இம்முறை எமக்கு சாதகமாக ஒரு பதில் கிடைத்தது மகிழ்ச்சி. 

 

 இதை நான் எழுதுவதற்கு ஒரே ஒரு காரணம் தான். சிங்களவர்களை பேச விடுங்கள். அதன் பின்னர் அவர்களிற்கு நாம் பதிலடி கொடுக்கலாம். நியாயம் என்பது எங்களின் பக்கம் உள்ளது. சிங்களவர்களும் சரி மாற்றுக்கருத்தாளர்களும் சரி திரும்பதிரும்ப புலிகளை குற்றம் சொல்வதில் மட்டுமே அக்கறையாக இருப்பார்கள் (இதை விட்டால் பேச அவர்களிடம் எதுவும் இல்லை என்றே நினைக்கின்றேன்). இதனை மிக இலகுவாக முறியடிக்கலாம். அதன் மூலம் வெளிநாட்டவர்களிற்கு நாம் எமது நியாயாத்தையும் சிங்களவர்களின் தவறான கருத்தையும் விளங்கபடுத்த முடியும். சில இடங்களில் இங்கே நடந்ததுபோல் சிங்களவர்கள் தங்களின் வாயாலும் கெடுவார்கள். எது எப்படியாகினும் வன்முறையில் மட்டும் இறங்கிவிடாதீர்கள். அவர்கள் எம்மை அதற்கு தூண்டுவார்கள் என்பது நிச்சயம். அதன் மூலம் எம்மை வன்முறையாளர்களாக காட்டவே விரும்புவார்கள். 

 

இப்படியான அனுபவங்களை நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்கள். ஏனையவர்களிற்கும் உதிவியாக இருக்கும்.

 

Edited by செங்கொடி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி செங்கொடி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.