Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னாபிரிக்கா முறையிலான நல்லிணக்க ஆணைக்குழு : இலங்கையை காப்பாற்றும் ஓர் பொறிமுறை - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
TGTE-seithy-20131218.jpg

சிறிலங்காவில் பல மில்லியன் பெறுமதியான முதலீடுகளைச் செய்துவரும் நாடுகளில் ஒன்றாக தென்னாபிரிக்கா உள்ள நிலையில், தென்னாபிரிக்கா முறையிலான உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவினை சிறிலங்காவில் அமைப்பதற்கான தென்னாபிரிக்க அரசாங்கத்தின் பரிந்துரையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிராகரித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றில் இதனை நிராகரித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதி வழங்களிலிருந்து சிறிலங்காவினைக் காப்பாற்ற அல்லது நீதியை தாமதப்படுத்த சிறிலங்கா அரசுக்கு உதவும் பொறிமுறையாகலாம் என அர்தீர்மானத்தில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

இதன் காரணமாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் இனவழிப்பை முடிவுகட்டி நிலையான சமாதான அரசியல் தீர்வொன்றை தேடுவதற்கான ஒர் ஒழுங்கமைப்பை ஐ.நா வுடனும், மனித உரிமைகள் சபையுடனும் நெருக்கமாக செயல்படும் படி சர்வதேச சமூகத்திற்கு அழைப்புவிடப்படுகிறது.

உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவினை தென்ஆபிரிக்க அரசு சிறிலங்காவுக்கு விதந்துரைப்பதை கை கவிடுமாறு தென்னாபிரிக்க அரசுக்கு கோரிக்கைவிடப்படுகிறது.

உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் சமூக அரசியல் கட்டமைப்புக்களை இவ்வாறான தீர்மானங்களை நிறைவேற்றும்படி கோரப்படுகிறது என அத்தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க பாணியிலான உண்மை நல்லிணக்க ஆணைக்குழு குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருவதோடு, தென்னாபிரிக்கா அரச அதிகாரிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக, செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானத்தின் முழு விபரம் :

பெருந்தலைவர் நெல்சன் மண்டெலாவுக்கு சிரம் தாழ்த்தி மரியாதை வணக்கம் செலுத்துவதோடு , சுதந்திரம், தாங்கிக்கொள்ளல் போன்ற பண்புகளுக்கான அவரது அர்ப்பணத்தையும் மதிக்கிறது.

இலங்கைத்தீவின் தமிழர் தாயகப் பகுதிகளில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு தொடர்ந்து நடந்தேறி வருவதனால் மனிதநேய, அரசியல் நிலைப்பாடுகளுக்கான வெளியற்ற நிலைகுறித்து ஆழ்ந்த அக்கறை கொள்ளப்படுகின்றது.

2009 ஆண்டில் முடிவடைந்த முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு பின்னர் இன்னமும் ஐ.நா. அரசு மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களை சிறிலங்கா நிறைவேற்றத் தவறியிருக்கிறது.

சிங்களர்களால் மட்டும் ஆக்கப்பட்டிருக்கும் சிறிலங்கா இராணுவத்தால் 100,000 க்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமை கவனத்தில் கொள்ளப்ப்படுகிறது.

இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனத்தின் மீது தொடரும் சிறிலங்காவினது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் பற்றியும் சிந்தனைக் கெடுக்கப்படுகிறது.

உண்மைக்கும் நீதிக்குமான அவசிய தேவை மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. பொறுப்புக்கூறலானது நட்புபூர்வ தொடர்பாடல்களுக்கு அவசியம் என்பது வலுவாக நம்பப்படுகிறது. இறைமைச் சமநிலையில்த்தான் தமிழ், சிங்கள மக்களுக்கிடயிலான நட்புபூர்வ தொடர்பாடல் சாத்தியமாகலாம் என்பது நம்பப்படுகிறது.

ஐ.நா நிபுணர் அறிக்கையிலும், ஐ.நாவின் உள்ளக மீளாய்வு அறிக்கையிலும் நுணுக்கமாக ஆராய்ந்து வெளிக்காட்டியிருப்பது போல் அரசியல், நீதிக்கான சூழல் இலங்கைத்தீவில் தமிழருக்கு இல்லாமை குறித்து மீளவும் வலியுறுத்தப்படுகிறது. சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கான தேவை வலியுறுத்தப்படுகிறது.

தமிழ் மக்களும் தமது பங்கை அளிக்கத் தக்கதாக சுதந்திர தமிழீழம் நிர்மானிக்கப்பட்ட பின்னர், இரண்டு நட்பு நாடுகளாக முன்னேறி, செழித்து, சமாதனம், பிராந்திய நிலைத்தன்மை போன்றவற்றை ஏற்படுத்த , உண்மை நல்லிணக்துக்குமான ஆணைக்குழுவின் நிர்மானம் நிச்சயம் செய்யப்படுகிறது.

சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் உகண்டா மீதான தீர்ப்பின் போது காட்டப்பட்ட சட்டப்படியான பொறுப்புக்கூறல் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

நெல்சன் மண்டெலாவாலும், ஆபிரிக்க தேசிய கொங்கிரசாலும் எடுத்துக்காட்டப்பட்ட , துன்பப்படுத்தப்பட்ட உலக மக்களுக்கான ஒற்றுமை சிந்தையில் எடுக்கப்படுகிறது.

உண்மையும் இணக்கப்பாடும் ஆணைக்குழு நீதி வழங்களிலிருந்து சிறிலங்காவினைக் காப்பாற்ற அல்லது நீதியை தாமதப்படுத்த சிறிலங்கா அரசுக்கு உதவும் பொறிமுறையாகலாம் என்பது அஞ்சப்படுகிறது. அதன் காரணமாக நாடுகடந்த தமிழீழ அரசு தீர்மானித்துக் கொள்வதாவது:

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் இனவழிப்பை முடிவுகட்டி சமாதன அரசியல் தீர்வொன்றை தேடுவதற்காக ஒரு ஒழுங்கமைப்பை ஐ.நா வுடனும், மனித உரிமைகள் சபையுடனும் நெருக்கமாக செயல்படும்படி சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடப்படுகிறது.

உண்மையும், இணக்கப்பாடும் ஆணைக்குழுவினை தென்ஆபிரிக்க அரசு சிறிலங்காவுக்கு விதந்துரைப்பதை கை கவிடுமாறு தென்னாபிரிக்க அரசுக்கு கோரிக்கை விடப்படுகிறது. உள்நாட்டு, சர்வதேச தமிழ் அரசியல் கட்சிகளை, கூட்டமைப்புகளை, மற்றும் அமைப்புக்களை இவ்வாறான தீர்மானங்களை நிறை வேற்றும்படி கோரப்படுகிறது. இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=99370&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் கிறிஸ் நோனிஸ் தங்களது அணுகுமுறையும் தென்னாபிரிக்க அணுகுமுறையை ஒத்தது என்றார். இதைவிட வேறு போக்கிரித்தனம் எதுவும் கிடையாது.

தென்னாபிரிக்காவில் சிறுபான்மை வெள்ளையர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு பெரும்பான்மை கறுப்பர்களை அடக்கினார்கள். இந்த நிலை மாறி பெரும்பான்மை கறுப்பினம் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் சிறுபான்மை வெள்ளையர்களை தண்டிக்காது நல்லிணக்க ரீதியிலான நீதியை வழங்கியது. அதாவது தண்டனை மூலமான நீதியை (punitive justice) வழங்காமல் நல்லிணக்கம் மூலமான நீதியை (reconciliatory justice) வழங்கியது. இது அவர்களது பெருந்தன்மையைக் காட்டியது.

இலங்கைக்கு இது பொருந்துமா? அங்கு அதிகாரத்தை வைத்துக்கொண்டுள்ள பெரும்பான்மை சிறுபான்மை இனத்தை அழித்தது. அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொண்டது. பிறகு அவர்களே நல்லிணக்கம் மூலமான நீதியையும் வழங்குவார்களாம். அதாவது தவறு செய்தவனே பாதிக்கப்பட்டவருக்கான நீதியையும் முடிவு செய்வாராம்.

அடுத்தமுறை யாராவது கூட்டங்களில் பங்குபற்றும்போது இதை யாராவது சொல்ல வந்தார்கள் என்றால் எடுத்துச் சொல்லுங்கள் (செங்கொடி போன்றவர்கள்).

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.